என் மலர்
நீங்கள் தேடியது "police men death"
திருப்பத்தூர்:
ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் மசூதி பின்புற பகுதியை சேர்ந்தவர் சுக்காராம் மகன் அசோக் குமார் (வயது29). சென்னை தண்டையார்பேட்டையில் ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.
நேற்றிரவு பைக்கில் ஜோலார்பேட்டையில் இருந்து ஆண்டியப்பனூரில் உள்ள மாமியார் வீட்டிற்கு அசோக்குமார் சென்று கொண்டிருந்தார். பக்கிரிதக்கா மசூதி அருகே சென்றபோது, எதிரே வந்த கார் மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அசோக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். ஜோலார்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரான வேலூர் சலவன்பேட்டை அம்மனாங்குட்டையை சேர்ந்த குமரேசன் மகன் வினோத் (32) என்பவர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சீனியப்பா நகரைச் சேர்ந்தவர் ஜீவா (வயது 28). இவர், நெடுஞ்சாலை வாகன ரோந்து காவலராக பணிபுரிந்தார்.
நேற்று இரவு பணி முடிந்து வீட்டுக்கு சென்ற ஜீவா, இன்று காலை வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். வீட்டு முன்பு கிடந்த நீளமான இரும்பு கம்பியை அப்புறப் படுத்துவதற்காக எடுத்தார்.
அப்போது வீட்டின் அருகில் உள்ள உயர் அழுத்த மின் கம்பி மீது எதிர்பாராத விதமாக இரும்பு கம்பி உரசியது. இரும்புக் கம்பியை பிடித்துக் கொண்டிருந்த ஜீவா மீது கண் இமைக்கும் நேரத்தில் மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இதுகுறித்து மானாமதுரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜீவாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பலியான ஜீவாவுக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. இவரது மனைவி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். #Tamilnews
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள பாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் அஜேஷ் (50). இவர் கோட்டயம் கிழக்கு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு 9 மணியளவில் இவர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அந்த வழியாக ஆடம்பர மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வேகமாக வந்தார்.
அதனை நிறுத்துமாறு போலீஸ்காரர் அஜேஷ் சைகை காட்டினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அஜேஷ் மீது மோதியது. இதில் அவர் கீழே விழுந்தார். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபர் தப்பி ஓடி விட்டார். பலத்த காயம் அடைந்த போலீஸ்காரர் அஜேஷை கோட்டயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கோட்டயம் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபரை தேடி வருகிறார்கள்.






