search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேலூர் அருகே விபத்தில் விவசாயி பலி
    X

    மேலூர் அருகே விபத்தில் விவசாயி பலி

    மேலூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மேலூர்:

    மேலூர் அருகே உள்ள கம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் இளையராஜா (வயது 25), விவசாயி. இவர் நேற்று மாலை பெட்ரோல் போடுவதற்காக தனது மொபட்டில் கருங்காலக்குடிக்கு புறப்பட்டார்.

    கருங்காலக்குடியில் உள்ள பெட்ரோல் பங்க் 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட இளையராஜா தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜேசு, தனிப்பிரிவு ஏட்டு பரசுராமன் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×