என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெருந்துறை அருகே மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தந்தை விபத்தில் பலி
    X

    பெருந்துறை அருகே மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தந்தை விபத்தில் பலி

    பெருந்துறை அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் மகனுடன் சென்ற தந்தை பரிதாபமாக உயிரிழந்தார்.
    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள பவானி ரோடு, டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்த சின்னச்சாமி (வயது 50). விவசாயியான இவருக்கு திருமணமாகி, சித்ரா என்ற மனைவியும், சிவப்பிரகாஷ்(23)என்ற மகன் மற்றும் தர்ஷினி(21) என்ற மகள் ஆகியோர் உள்ளனர்.

    சின்னச்சாமி பெருந்துறைக்கு பைக்கில் வந்துள்ளார். பின்னர் தனது மகன் சிவப்பிரகாஷை பெருந்துறையில் இருந்து அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றார்கள்.

    இவர்கள் பெருந்துறை, அண்ணாசிலை பகுதியில் வந்த போது, இவர்களுக்கு பின்னால் வந்த வேன் ஒன்று பைக்கின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சின்னச்சாமி தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட நிலையில் அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சின்னச்சாமி மீண்டும் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். சிவப்பிரகாஷ் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

    இந்த சம்பவம் தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×