search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mettupalayam"

    • மதுகுடித்து விட்டு குடிபோதையில் 2 பேர் பஸ்சில் ஏறினர்.
    • கண்டக்டரை சக பயணிகள் கண்டித்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு நேற்று மாலை 3.45 மணிக்கு அரசு பஸ் சுமார் 56 பயணிகளுடன் சென்றது. பஸ் அன்னூர் சாலையில் சென்ற போது புதுமார்க்கெட் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுகுடித்து விட்டு குடிபோதையில் 2 பேர் பஸ்சில் ஏறினர்.

    கண்டக்டரிடம் பூபதியிடம் பயண டிக்கெட் வாங்கும் போது இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் கண்டக்டரை தகாத வார்த்தைகளால் அவர்கள் திட்டினர். இதனை கண்டித்த சக பயணிகளையும் அவர்கள் திட்டினர்.

    2 பேரையும் கீழே இறக்கி விடும் படி பயணிகள் கூறினர். ஆத்திரம் அடைந்த 2 பேரும் பஸ்சில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டினர். அவர்கள் கீழே குதித்து விபரீதம் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதால் அவர்களை கண்டக்டர் தடுத்தார்.

    இப்படியே 2 பேரும் தொடர் அட்டூழியத்தில் ஈடுபட்டு வந்தனர். அதற்குள் அன்னூர் பஸ் நிலையம் வந்தது. அங்கு பஸ் நின்றதும் 2 பேரும் இறங்கி அங்கிருந்து நழுவினர்.

    குடிபோதையில் தொல்லை கொடுத்த 2 பேரையும் பஸ்சில் இருந்து இறக்கி விடாதது ஏன் என கேள்வி எழுப்பி கண்ட க்டரை சக பயணிகள் கண்டித்தனர். 

    • மாணவ-மாணவிகள், பணிக்கு செல்வோர் என பல தரப்பினரும் இந்த ரெயிலை பயன்படுத்தி வருகிறார்கள்.
    • கோவை- மேட்டுப்பாளையம் இடையே பயணிகள் ரெயில்வே சேவையை ஞாயிற்றுக்கிழமையும் நீட்டித்து ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் மெமு பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது.

    மேட்டுப்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து கோவைக்கு பள்ளி, கல்லூரிக்கு சென்று திரும்பும் மாணவ-மாணவிகள், பணிக்கு செல்வோர் என பல தரப்பினரும் இந்த ரெயிலை பயன்படுத்தி வருகிறார்கள்.

    பொதுமக்களுக்கு மிகவும் பயன் அளிக்கும் இந்த ரெயிலை ஞாயிற்றுக்கி ழமையும் இயக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து மத்திய இணை மந்திரி எல்.முருகனிடம் மனு அளிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவுக்கு, எல்.முருகன் கடிதம் எழுதியதோடு அவரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். இதையடுத்து மத்திய ரெயில்வே மந்திரி உத்தரவின் பேரில் கோவை- மேட்டுப்பாளையம் இடையே பயணிகள் ரெயில்வே சேவையை ஞாயிற்றுக்கிழமையும் நீட்டித்து ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    வருகிற 11-ந் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமையும் இனி மெமு ரெயில்கள் கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு இயக்கப்பட உள்ளது. இதற்கான தொடக்க விழா நேற்று மாலை மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் நடந்தது.

    நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல்.முருகன் பங்கேற்று மெமு ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    மேட்டுப்பாளையம்- கோவை இடையிலான ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்படுவதால் வியாபாரிகள், மாணவர்கள் ஊட்டியில் இருந்து கோவை செல்லும் சுற்றுலாபயணிகள் பயன்பெறுவார்கள்.

    இதன் மூலம் ரெயில் பயணிகள் சங்கத்தினர், வியாபாரிகளின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு உள்ளது. மத்திய ரெயில்வே மந்திரி தமிழகத்துக்கு பல திட்டங்களை வழங்க தயாராக இருக்கிறார். பிரதமர் மோடி ரெயில்வே துறையை உலக தரத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார். ரெயில் நிலையங்கள், விமான நிலையங்கள் போல நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. ரெயில்வே கழிப்பறைகள் பயோ டாய்லெட்டுகளாக மாற்றப்பட்டு உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேட்டுப்பாளையம் - கோவை இடையிலான ரெயில் பயண கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.30 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது குறித்து எல்.முருகனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து அவர் கூறிய தாவது:-

    மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு பஸ்சில் வந்து சேர இரண்டரை மணி நேரம் ஆகிறது. அதற்கு ரூ.27 வரை கட்டணமாக பெறுகி ன்றனர். போக்குவரத்து நெருக்கடிக்கு மத்தியில் அந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும். ஆனால் ரெயிலில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு 40 நிமிடத்தில் சென்று விடலாம். கொேரானா காலத்தில் பயணிகள் ரெயில்கள் சிறப்பு ரெயில்களாக மாற்றப்பட்டு உள்ளன. அதை இங்கு மட்டும் செயல்படுத்த வில்லை. நாடு முழுவதும் செயல்படுத்தி உள்ளனர்.

    அது மத்திய அரசின் கொள்கை முடிவு. கோவையில் இருந்து திருச்செந்தூருக்கு ரெயிலை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. அதற்கான சாத்தியக்கூறு இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

    • 2 வட மாநில வாலிபர்கள் மூதாட்டி அணிந்திருந்த 1½ பவுன் தங்க நகையை பறித்தனர்.
    • இது தொடர்பாக வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கோவை

    கோவை சூலூர் அருகே உள்ள கிராம பகுதியை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவருக்கு பூரணம்பாளையத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்தநிலையில் காதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து 2 பேரும் பிரிந்தனர்.இளம்பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதுவும் காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்தனர். பின்னர் காதலர்கள்கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இளம்பெண்ணுக்கு மீண்டும் முன்னாள் காதலனுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.இந்த கள்ளகாதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது.அவர் தனது மனைவியை கண்டித்தார். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் தனது கள்ளகாதலனுடன் ஓட்டம் பிடித்தார். வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய இளம்பெண்ணின் கணவர் தனது மனைவி வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவரை அக்கம் பக்கத்தில் தேடினார். அப்போது அவர் வாலிபருடன் ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது.

    இது குறித்து இளம்பெண்ணின் பெற்றோர் கணவரை தவிக்க விட்டு கள்ளகாதலனுடன் ஓட்டம் பிடித்த தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.  

    • டாஸ்மாக் ஊழியர் மீதான கொலை வெறி தாக்குதலை கண்டிப்பது என என பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
    • டாஸ்மாக் விற்பனை பணத்தை வங்கிகளே நேரடியாக பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேட்டுப்பாளையம்,

    நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் விஜய் ஆனந்த் (வயது 46). இவர் சிறுமுகைலிருந்து அன்னூர் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி விஜய்ஆனந்த் டாஸ்மாக் கடையில் வசூலான ரூ.10 லட்சம் பணத்தை மேட்டுப்பாளையத்தில் உள்ள வங்கியில் செலுத்துவதற்காக சென்றார். அப்போது இவரை பின்தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் பட்டா கத்தியை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளை அடிக்க முயற்சி செய்தனர்.

    இந்த சம்பவத்தை கண்டித்து கோவை மாவட்ட டாஸ்மாக் கூட்டுக்குழு சார்பில் இன்று சிறுமுகை தியேட்டர் மேடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவை மாவட்ட டாஸ்மாக் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஜான் தலைமை தாங்கினார். ஏ.ஐ.சி.சி.டி.யு மாநில துணைத்தலைவர் மதியழகன் முன்னிலை வகித்தார். டாஸ்மாக் விற்பனை பணத்தை வங்கிகளே நேரடியாக பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர் மீதான கொலை வெறி தாக்குதலை கண்டிப்பது என என பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் காரமடை, சிறுமுகை, மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியர்கள் கோவை மாவட்ட தலைவர் பத்மநாபன், சுதாகர், வாசுதேவன், தினேஷ், மூர்த்தி, சரவணன், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். 

    • வண்டியில் எடுத்து செல்லும் போது கீழே விழுகின்றன.
    • உரிமையாளர்களிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம்- ஊட்டி சாலையில் நெல்லித்துறை ரோடு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகள் செயல்பட்டு வருகிறது.

    இந்த மண்டிகளுக்கு கர்நாடகம், குஜராத், கோலார், நீலகிரி, கர்நாடக மாநிலம் ஹாசன் ஆகிய பகுதியில் இருந்து தினமும் 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் உருளைக்கிழங்கு வருகிறது. இந்தக் கிழங்குகளை தரம் பிரித்து மொத்தமாகவும் சில்லரையாகவும் தமிழ்நாடு, கேரளா ஆகிய இடங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தரம் பிரிக்கும் போது ஏற்படுகின்ற கழிவுகளை மண்டிகளில் கொட்டி வைத்து அதனை தினமும் ஊட்டி சாலையில் இருந்து சிறுமுகை செல்லும் சாலையில் உள்ள நேஷனல் பள்ளியின் பின்புறம் உள்ள ஒரு தோட்டத்தில் கொட்டி வருகின்றனர். அப்படி எடுத்துச் செல்லு ம்போது கழிவுகள் செல்லும் வழிகளில் எல்லாம் கொட்டுகின்றன. இதனால் கழிவுகளில் ஈ மொய்ப்பதுடன், துர்நாற்றமும் வீசி வருகிறது.

    இதனால் அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.இதன் காரணமாக நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது.

    இதுகுறித்து கிழங்கு மண்டி உரிமையா ளர்களிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே மாவட்ட நிர்வாகமும், மேட்டுப்பாளையம் தாசில்தார், நகராட்சி, மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் பவானி ஆறு செல்வதால் இப்பகுதியில் அதிகளவில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • விவசாயத்தின் மீது கொண்டுள்ள ஆர்வத்தால் தான் செய்து வந்த பொறியியல் பணியை பாதியில் விட்டுவிட்டு தனக்கு சொந்தமான விளை நிலத்தில் விவசாய பணியில் ஈடுபட்டுள்ளார்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் பெரும்பாலும் விவசா யத்திற்கு முக்கியத்துவம் உள்ள பகுதியாக உள்ளது.

    மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் பவானி ஆறு செல்வதால் இப்பகுதியில் அதிகளவில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதன்படி வாழை, கத்தரிக்காய், முள்ளங்கி, சுரைக்காய், தக்காளி, வெங்காயம், புடலைங்காய், கொத்தவரங்காய், அவரை, வெண்டை உள்ளிட்ட பல்வேறு நாட்டு காய்கறிகள் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தற்போது வனவிலங்கு தொல்லையாலும், விவசாய இடுபொருட்களின் விலை உயர்வாலும் விவசாய தொழிலை பலர் விட்டு விட்டு மாற்று தொழிலை செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு தேவையான ஆட்கள் கிடைக்காமல் விவசாயம் பல இடங்களில் கேள்விக்குறியாக மாறி வருகிறது.

    இவ்வாறான சூழ்நிலையில் மேட்டுப்பாளையம் அருகே காரமடையை சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஒருவர் டிரோன் எந்திரம் மூலம் மருந்து தெளிக்கும் எந்திரத்தை பயன்படுத்தி வருகிறார்.

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஆசிரியர் காலனியை சேர்ந்த வாசுதேவன் மகன் தேவ்சந்த் (20). பொறியியல் பட்டதாரி. விவசாயத்தின் மீது கொண்டுள்ள ஆர்வத்தால் தான் செய்து வந்த பொறியியல் பணியை பாதியில் விட்டுவிட்டு தனக்கு சொந்தமான விளை நிலத்தில் விவசாய பணியில் ஈடுபட்டுள்ளார்.

    சிக்கரசம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பாளப்பட்டி பகுதியில் இவருக்கு சொந்தமாக விளை நிலம் உள்ளது. அங்கு பல்வேறு பயிர்களை பயிரிட்டு பராமரித்து வருகிறார்.

    விவசாய பணிக்கு ஆட்கள் பற்றாக்குறையாக இருந்ததால் நவீன முறையில் செயல்படுத்தப்பட்டு வந்த டிரோன் எந்திரம் மூலம் விளை நிலங்களுக்கு மருந்து தெளிக்கும் எந்திரத்தை பயன்படுத்தி வருகிறார். இவர் இவரது தோட்டத்தில் முதன்முறையாக இது போன்று மருந்து தெளித்து வருவதை பார்த்த மற்ற விவசாயிகள் தங்களது விளைநிலங்களுக்கும் இதனை பயன்படுத்தி தருமாறு இவரிடம் கேட்டுள்ளனர்.

    இதையடுத்து அவர் ஒரு ஏக்கருக்கு ரூ.700 வீதம் ஊதியம் தொகை பெற்றுக் கொண்டு விளைநிலங்களுக்கு மருந்து தெளித்து வருகிறார்.

    இதன் மூலம் பயிர்களுக்கு தெளிக்கப்படும் மருந்துகளின் நச்சுத்தன்மை குறைவாக இருக்கிறது. இது மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகளுடைய மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பொறியியல் பட்டதாரி தேவ் சந்த் கூறியதாவது:-

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை வட்டார பகுதியில் விவசாய பயிர்களுக்கு தேவையான பூச்சிக்கொல்லி மருந்து இலை வழி உரம் ட்ரோன் மூலம் தெளிக்கப்படுகிறது. ட்ரோன் எந்திரம் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து உரம் ஆகியவை தெளிப்பதால் ஒரு ஏக்கருக்கு 10 லிட்டர் தண்ணீர் போதுமானது. 50 சதவீதம் வரை உரம் மருந்து செலவில் சேமிப்பாகிறது. ஒரு ஏக்கருக்கு 10 முதல் 15 நிமிடங்களுக்குள் மருந்து தெளிக்கலாம். ஆட்கள் கூலி சேமிப்பாகிறது . ஒரே சீரான தெளிப்பால் பயிர்கள் நன்றாக வளர்ந்து நல்ல மகசூல் கிடைக்கிறது. நவீன ட்ரோன் மூலம் மருந்துகள் தெளிக்க விவசாயிகள் என்னை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அச்சம் தவிர் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மாணவ -மாணவிகளுக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விளக்கிப் பேசினார்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை ரோட்டரி சங்கம் மற்றும் எஸ்.வி.ஜி.வி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகியவை இணைந்து சர்வதேச பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு அச்சம் தவிர் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் டாக்டர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். காரமடை ரோட்டரி சங்கத் தலைவர் மகேஷ், செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் சசிகலா வரவேற்றார்‌. நிகழ்ச்சியில் லெட்ஸ் தேங்க்ஸ் பவுண்டேஷன் விழிப்புணர்வு திட்ட ஒருங்கிணைப்பாளர் உமா மகேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அச்சம் தவிர் என்ற தலைப்பில் மாணவ -மாணவிகளுக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விளக்கிப் பேசினார்.

    நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் ராஜேந்திரன் மற்றும் பள்ளி ஆசிரியைகள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாக அதிகாரி மற்றும் ரோட்டரி சங்க உதவி ஆளுநர் சிவசதீஷ்குமார் நன்றி கூறினார்.

    • 70 ஆண்டுகளுக்கு மேலாக மாணவர்கள் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தான் கல்வி பயின்று வருகின்றனர்.
    • 30-க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் சென்று கல்வி பயில்கிறார்கள்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் இலுப்பநத்தம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் எஸ்.புங்கம்பாளையம் பகுதியில் அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகின்றன.

    வெங்கட்ராமபுரம், அண்ணா நகர், அம்மன் புதூர், காரனூர், இலுப்பநத்தம், பழைய சாலை, இடுகம்பாளையம், பகத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ மாணவிகள் சென்று கல்வி பயின்று வருகின்றனர். இலுப்பநத்தம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 6-வது வார்டுக்குட்பட்ட வெங்கட்ராமபுரம், அண்ணா நகர், பழைய சாலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 30-க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் சென்று கல்வி பயில்கிறார்கள்.

    இந்த கிராம பகுதியில் இருந்து கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக மாணவர்கள் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தான் கல்வி பயின்று வருகின்றனர். இப்பகுதி மாணவ, மாணவிகளின் வசதிக்காக பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பெற்றோர்கள், மாணவர்கள், ஊராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுக்கு மனுவாக வழங்கப்பட்டுள்ளது.

    ஆனால் இதுவரை இப்பள்ளி மாணவர்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தரவில்லை. இதனால் மாணவர்கள் தினசரி 4 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்லும் நிலை உருவாகி உள்ளது. எனவே இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து கிராம பகுதிகளில் இருந்து எஸ்.புங்கம்பாளையம் அரசுப் பள்ளிக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து 6-வது வார்டு உறுப்பினர் சத்தியமூர்த்தி கூறியதாவது:-

    எஸ்.புங்கம்பாளையம் பகுதியில் கடந்த 70 ஆண்டுகளாக பள்ளி செயல்பட்டு வருகிறது. எனது வார்டுக்குட்பட்ட வெங்கட்ராமபுரம், அண்ணா நகர், பழைய சாலை உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

    கடந்த 2002 -ம் ஆண்டு இப்பள்ளியில் 9 மற்றும் 10-ம் வகுப்பு தொடங்கப்பட்டது.

    அதன் பின் 2012 -ம் ஆண்டு 11 மற்றும் 12-ம் வகுப்புகள் தொடங்கப்பட்டது. சுற்றுவட்டார பகுதிகளில் மேல்நிலைப் பள்ளிகளுக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளதால் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இப்பள்ளியில் இப்பகுதி மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வந்தனர். ஆனால் பஸ் வசதி இல்லாததால் தினசரி 4 கிலோமீட்டர் தூரம் நடந்தே செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர், போக்குவரத்து அலுவலகம், மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை மனுக்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு சார்பில் இக்கிராமத்திற்கு பேருந்துகள் வழங்கப்படாமல் உள்ளது. எனவே காலை, மாலை நேரங்களில் பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்று வரும் வகையில் பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சிறுமுகை வழியாக தினசரி புளியம்பட்டி, அன்னூர் பகுதிகளுக்கு எஸ்.புங்கம்பாளையம் பகுதிக்கு 10 ஏ, 16, 24, 10சி, 10இ உள்ளிட்ட பஸ்கள் சென்று வருகின்றன. இதில் ஏதாவது ஒரு பஸ்சை காலை, மாலை நேரங்களில் மாணவர்கள் சென்று வரும் வகையில் மாற்றிவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் பெரும்பாலும் கூலி தொழிலாளர்கள் தான் அதிகளவில் உள்ளனர். மழைக்காலங்களில் குழந்தைகள் மழையில் நனைந்தபடி 4 கிலோமீட்டர் சென்று வருவதால் அவர்களுக்கு நோய்கள் ஏற்பட்டு அவர்கள் விடுமுறை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி வருகின்றன. எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் எங்கள் கிராமத்தின் வழியாக அரசு பஸ்களை இயக்கி மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • கர்நாடகாவை சேர்ந்தவர்கள்.
    • மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    கர்நாடக மாநிலம் ஒயிலாண்ட நல்லி பகுதியை சேர்ந்தவர் ரஹ்மத்துல்லா. இவரது மகன் அன்வர் பாஷா. இவர் சொந்தமாக மினி வேன் வைத்துள்ளார்.

    சம்பவத்தன்று இவரது மினிவேனில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 16 பேர் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். நீலகிரியில் பல்வேறு இடங்களைசுற்றி பார்த்த அவர்கள், நேற்று தங்களது ஊருக்கு புறப்பட்டனர்.

    வாகனத்தை அன்வர் பாஷா ஒட்டினார். மினிவேன் ஊட்டி சாலை 2-வது கொண்டை ஊசி வளைவில் வந்த போது பிரேக் பிடிக்காமல், சாலையில் இருந்த இடது பக்க சுவற்றில் மோதி மினிவேன் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த ஜெகதீஷ் படிகர்(30), மல்லன்ன கவுடா(29), பிரகாஷ்(29), சிவப்பா(41), நாகன்கவுடா(29) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து உடனடியாக மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

    இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் நவநீதகி ருஷ்ணன், சப்-இன்ஸ்பெ க்டர் முருகநாதன் மற்றும் போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைச்சாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் படுகாயம் அடைந்த ஜெகதீஷ்படிகர்(30) மற்றும் மல்லன்ன கவுடா(29) ஆகியோர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். 3 பேர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர்.

    இந்த விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஆண்டு தோறும் வன உயிரின வார விழா, அக்டோபர் முதல் வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • சாலை மார்க்கத்தில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.

    மேட்டுப்பாளையம்

    மேட்டுப்பாளையத்தில் குன்னூர் மலைப்பாதையில் கல்லார் பகுதியில் வனத்துறை மற்றும் வன உயிர் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை, குமரன் கலை அறிவியல் கல்லூரி ஆகியவை சார்பில் வன உயிரின வார விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஆண்டு தோறும் வன உயிரின வார விழா, அக்டோபர் முதல் வாரம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இரு ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று காரணமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறாமல் இருந்தது.

    தற்போது நீண்ட இடைவெளிக்குப்பின் பொதுமக்களுக்கு வனம், வன விலங்குகள் குறித்தும், இயற்கை காப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்தும் வகையில் கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் ஆகியோர் இணைந்து மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

    வனங்களில் வாழும் அனைத்து விலங்குகள் மற்றும் உயிரினங்களும் பாதுகாக்கப்பட வேண்டும், காடுகளில் வறட்சி, உணவுகள் பற்றாக்குறை போன்றவற்றால் வன உயிரினங்கள் குறைந்து வரும் நிலையில் இது இயற்கையின் சமநிலையில் மாற்றத்தினை ஏற்படுத்தும். எனவே காடுகள் மற்றும் வன உயிரினங்களை காப்பாற்ற அனைவரும் முன்வர வேண்டும் என மனித சங்கிலி நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.

    கையில் பதாகைகளுடன் நீண்ட தொலைவிற்கு நின்று சாலை மார்க்கத்தில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. இதில் மாவட்ட வன அலுவலர், வனச்சரக அலுவலர்கள் ஜோசப் பிராங்கிளின், செந்தில்குமார் மற்றும் கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.  

    • தினமும் பல்வேறு பூஜைகளும், சிறப்பு அலங்காரங்களும் நடைபெற்றன.
    • தேர்த்திருவிழாவில் 1000த்திற்கும் ேமற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மேட்டுப்பாளையம் :

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த ஜடையம்பாளையம் அருகே தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி மலையப்ப சுவாமி கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் வருடாந்திர நவராத்திரி பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

    அதனை தொடர்ந்து தினமும் பல்வேறு பூஜைகளும், சிறப்பு அலங்காரங்களும் நடைபெற்றன. பெருமாள் தினமும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்தார். இதனை தொடர்ந்து கருட சேவையும் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியானது நேற்று காலை நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமி திருத்தேரில் கோவில் நடையை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் 1000த்திற்கும் ேமற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அவர்கள் திருத்தேரை வடம்பிடித்து இழுத்து, கோவிந்தா கோவிந்தா கோஷம் முழங்கினர். மலையப்ப சுவாமி பக்தர்கள் புடைசூழ கோவிலை வலம் வந்தார்.

    இதில் கே.ஜி தொழில் நிறுவனங்களின் தலைவர் கே.ஜி.பாலகிருஷ்ணன், ஸ்ரீ கண்ணபிரான் நிறுவன தலைவர் ஸ்ரீஹரிபாலகிருஷ்ணா, கே.ஜி.டெனிம் நிறுவன தலைவர் ஸ்ரீராம்பாலகிருஷ்ணா, சீனிவாசா கார்மென்ட்க்ஸ் நிறுவன தலைவர் பிரனவ், மேட்டுப்பாளையம் ஏ.கே‌.செல்வராஜ் எம்.எல்.ஏ, பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.
    • அங்கன்வாடி கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இலுப்பநத்தம் ஊராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன.

    இந்த ஊராட்சியில் 7-வது வார்டுக்கு உட்பட்ட இலுப்ப நத்தம் கிராமத்தில் அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளி இங்கு 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.

    இப்பள்ளியில் இலுப்பநத்தம், திம்மனூர், வடக்கு தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 14 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

    இவர்களுக்கு ஒரு தலைமை ஆசிரியரும், உதவி ஆசிரியரும் கல்வி கற்று கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காக சமையல் கூடம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்துள்ளது.

    இதனிடையே கடந்த ஓராண்டுக்கு முன்பு இந்த சமையல் கூடம் பழுதடைந்த நிலையில் இருந்ததால் இதனை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து இந்த சமையல் கூடம் இடிக்கப்பட்டது. இடிக்கப்பட்டு ஓராண்டு ஆகியும், இதுவரை புதிய சத்துணவு கூடம் அமைக்க அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு சமைத்துக் கொடுக்க இடம் இல்லாததால் வகுப்பறையின் திண்ணையில் வைத்து சமையல் செய்து வருகின்றனர்.

    சமையலுக்கு உண்டான மளிகை பொருட்கள் கூட வைக்க இடம் இல்லாமல் அருகில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப் பள்ளிக்கு தேவையான சமையல் கூடத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×