search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Metro Train"

    • பொங்கல் பண்டிகையையொட்டி ஏராளமான மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
    • 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையையொட்டி ஏராளமான மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதால், மெட்ரோ ரெயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால், இன்றும் நாளையும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
    • மெட்ரோ ரெயில் சேவை உடனடியாக சீரமைக்கப்பட்டால் தான் பயணிகள் நிம்மதியடைவார்கள்.

    சென்னை:

    சென்னை விமான நிலையம் முதல் அண்ணா சாலை வழியாக விம்கோ நகர் வரை மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பொதுமக்கள் தினந்தோறும் பயணம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    தற்போது குறிப்பிட்ட இந்த வழித்தடத்தில் ஒற்றை பாதை மெட்ரோ ரெயில் சேவை மட்டுமே இயக்கப்படுவதால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

    மெட்ரோ ரெயில் சேவை உடனடியாக சீரமைக்கப்பட்டால் தான் பயணிகள் நிம்மதியடைவார்கள்.

    ஊழியர்கள் மெட்ரோ ரெயில் தொழில்நுட்ப கோளாறை சரி செய்தனர். சில மணி நேரங்கள் பிறகு மெட்ரோ ரெயில் சேவை சீரானதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.




    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
    • இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

    பொங்கல் விடுமுறையை முன்னிட்டு 2024 ஆம் ஆண்டு ஜனவரி 15 (திங்கட்கிழமை), 16 (செவ்வாய்க்கிழமை) மற்றும் 17 (புதன்கிழமை) ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமையின் அட்டவணையின் படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    மெட்ரோ ரெயில் பயணிகள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    • ஆர்.கே.சாலை, ராயப்பேட்டை ஹைரோட்டில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக மந்தைவெளி சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் லஸ் சந்திப்பில் திருப்பி விடப்படும்.
    • செயின்ட் மேரிஸ் சாலை வலது புறம் திரும்பி சிருங்கேரி மட் சாலை மற்றும் வி.கே. ஐயர் சாலை வழியாக மந்தை வெளி பஸ் நிலையத்தை அடையலாம்.

    சென்னை:

    போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயில் பணிக்காக ஆர்.கே.சாலை மெட்ரோ நிலையம், திருமயிலை மெட்ரோ நிலையம் மற்றும் மந்தைவெளி மெட்ரோ நிலைய பகுதி நாளை (7-ந்தேதி) ராயப்பேட்டை சந்திப்பில் இருந்து அஜந்தா சந்திப்பு வழியாக அர்.கே.சாலைக்கு (ராயப்பேட்டை முதல் சந்திப்பு வரை) வரும் வாகனங்கள் வி.பி.ராமன் சாலை வலது, நீதிபதி ஜம்புலிங்கம் தெரு வலது, ஆர்.கே.சாலை நோக்கி திருப்பி விடப்படும்.

    ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் இருந்து அரசு ஆஸ்பத்திரி நோக்கி வரும் வாகனங்கள் ராயப்பேட்டை பாலம் சர்வீஸ் சாலை இடது, நீலகிரிஸ் கடை, மியூசிக் அகாடமி சர்வீஸ் சாலை வலது, டி.டி.கே.சாலை, கவுடியா மட் சாலை வரை செல்லும்.

    ஆர்.கே.சாலை, ராயப்பேட்டை ஹைரோட்டில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக மந்தைவெளி சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் லஸ் சந்திப்பில் திருப்பி விடப்படும். வலது லஸ் சர்ச் சாலை, டி. சில்வா சாலை, பக்தவச்சலம் தெரு, வாரன் சாலை, செயின்ட் மேரி சாலை, இடது புறம் திரும்பி சி.பி.ராமசாமி சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

    ஆர்.கே.மட் சாலையில் இருந்து ராயப்பேட்டை ஹைரோடு நோக்கி வரும் வாகனங்கள், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் (சாய்பாபா கோவில் தெரு)- இடதுபுறம், ரங்கா சாலை வலது, கிழக்கு அபிராமபுரம் 2-வது தெரு, லஸ் அவென்யூ, லஸ் சர்ச் சாலை வழியாக பி.எஸ்.சிவசாமி சாலை வலது, சுலிவன் கார்டன் தெரு இடது, ராயப்பேட்டை உயர் சாலை வழியாக செல்லலாம்.

    கிழக்கு மாட தெரு, வெங்கடேச அக்ரகாரம் தெரு (சாய்பாபா கோவில் தெரு), டாக்டர் ரங்கா சாலை முதல் கிழக்கு அபிராமபுரம் 1-வது தெரு, லஸ் அவென்யூ 1-வது தெரு லஸ் அவென்யூ, முண்டகண்ணியம்மன் கோவில் தெரு ஆகியவை அனைத்து வாகனங்களுக்கும் ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்படும்.

    வாரன் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் வலதுபுறம் திரும்பி செயின்ட் மேரிஸ் சாலை இடம் புறம் திரும்பி சி.பி.ராமசாமி சாலை, காளியப்பா சந்திப்பு நேராக ஆர்.ஏ.புரம் 3-வது குறுக்கு தெரு சென்று காமராஜர் சாலை, ஸ்ரீநிவாசா அவென்யூ, கிரீன்வேஸ் சந்திப்பை நோக்கி ஆர்.கே.மட் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

    கிரீன்வேஸ் சந்திப்பில் இருந்து மந்தைவெளிக்கு வரும் வாகனங்கள் ஆர்.கே. மட் சாலை இடது, திருவேங்கடம் தெரு, திருவேங்கடம் தெரு விரிவாக்கம், வி.கே.ஐயர் சாலை, தேவநாதன் தெரு வலது, செயின்ட் மேரிஸ் சாலை இடது, ஆர்.கே. மட் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

    மந்தைவெளி செல்லும் மாநகர பஸ்கள் வாரன் சாலை இடது புறம் செயின்ட் மேரிஸ் சாலை வலது புறம் திரும்பி சிருங்கேரி மட் சாலை மற்றும் வி.கே. ஐயர் சாலை வழியாக மந்தை வெளி பஸ் நிலையத்தை அடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் மேம்பாலத்தை அகற்ற வேண்டியது இருக்கும்
    • விம்கோ நகர் நிலையத்திற்கு மேலே 20 அடுக்கு மாடி கட்டிடம் மற்றும் 4 அடுக்கு கார் பார்க்கிங் கட்ட திட்டம்

    சென்னை:

    சென்னையில் உள்ள போக்குவரத்துகளில் மெட்ரோ ரெயில் சேவை மிக முக்கியமானது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து வருகின்றனர்.

    தற்போது 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மெட்ரோ ரெயில் சேவையை விரிவாக்கம் செய்யும் திட்டங்களும் தீட்டப்பட்டு அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

    அந்த வகையில் வெளிநாடுகளில் இருப்பது போன்று அடுக்குமாடி கட்டிடங்கள் வழியாக மெட்ரோ ரெயில்கள் செல்லும் வகையில் சென்னை திருமங்கலம் பகுதியில் 12 மாடி கட்டிடம் வழியாக மெட்ரோ ரெயில்கள் செல்லும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், கட்டிடங்கள், மக்கள், செயல்பாடுகள் மற்றும் பொது போக்குவரத்தை ஒன்றாக கொண்டுவருவதற்காக மெட்ரோ நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்தும் வகையில் போக்குவரத்து சார்ந்த மேம்பாட்டு திட்டங்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.

    3 இடங்களில் நிலையங்களை கட்டுவதற்கான செலவு 2-ம் கட்ட திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது. இதற்காக மாநில அரசிடம் நிதி கோருவோம் என்றார்.


    இந்த திட்டத்திற்காக திருமங்கலத்தில், மேம்பாலம் அருகே முன்பு 3 வீடுகள் இருந்த 450 மீட்டர் நீளமுள்ள நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. திருமங்கலத்தில் உள்ள மேம்பாலத்திற்கு மேல் மெட்ரோ ரெயில் நிலையத்துடன் ஒருங்கிணைந்த நடைபாதையை உருவாக்க வேண்டியுள்ளது. ஆனால் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் மேம்பாலத்தை அகற்ற வேண்டியது இருக்கும் என்றார். மேலும், கோயம்பேடு மெட்ரோ நிலையத்தை 2-ம் கட்டமாக விரிவாக்கம் செய்யவும், ஆவடிக்கு 3-வது வழித்தடத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டு 3 வழித்தடங்களையும் இணைக்கும் பொதுவான பாதை அமைக்கப்படும்.திருமயிலையில் குறைந்தபட்சம் 5 இடங்களில் உள்நுழைவு பகுதி அல்லது வெளியேறும் இடங்களில் ஒன்று புதிய பல மாடி கட்டிடத்தில் இருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    விம்கோ நகர் நிலையத்திற்கு மேலே 20 அடுக்கு மாடி கட்டிடம் மற்றும் 4 அடுக்கு கார் பார்க்கிங் ஆகியவை திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோன்ற வசதிகள் பல இடங்களில் உள்ளன.

    சீனாவில் சோங்கிங் பகுதியில் 19 மாடி குடியிருப்பு வளாகத்தில் 6-வது மாடியில் மெட்ரோ நிலையம் உள்ளது. இந்தியாவிலும் கூட, நாக்பூரில் உள்ள ஜீரோ மைல் மெட்ரோ நிலையத்திற்கு மேலே 15 அடுக்கு நட்சத்திர ஓட்டல் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இது 3 மாடி வாகன நிறுத்தும் இடத்திற்கு மேலே கட்டப்பட்டுள்ளது. எப்போதும் ரெயில்கள் முழுவதுமாக ஓடினாலும் இயக்க செலவு மற்றும் கடனை திருப்பி செலுத்துவதற்கு வெறும் டிக்கெட் வருவாயை கொண்டு சமாளிக்க முடியாது. எனவே, விளம்பரங்கள் வைப்பது, மெட்ரோ நிலையங்களில் சில்லறை விற்பனை நிலையங்களை அனுமதிப்பது மற்றும் சொத்துக்களை உருவாக்குவது போன்றவையே அதிக வருவாயை ஈட்டுவதற்கு ஒரே வழி என கூறப்பட்டுள்ளது. 

    • 43 சுரங்கப்பாதை ரெயில் நிலையங்கள் என மொத்தம் 119 மெட்ரோ ரெயில் நிலையங்கள் வருகின்றன.
    • அடையாறு ஆற்றை கடந்து, அடையாறு சந்திப்பு நிலையத்துக்கு சென்றடைய உள்ளது.

    திருவான்மியூர்:

    சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணி மாதவரம் பால்பண்ணை -சிறுசேரி சிப்காட் வரையும் (45.4கி.மீட்டர்), கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி பணிமனை வரையும் (26.1கி.மீட்டர்), மாதவரம்-சோழிங்கநல்லூர் வரையும் (44.6கி.மீட்டர்) என மொத்தம் 116.1 கி.மீட்டர் தூர நீளத்திற்கு 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகிறது.

    இதில் மொத்தம் 76 உயர்மட்ட மெட்ரோ ரெயில் நிலையங்கள், 43 சுரங்கப்பாதை ரெயில் நிலையங்கள் என மொத்தம் 119 மெட்ரோ ரெயில் நிலையங்கள் வருகின்றன. 73.5 கி.மீட்டர் தூரத்துக்கு உயர் மட்ட பாதையும், 42.6 கி.மீட்டர் தூரத்துக்கு சுரங்கப்பாதையும் அமைக்கப்படுகிறது. இதில் மாதவரம் பால்பண்ணை-சிறுசேரி சிப்காட் வரை உள்ள வழித்தடத்தில் 28 சுரங்கப்பாதை ரெயில் நிலையங்களும், 19 உயர்நிலை ரெயில் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன. இந்த வழித்தடத்தில் பசுமை வழிச்சாலை பகுதியில் 1.2 கி.மீ., துாரத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி, கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. முதல் சுரங்கம் தோண்டும் எந்திரமான 'காவேரி' சுரங்கப் பாதை அமைத்து திரு.வி.க., பாலம் அருகே அடையாறு ஆற்றை கடந்து, அடையாறு சந்திப்பு நிலையத்துக்கு சென்றடைய உள்ளது.

    முதல் சுரங்கம் தோண்டும் எந்திரம் மூலம் இதுவரை 560 மீட்டர் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணி முடிந்து உள்ளன. 2-வது எந்திரம் மூலம் 200 மீட்டருக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் பருவ மழை, வெள்ளம் உள்ளிட்டவற்றால் தாமதமாகி வந்த அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி அடுத்த வாரத்தில் தொடங்க உள்ளது. அடையாறு ஆற்றின் கீழ் 70 அடி ஆழத்தில், சுரங்கப்பாதை பணி அமைக்கப்பட இருக்கிறது. இதுகுறித்து மெட்ரோ நிறுவன அதிகாரி ஒருவர் கூறும்போது. அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி அடுத்த மாதம் (ஜனவரி) முதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான, ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.

    • சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் தொடங்கியதில் இருந்து இதுநாள் வரை சுமார் 24 கோடி பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
    • பயணிகளின் ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்தவும், பயணிகளை ஊக்குவிக்கவும் வழங்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், தற்போது 54.6 கி.மீ. நீளத்தில், நீல வழித்தடத்தில் விமான நிலையம் மெட்ரோ முதல் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ வரை மற்றும் பச்சை வழித்தடத்தில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை மெட்ரோ ரெயில் சேவைகளை வழங்கி வருகிறது. சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் தொடங்கியதில் இருந்து இதுநாள் வரை சுமார் 24 கோடி பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    இந்நிலையில், சென்னை மெட்ரோ ரெயில்களில் சிங்கார சென்னை அட்டைகளை பயன்படுத்தி பயணம் செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், 15.12.2023 முதல் 15.03.2024 வரை 3 மாதங்கள் என ஒவ்வொரு மாதமும் அதிகமாக பயணம் செய்யும் முதல் 40 பயணிகளை தேர்வு செய்து அவர்களுக்கு பரிசு பொருள் வழங்கப்படும்.

    * முதல் மாதம் 15.12.2023 முதல் 14.01.2024 வரை

    * இரண்டாவது மாதம் 15.01.2024 முதல் 14.02.2024 வரை

    * மூன்றாவது மாதம் 15.02.2024 முதல் 15.03.2024 வரை

    இதில் தேர்ந்தெடுக்கப்படும் பயணிகளுக்கு, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கி உடன் இணைந்து பரிசு பொருள்களை வழங்கும்.

    பயணிகளின் ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்தவும், பயணிகளை ஊக்குவிக்கவும் இவை வழங்கப்படுகிறது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மெட்ரோ பயணிகள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த 3-ந்தேதியில் இருந்து சென்னை பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலைய வாகன நிறுத்தும் இடம் மூடப்பட்டது.
    • பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலைய வாகனம் நிறுத்தும் இடம் சரிசெய்யப்பட்டு இன்று காலை முதல் பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

    சென்னை:

    மிச்சாங் புயல் மழை காரணமாக கடந்த 3-ந்தேதியில் இருந்து சென்னை பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலைய வாகன நிறுத்தும் இடம் மூடப்பட்டது.

    இந்நிலையில், பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலைய வாகனம் நிறுத்தும் இடம் சரிசெய்யப்பட்டு இன்று காலை முதல் பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பயணிகள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுமாறு மெட்ரோ நிர்வாகம் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    • கனமழை காரணமாக அடுக்குமாடி உள்ளிட்ட குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன.
    • மெட்ரோ ரெயிலில் கடந்த 4-ந்தேதி 82 ஆயிரத்து 370 பேர் பயணம் செய்தனர்.

    சென்னை:

    சென்னையில் கனமழை காரணமாக அடுக்குமாடி உள்ளிட்ட குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன. இதனால் பொதுமக்கள் பொது போக்குவரத்தை தேடி வரும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    குறிப்பாக மெட்ரோ ரெயில் மற்றும் புறநகர் மின்சார ரெயில்களில் வழக்கத்தை விட கூடுதலான பயணிகள் பயணம் செய்கின்றனர். மெட்ரோ ரெயிலில் கடந்த 4-ந்தேதி 82 ஆயிரத்து 370 பேர் பயணம் செய்தனர். 5-ந்தேதி 1 லட்சத்து 72 ஆயிரத்து 609 பேரும் பயணம் செய்து உள்ளனர். கடந்த 6-ந்தேதி 2 லட்சத்து 96 ஆயிரத்து 495 பேர் அதாவது ஒரே நாளில் 3 லட்சம் பேர் வரை பயணம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மெட்ரோ ரெயில்கள் 28 மாதங்களில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.
    • பூந்தமல்லியில் கட்டப்பட்டு வரும் பணிமனையில் மெட்ரோ ரெயில்கள் பராமரிக்கப்பட்டு இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், ஒட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 10 மெட்ரோ ரெயில்களை (மொத்தம் 30 பெட்டிகள்) வழங்குவதற்கான துணை ஒப்பந்தத்தை அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.269 கோடி மதிப்பில் (வரிகள் உட்பட) வழங்கி உள்ளது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) மற்றும் அல்ஸ்டோம் டிரான்ஸ் போர்ட் இந்தியா நிறுவனத்தின் வர்த்தக இயக்குனர் ராஜீவ் ஜோய்சர் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் ராஜேந்திரன் கலந்து கொண்டனர். இந்த ஒப்பந்ததின் கீழ், மெட்ரோ ரெயில்கள் 28 மாதங்களில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். வழித்தடம்-4-ல் பூந்தமல்லியில் கட்டப்பட்டு வரும் பணிமனையில் மெட்ரோ ரெயில்கள் பராமரிக்கப்பட்டு இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    • பயணிகளின் பயண நேரத்தை குறைக்க சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் நடவடிக்கை.
    • நெரிசல்மிகு நேரங்கள் இல்லாது மற்ற நேரங்களில் 9 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    சென்னை :

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது:-

    அதிகரித்து வரும் மெட்ரோ ரெயில் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மற்றும் அவர்களின் காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காகவும் இரண்டு வழித்தடங்களிலும் நெரிசல்மிகு நேரங்கள் இல்லாது மற்ற நேரங்களில் 9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் சேவைகள் இன்று முதல் 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

    மெட்ரோ ரெயில் பயணிகள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • மெட்ரோ ரெயில் சேவைக்கு இருக்கும் வரவேற்பை விரிவாக்கம் செய்வதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.
    • பொது மக்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள சலுகையுடன் ஒரு நிபந்தனையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்களின் அதிநவீன போக்குவரத்து முறையாக அறிமுகமாகி இன்று அத்தியாவசிய போக்குவரத்து சேவையாக உருவெடுத்து இருக்கிறது சென்னை மெட்ரோ ரெயில். நகரின் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் துவங்கப்பட்டு, தற்போது நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருவதில் இருந்தே, மெட்ரோ ரெயில் சேவைக்கு இருக்கும் வரவேற்பை புரிந்து கொள்ள முடியும்.

    சென்னை மெட்ரோ ரெயிலில் தினசரி பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் பொது மக்களுக்கு அவ்வப்போது சலுகைகளும் அறிவிக்கப்படுகின்றன.

    அந்த வகையில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் அடித்தள நாளை முன்னிட்டு வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதி ஒரு நாள் மட்டும் ரூ.5 கட்டணத்தில் பொது மக்கள் பயணிக்கலாம் என்று சென்னை மெட்ரோ அறிவித்துள்ளது.

    ஆனால், அதற்கு ஒரு நிபந்தனையும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாடிக் க்யூஆர், பேடிஎம், வாட்ஸ்அப் மற்றும் போன்பே மூலம் பெறும் டிக்கெட்டுகளுக்கு மட்டும் இந்த சலுகை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×