search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kovai"

    • விமான நிலையத்தில் விமான ஓடுதளம் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • வாரத்தில் தற்போது 5 நாட்கள் கோவை ஷார்ஜா இடையே விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

    கோவை:

    கோவை சர்வதேச விமான நிலையத்தில் விமான ஓடுதளம் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அதிகாலை தரை இறங்கும் ஏர் அரேபியா விமானத்தின் நேரம் இன்று முதல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:- விமான நிலையங்களில் ஓடுதளம் பராமரிப்பு பணி 10- ஆண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படுவது வழக்கம். கோவை சர்வதேச விமான நிலையத்தில் சமீபத்தில் இந்தப் பணிகள் தொடக்கப்பட்டன.

    இதன் காரணமாக காலை 6 மணி முதல் இரவு 10 மணிக்குள் அனைத்து விமான சேவைகளும் நிறைவு பெறும் வகையில் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை-ஷார்ஜா இடையே இயக்கப்படும் ஏர் அரேபியா விமானம் அதிகாலை 3:30 மணிக்கு தரையிறங்கி மீண்டும் 4:15 மணியளவில் புறப்பட்டு செல்லும்.

    ஓடுதள பராமரிப்பு பணி காரணமாக இன்று 16-ந் தேதி முதல் ஏர் அரேபியா விமானம் இயக்கப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.வாரத்தில் தற்போது 5 நாட்கள் கோவை ஷார்ஜா இடையே விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த விமானம் இன்று முதல் காலை 6:30 மணிக்கு தரையிறங்கி மீண்டும் காலை 7:20 மணி அளவில் ஷார்ஜா புறப்பட்டுச் செல்லும் வகையில் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கோவையில் ரூ.13.82 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
    • தமிழக முதல்-அமைச்சர் தொழிலாளர் நலனில் அக்கறை செலுத்தி வருகிறார்

    கோவை

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரி களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தொழிலாளர் துறை அமைச்சர் கணேசன் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் ரூ.13 கோடியே 82 லட்சத்து 49 ஆயிரத்து 250 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை தொழிலாளர்களுக்கு அமைச்சர் வழங்கினார். கூட்டத்தில் நகராட்சி துறை அமைச்சர் நேரு, கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்குமார் மற்றும் தொழிலாளர் துறை அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அமைச்சர் கணேசன் பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் தொழிலாளர் நலனில் அக்கறை செலுத்தி வருகிறார். அதனால் தான் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தொழிலாளர்கள் சாலைக்கு வந்து எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை.

    இந்த கூட்டத்தில் நகர்ப்புற அமைச்சர் நேரு கலந்துகொண்டது மேலும் ஊக்கம் அளிப்பதாக உள்ளது. தொழிலாளர்களுக்கு நீண்ட நாட்களாக விடுபட்ட உதவிகள் கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    திருமண உதவித்தொகை ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. விபத்து இழப்பு நிவாரண நிதி ரூ.1 லட்சத்திலிருந்து 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு உடனடியாக 75 ஆயிரம் தொழிலாளர்களுக்கு 24 மணி நேரத்திற்குள் நிதி உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதன் பின்னர் 57 ஆயிரம் தொழிலாளர்களுக்கு அடுத்த கட்டமாக நிதி உதவி பெற்று அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

    கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் தீர்வு காணப்படாத பிரச்சனைகளுக்கு 25 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டு ஒரு லட்சத்து 7 ஆயிரம் தொழிலாளர்களுக்கு விடுபட்ட தொகைகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இது போன்ற ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு 3 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ஒரு வார காலத்துக்குள் நிவாரண உதவிகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய நிதி கிடைக்காவிட்டால் உடனடியாக அணுகலாம். தொழிலாளர் துறை அதிகாரிகளும் பல உதவிகளை வழங்கி வருகிறார்கள்.

    கோவை மாவட்டத்தில் தற்போது ரூ.13 கோடியே 82 லட்சத்து 49 ஆயிரத்து 750 நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இது தொழிலாளர்களுக்கான ஆட்சி, தொழிலாளர்களும் இந்த நன்றியை மறக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் பி.ஆர். நடராஜன் எம்.பி., கலெக்டர் சமீரன், மேயர் கல்பனா, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குனர் தட்சிணாமூர்த்தி, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணை மேயர் வெற்றிசெல்வன், முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆஸ்பத்திரி கட்டிடத்தை வாடகை அடிப்படையில் நடத்த ஒப்பந்தம் போட்டு கொடுத்ததாக தெரிகிறது.
    • நீதிபதி சஞ்சீவி பாஸ்கரன் மனு மீதான விசாரணையை வருகிற 20-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

    கோவை

    கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியின் தலைவர் ராமச்சந்திரன்(வயது72). இவர் கடந்த 3 ஆண்டிற்கு முன்பு சென்னையை சேர்ந்த உமா சங்கர்(54) என்பவரிடம் ஆஸ்பத்திரி கட்டிடத்தை வாடகை அடிப்படையில் நடத்த ஒப்பந்தம் போட்டு கொடுத்ததாக தெரிகிறது.

    இந்நிலையில், 100 கோடி ரூபாய் மதிப்பிலான தனது ஆஸ்பத்திரியை அபகரிக்க உமாசங்கர் முயற்சிப்பதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ராமச்சந்திரன் மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

    மேலும் ஆஸ்பத்திரி வளாகத்தில் ஒரு கும்பல் புகுந்து அங்கிருந்தவர்களை தாக்கியதாகவும் கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக உமாசங்கர், அவரது மேலாளர் மருதவாணன் ஆகியோர் மீது ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற உமாசங்கர் கண்ணப்ப நகர் பகுதியில் நடந்து சென்ற போது கார் மோதி பலியானார்.

    இதற்கிடையே இந்த வழக்கானது சி.பி.சி.ஐ.டி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டில் ஆஸ்பத்திரியில் நடந்த தாக்குதல் தொடர்பான வழக்கில் ஆஸ்பத்திரி தலைவர் ராமச்சந்திரன், உதவியாளர் காமராஜ் (45), மூர்த்தி (45), முருகேசன் (47), டிரைவர் பழனிசாமி ஆகிய 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே கைதான 5 பேரும் ஜாமீன் கோரி கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி சஞ்சீவி பாஸ்கரன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சீவி பாஸ்கரன் மனு மீதான விசாரணையை வருகிற 20-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் இவர்கள் 5 பேரையும் 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் நேற்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அவர் தனது விலை உயர்ந்த சைக்கிளில் வெளியே சென்று வீடு திரும்பினார்.
    • துடியலூர் வெற்றிலைகாளி பாளையம் மாரியம்மன் கோவில் 2-வது வீதியை சேர்ந்த சூர்யா (23) என்பதும் கூலிவேலை செய்து வந்ததும் ெதரியவந்தது.

    கோவை:

    கோவை துடியலூர் என்.ஜி.ஜி.ஓ காலனி அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் நடேஷ்குமார் (வயது 42). இவர் சரவணம்பட்டியில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

    நடேஷ்குமார் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள சைக்கிளை வைத்துள்ளார். சம்பவத்தன்று அவர் தனது விலை உயர்ந்த சைக்கிளில் வெளியே சென்று வீடு திரும்பினார். அங்கு சைக்கிள் நிறுத்தும் பகுதியில் தனது சைக்கிளை நிறுத்தி வீட்டுக்குள் சென்றார்.

    சிறிது நேரம் கழித்து அவர் வெளியே வந்தார். அப்போது வாலிபர் ஒருவர் அவரது சைக்கிளை திருடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்து அந்த வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

    உடனே நடேஷ்குமார் துரத்தி அந்த வாலிபரை மடக்கி பிடித்தார். பின்னர் அந்த வாலிபரை துடியலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் துடியலூர் வெற்றிலைகாளி பாளையம் மாரியம்மன் கோவில் 2-வது வீதியை சேர்ந்த சூர்யா (23) என்பதும் கூலிவேலை செய்து வந்ததும் ெதரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கண்ணாடிகள் ஒன்றோடு ஒன்று மோதி உடையாமல் இருக்க இடை இடையே தெர்மாகோல் வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
    • 15 அடி உயரம் மற்றும் அகலம் கொண்ட ஒரு பெரிய கண்ணாடியை தொழிலாளர்கள் சேர்ந்து ஒரு லாரியில் இருந்து மற்றொரு லாரிக்கு ஏற்றினர்.

    கோவை :

    கேரவை செல்வபுரம் அருகே உள்ள திருநகர் முதல் தெருவில் ராகேஷ் மேத்தா, கஜேந்திரன் ஆகியோருக்கு சொந்தமான கண்ணாடி குடோன் உள்ளது.

    இந்த குடோனுக்கு லாரியில் கண்ணாடிக ள்கொண்டு வரப்பட்டன. கண்ணாடிகளை ஒரு லாரியில் இருந்து மற்றொரு லாரிக்கு ஏற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுகொண்டு இருந்தனர். அப்ேபாது திடீரென 15 அடி உயரம் மற்றும் அகலம் கொண்ட ஒரு பெரிய கண்ணாடியை தொழிலாளர்கள் சேர்ந்து ஒரு லாரியில் இருந்து மற்றொரு லாரிக்கு ஏற்றினர்.

    பின்னர் அந்த கண்ணாடிகள் ஒன்றோடு ஒன்று மோதி உடையாமல் இருக்க இடை இடையே தெர்மாகோல் வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    அப்போது திடீரென ஒரு பெரிய கண்ணாடி லாரிக்குள்ளேயே சரிந்து விழுந்தது. இதில் கோவை கரும்புக்க டையை சேர்ந்த பாபு என்ற முஸ்தபா (வயது 52), செல்வ புரத்தை சேர்ந்த அபுதாகீர் (55) ஆகிய 2 தொழிலாளர்கள் கண்ணாடிக்கு அடியில் சிக்கினர். அந்த கண்ணாடி உடைந்து அவர்களின் உடலில் பல இடங்களில் குத்தியது. இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர்.

    மேலும் ஷாஜகான், அபுதாகீர் ஆகியோர் காயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவர்களை அங்கு இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த தகவல் கிடைத்ததும் செல்வபுரம் போலீசார் சம்பவ இடத் துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கண்ணாடி குத்தி உயிரிழந்த முஸ்தபா, அபுதாகீர் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து செல்வபுரம் போலீசார் கண்ணாடி கடை உரிமையாளர்கள் ராகேஷ் மேத்தா, கஜேந்திரன் ஆகியோர் மீது அஜாக்கிரதையாக மரணம் விளைவித்தல் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • அந்த மொபட்டில் சலிவன் வீதிக்கு சென்று அங்கு மொபட்டை நிறுத்தினார்.
    • வாகனங்களின் உரிமையாளர்கள் அந்தந்த போலீஸ் நிலையங்களில் புகார் தெரிவித்தனர்.

    கோவை:

    மதுரையை சேர்ந்தவர் கண்ணன் (வயது 34). இவர் கோவை இடையர் வீதியில் தங்கி நகை பட்டறையில் தொழிலாளியாக வேலை செ்யது வருகிறார்.

    இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் திருவிழாவிற்கு மதுரை சென்றார். அதனால் அவர் தனது மொபட்டை உறவினரிடம் கொடுத்து இருந்தார். அவர் அந்த மொபட்டில் சலிவன் வீதிக்கு சென்று அங்கு மொபட்டை நிறுத்தினார்.

    சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அந்த மொபட் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் கண்ணனுக்கு தகவல் தெரிவித்தார்.

    அவர் கோவை வந்து மொபட் திருட்டு போனது குறித்து வெரைட்டிஹால் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு போன மொபட்டை தேடி வருகின்றனர்.

    இதே போன்று கோவை ரேஸ்கோர்ஸ், ரத்தினபுரி, செல்வபுரம், போத்தனூர், பீளமேடு, சரவணம்பட்டி உள்பட பகுதிகளில் மோட்டார் சைக்கிள், மொபட் திருட்டு போனது.

    இதுகுறித்து வாகனங்களின் உரிமையாளர்கள் அந்தந்த போலீஸ் நிலையங்களில் புகார் தெரிவித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு போன வாகனங்களை திருடி சென்றவர்கள் யார் ? வாகனங்கள் எங்கு உள்ளது? என்பது குறித்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

    கோவை மாநகரில் நேற்று மட்டும் ஒரே நாளில் 12 மோட்டார் சைக்கிள்கள், மொபட்டுகள் திருட்டு போனதாக புகார் வந்துள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த சில வருடங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டது. அவரது வலது கால் செயல் இழந்தது.

    கோவை:

    கோவை சூலூர் பீடம்பள்ளி சூரியநகரை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 32). கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாக வில்லை

    இந்த நிலையில் இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டது. அவரது வலது கால் செயல் இழந்தது. இதனால் அவருக்கு பல இடங்களில் வரன் பார்த்தும் பெண் அமையவில்லை என தெரிகிறது.

    இதனை நினைத்து அவர் சில நாட்களாக மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பீகாரை சேர்ந்தவர் சிட்ராஜன் குமார் (22). இவர் சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கிதொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

    சம்பவத்தன்று வழக்கம் போல அவர் வேலைக்கு சென்றார். அப்போது அங்கு வேலை செய்து கொண்டு இருந்த போது எந்திரத்தில் இருந்து கல் கழன்று சிட்ராஜன் குமாரின் தலை மீது விழுந்தது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    பின்னர் இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளம்பெண் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    • இளம்பெண்ணின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    கோவை:

    கோவை சரவணம்பட்டி அருகே விநாயகாபுரத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண். இவர் அந்த பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இளம்பெண் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளார்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக வாலிபர் ஒருவரின் பழக்கம் கிடைத்தது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இளம்பெண் கணவர் வேலைக்கு செல்லும் நேரத்தில் வாலிபரை வீட்டுக்கு அழைத்து ஜாலியாக இருந்து வந்தார்.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார். இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று வழக்கம் போல இளம்பெண் வேலைக்கு புறப்பட்டு சென்றார். மதியம் உணவு சாப்பிடுவதற்காக சென்ற அவர் தனது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.

    நீண்ட நேரம் ஆகியும் அவர் வேலைக்கு வராததால் மேலாளர் இது குறித்து இளம்பெண்ணின் கணவருக்கு தகவல் தெரிவித்தார். அவர் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இது குறித்து இளம்பெண்ணின் கணவர் வாலிபருடன் ஓட்டம் பிடித்த தனது மனைவியை கண்டு பிடித்து தரும்படி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் கணவர் மற்றும் மகளை தவிக்க விட்டு சென்ற இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    • மோட்டார் சைக்கிளில் கோவை- அன்னூர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார்.
    • கலையரசனை மீட்டு அன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கோவை:

    சேலத்தை சேர்ந்தவர் கலையரசன் (வயது 37). இவர் கோவையில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் கோவை- அன்னூர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த சுற்றுலா வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கலையரசன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் கலையரசனை மீட்டு அன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வீரகேரளத்தை சேர்ந்தவர் சந்ேதாஷ்குமார் (27). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் செட்டிப்பாளையம் - வட சித்தூர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த சந்ேதாஷ்குமார் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பேரூர் அருகே உள்ள ஆண்டிபாளையத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ் (42). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் செல்வபுரத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றார். மோட்டார் சைக்கிள் பெரியக்கடை வீதி அருகே சென்ற போது அந்த வழியாக சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். படுகாயம் அடைந்துஉயிருக்கு போராடிய அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் புஷ்பராஜ் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    • கொரோனா தினசரி பாதிப்பானது தற்போது இரட்டை இலக்கத்திற்கு மாறி உள்ளது.
    • தடுப்பூசி செலுத்தாமல் உள்ள நபர்கள் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    கோவை:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது.

    கோவை மாவட்டத்தில் கடந்த வாரங்களில் ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா தினசரி பாதிப்பானது தற்போது இரட்டை இலக்கத்திற்கு மாறி உள்ளது.

    தினமும் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதனால், மாவட்டம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், முக கவசம் அணியவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்திவருகின்றனர்.

    அடுத்த சில நாட்களில் கொரோனா பாதிப்பு மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. இதைய டுத்து, கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரங்களில் தினமும் 300 முதல் 400 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப் பட்டு வந்தது. ஆனால், தற்போது 600 முதல் 700 பேர் வரை பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறிய தாவது:- கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. தற்போது பள்ளிகளும் திறக்கப்ப ட்டுள்ளது. பாதிப்பை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தாமல் உள்ள நபர்கள் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும் என அறிவு றுத்தப்பட்டு வருகிறது.

    ஆஸ்பத்திரிகளில் கொரோனா பரிசோத னைகளை அதிகரிக்க உத்தரவிட ப்பட்டுள்ளது. அதன்படி, ஆஸ்பத்திரிகளில் கொரோனா அறிகுறி காணப்படும் நபர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோத னையை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. தற்போது தினமும் 600 முதல் 700 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.

    இவர்களின் பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்தில் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் உத்தரவின் பேரில் கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பரவலை தடுக்க பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.பொது இடங்கள் மற்றும் கூட்ட மாக உள்ள இடங்களுக்கு செல்லும்போது முக கவசம் அணிவது, சமூக இடை வெளியை கடைப்பிடித் தல் போன்ற தடுப்பு நடவடிக்வேகைகளை மேற்ெகாள்ள வேண்டும்.

    குறிப்பாக, வழிபாட்டு தலங்கள், வணிக வளா கங்கள், தியேட்டர்கள், மார்க்கெட்டுகள், ஆஸ்பத்தி ரிகளுக்கு செல்லும் போது முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • தனியார் பள்ளிகளில் பஸ்கள், வேன்கள் என மொத்தம் 1,200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன.
    • வாகனங்களில் இருக்கைகள் உள்ளிட்டவை முறையாக இடம்பெற்று ள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.

    கோவை:

    தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது.

    இந்த நிலையில் பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகளை அழைத்துச் செல்லக்கூடிய பள்ளி வாகனங்கள் அதாவது பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்ந்து கோவையில் உள்ள வடக்கு, மேற்கு, தெற்கு மற்றும் மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் வைத்து பள்ளி வாகனங்கள் 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஆய்வு செய்யப்பட்ட உள்ளன.

    இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவையில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவ- மாணவிகளை அழைத்து செல்லும் பஸ்கள், வேன்கள் என மொத்தம் 1,200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. அந்த வாகனங்களில் கதவு, புட்போர்டு, ஜன்னல், டிரைவர் கேபின், அவசர வழி, முதலுதவி பெட்டி, தொடர்பு எண், பள்ளி வாகனங்களின் நிறம், குறிப்பிட்ட இடத்தில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு உள்ளதா? மாணவர்கள் ஏறும் வழி, இறங்கும் வழிகளில் உறுதியான கதவுகள், படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதா?,

    மேலும் வாகனங்களில் இருக்கைகள் உள்ளிட்டவை முறையாக இடம்பெற்று ள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். வாகன டிரைவர்களின் லைசென்ஸ், வயது விவரம் உள்ளிட்டவை சரியாக உள்ளதா? எனவும் பரிசோதனை செய்யப்படும்.

    இந்த கல்வி ஆண்டுக்கான பள்ளி வாகன ஆய்வு நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது.

    • 9 மாநிலங்களில் போராட்டம் நடத்துவதாக முடிவு எடுக்கப்பட்டது.
    • என்.டி.சி ஆலைகளை முழுமையாக இயக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். என்.டி.சி ஆலைகளை முழுமையாக இயக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

    கோவை:

    கோவையில் என்.டி.சி ஆலைகளை முழுமையாக இயக்கிட கோரியும், தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், பல மாதங்களாக பல்வேறு தொழிற்சங்க அமைப்பினர், தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து மத்திய அரசிடமும் பலமுறை கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

    எனினும் என்.டி.சி ஆலைகள் முழுமையாக இயக்கப்படாத நிலையில் பல்வேறு தொழிற்சங்கங்கள் பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று 9 மாநிலங்களில் போராட்டம் நடத்துவதாக முடிவு எடுக்கப்பட்டது.

    அதன் ஒரு பகுதியாக கோவையில் 9 தொழிற்சங்கங்கள் இணைந்து உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர். கோவை சிவானந்தா காலனி பகுதியில் காலை முதல் மாலை வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. இதில் 9 தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இதனை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தொடங்கி வைத்தார்.

    இனிமேலும் என்.டி.சி ஆலைகளை முழுமையாக இயக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

    ×