search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் கொரோனா பரிசோதனை மீண்டும் அதிகரிப்பு
    X

    கோவையில் கொரோனா பரிசோதனை மீண்டும் அதிகரிப்பு

    • கொரோனா தினசரி பாதிப்பானது தற்போது இரட்டை இலக்கத்திற்கு மாறி உள்ளது.
    • தடுப்பூசி செலுத்தாமல் உள்ள நபர்கள் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    கோவை:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது.

    கோவை மாவட்டத்தில் கடந்த வாரங்களில் ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா தினசரி பாதிப்பானது தற்போது இரட்டை இலக்கத்திற்கு மாறி உள்ளது.

    தினமும் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதனால், மாவட்டம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், முக கவசம் அணியவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்திவருகின்றனர்.

    அடுத்த சில நாட்களில் கொரோனா பாதிப்பு மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. இதைய டுத்து, கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரங்களில் தினமும் 300 முதல் 400 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப் பட்டு வந்தது. ஆனால், தற்போது 600 முதல் 700 பேர் வரை பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறிய தாவது:- கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. தற்போது பள்ளிகளும் திறக்கப்ப ட்டுள்ளது. பாதிப்பை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தாமல் உள்ள நபர்கள் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும் என அறிவு றுத்தப்பட்டு வருகிறது.

    ஆஸ்பத்திரிகளில் கொரோனா பரிசோத னைகளை அதிகரிக்க உத்தரவிட ப்பட்டுள்ளது. அதன்படி, ஆஸ்பத்திரிகளில் கொரோனா அறிகுறி காணப்படும் நபர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோத னையை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. தற்போது தினமும் 600 முதல் 700 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.

    இவர்களின் பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்தில் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் உத்தரவின் பேரில் கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பரவலை தடுக்க பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.பொது இடங்கள் மற்றும் கூட்ட மாக உள்ள இடங்களுக்கு செல்லும்போது முக கவசம் அணிவது, சமூக இடை வெளியை கடைப்பிடித் தல் போன்ற தடுப்பு நடவடிக்வேகைகளை மேற்ெகாள்ள வேண்டும்.

    குறிப்பாக, வழிபாட்டு தலங்கள், வணிக வளா கங்கள், தியேட்டர்கள், மார்க்கெட்டுகள், ஆஸ்பத்தி ரிகளுக்கு செல்லும் போது முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×