search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kia India"

    • கியா இந்தியா நிறுவனத்தின் வாகன விற்பனை விவரங்கள் வெளியாகி உள்ளது.
    • வாகன விற்பனையில் வருடாந்திர அடிப்படையில் கியா இந்தியா 47.7 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.

    கியா இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் வேகமாக வளர்ந்து வருகிறது. சமீபத்தில் 2022 ஆண்டு விற்பனையில் 3 லட்சத்து 36 ஆயிரத்து 619 யூனிட்களை பதிவு செய்தது. 2021 ஆண்டுடன் ஒப்பிடும் போது கடந்த ஆண்டு விற்பனை 47.7 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

    இவற்றில் உள்நாட்டு விற்பனை 2 லட்சத்து 54 ஆயிரத்து 556 யூனிட்கள் அடங்கும். இது முந்தைய விற்பனையை விட 40.1 சதவீதம் அதிகம் ஆகும். 2022 ஆண்டு மட்டும் கியா இந்தியா நிறுவனம் 82 ஆயிரத்து 063 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இந்திய சந்தையில் 2019 ஆகஸ்ட் மாத வாக்கில் களமிறங்கிய கியா இந்தியா நிறுவனம் விற்பனையில் எட்டு லட்சம் யூனிட்களை கடந்து அசத்தி உள்ளது.

    இதுதவிர டிசம்பர் 2022 மாதத்தில் மட்டும் கியா இந்தியா நிறுவனம் 15 ஆயிரத்து 184 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இது வருடாந்திர அடிப்படையில் 94.7 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு புது மைல்கல் எட்டியதோடு இந்தியாவில் முன்னணி யுவி ஏற்றுமதியாளர் எனும் பெருமையை கியா இந்தியா எட்டியது. 2022 ஆண்டில் மட்டும் கியா இந்தியா 82 ஆயிரத்து 063 யூனிட்களை ஏற்றுமதி செய்து இருக்கிறது.

    உள்நாட்டில் செல்டோஸ் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் எஸ்யுவி-க்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த மாடல் ஒரே ஆண்டில் ஒரு லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டியது. 2022 ஆண்டில் இந்த எஸ்யுவி மாடல் 1 லட்சத்து 01 ஆயிரத்து 569 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. இதைத் தொடர்ந்து சொனெட் மாடல் இதே ஆண்டு 86 ஆயிரத்து 251 யூனிட்கள் விறபனையாகி இருந்தது.

    கியா கரென்ஸ் மாடல் கடந்த ஆண்டு 62 ஆயிரத்து 756 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. இது இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் இரண்டாவது பெரிய எம்பிவி மாடல் எனும் பெருமையை பெற்று இருக்கிறது. இதைத் தொடர்ந்து கியா கார்னிவல் மற்றும் கியா EV6 எலெக்ட்ரிக் கார் மாடல்கள் முறையே 3 ஆயிரத்து 550 மற்றும் 430 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

    • கியா இந்தியா நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் எலெக்ட்ரிக் வாகனத்திற்கான டீசர் வெளியாகி இருக்கிறது.
    • புதிய ஃபிளாக்‌ஷிப் எலெக்ட்ரிக் வாகனத்திற்கான டீசர்கள் கியா இந்தியா நிறுவன சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    கியா இந்தியா நிறுவனம் தனது EV9 கான்செப்ட் மாடலின் டீசரை அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு இருக்கிறது. இந்த கான்செப்ட் மாடல் இந்தியாவில் 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய EV9 கான்செப்ட் மட்டுமின்றி கார்னிவல் மற்றும் செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களையும் கியா இந்தியா அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    2021 லாஸ் ஏஞ்சல்ஸ் மோட்டார் விழாவில் முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்ட கியா EV9 கான்செப்ட் அந்நிறுவனத்தின் E-GMP பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த காரின் ஸ்பை படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஸ்பை படங்கள் நர்பர்க்ரிங் அருகே நடத்தப்பட்ட சோதனையின் போது எடுக்கப்பட்டவை ஆகும்.

    கியா EV9 கான்செப்ட்-இல் கிலாம்ஷெல் பொனெட், டைகர்-நோஸ் கிரில், காண்டிராஸ்ட் நிற ஃபௌக்ஸ் ஸ்கிட் பிலேட்கள், பானரோமிக் சன்ரூஃப், காரை சுற்றி கிலாடிங், செங்குத்தாக பொருத்தப்பட்ட டெயில் லைட்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. உள்புற டேஷ்போர்டில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்டி கன்சோல் மற்றும் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற செயல்படும் பெரிய திரை உள்ளது.

    இத்துடன் ஹேப்டிக் பட்டன்கள், ஃபுளோடிங் செண்டர் கன்சோல், ஆர்ம்-ரெஸ்ட், ஆம்பியண்ட் லைட்டிங், ஏ பில்லர் மவுண்ட் செய்யப்பட்ட டுவீட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. கியா EV9 காரின் ப்ரோடக்‌ஷன் வெர்ஷனில் வழங்கப்படும் பேட்டரி 450 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என கியா நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.

    • கியா நிறுவனம் இந்திய சந்தையில் EV6 ஃபிளாக்‌ஷிப் எலெக்ட்ரிக் கார் மாடலை விற்பனை செய்து வருகிறது.
    • சர்வதேச சந்தையில் கியா EV6 மாடல் ஏராளமான விருதுகளை வாங்கி குவித்த நிலையில், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    கியா இந்தியா நிறுவனம் தனது EV6 எலெக்ட்ரிக் கிராஸ்ஓவர் மாடலை இந்த ஆண்டு மத்தியில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. சர்வதேச சந்தையில் ஹூண்டாய் ஐயோனிக் 5, ஃபோர்டு மஸ்டங் மேக்-இ, ஸ்கோடா என்யாக் iV, ரெனால்ட் மெகன் இ டெக் மற்றும் பியுஜியோட் 308 போன்ற மாடல்களை பின்னுக்குத் தள்ளி சர்வதேச விருதுகளை வாங்கி குவித்து இருக்கிறது.

    புதிய கியா EV6 மாடல் WLTP சைக்கிள் சோதனையில் முழு சார்ஜ் செய்தால் 528 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. எனினும், ARAI சோதனையில் கியா EV6 மாடல் அதிக ரேன்ஜ் வழங்குவது அம்பலமாகி இருக்கிறது. இந்த காரின் GT லைன் வேரியண்ட் டூயல் எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் கொண்டிருக்கிறது. இந்த கார் 321 ஹெச்பி பவர், 605 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

    இதன் ஆல்-வீல் டிரைவ் வேரியண்ட் 77.4 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி பேக் கொண்டிருக்கிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 708 கிலோமீட்டர் வரை செல்லும் என ARAI சான்று பெற்று இருக்கஇறது. தற்போது கியா EV6 மாடல் இந்தியாவுக்கு CBU முறையில் இறக்குமதி செய்யப்படுகிறது. கியா EV6 RWD வேரியண்ட் விலை ரூ. 60 லட்சம் என துவங்குகிறது. இதன் AWD வேரியண்ட் விலை ரூ. 64 லட்சத்து 95 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.

    இந்திய சந்தையில் கியா EV6 எலெக்ட்ரிக் கார் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதுவரை கியா நிறுவனம் 200 EV6 யூனிட்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. மேலும் 150 யூனிட்களை வினியோகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த காரை 350 கிலோவாட் DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்யும் போது 18 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்திட முடியும்.

    • கியா நிறுவனத்தின் செல்டோஸ் பேஸ்லிப்ட் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • முதற்கட்டமாக இந்த மாடல் அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு, அதன்பின் இந்தியா வருகிறது.

    இந்திய சந்தையில் கியா நிறுவனத்தின் செல்டோஸ் மாடல் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் செல்டோஸ் மாடல் மூலம் கியா குறிப்பிடத்தக்க பங்குகளை பெற்றது. 2019 வாக்கில் இந்தியாவில் களமிறங்கிய கியா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடலாக கியா செல்டோஸ் இருக்கிறது. புதிய செல்டோஸ் பேஸ்லிப்ட் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    அமெரிக்காவில் ஸ்போர்டேஜ், சொரெண்டோ மற்றும் டெலுரைடு மாடல்களை போன்று செல்டோஸ் அதிக வரவேற்பு பெறவில்லை. புதிய மேம்பட்ட செல்டோஸ் மூலம் இந்த நிலையை மாற்ற கியா திட்டமிட்டுள்ளது. புதிய செல்டோஸ் பேஸ்லிப்ட் மாடலில் மேம்பட்ட முகப்பு பகுதி, பெரிய கிரில், இலுமினேட் செய்யப்பட்ட அக்செண்ட்கள் வழங்கப்படுகிறது. இதன் ஹெட்லைட்களும் மாற்றப்பட்டு அழகாக டிசைன் செய்யப்பட்டு உள்ளன.

    பின்புறம், டெயில் லைட்களும் புதிதாக வழங்கப்படுகின்றன. இவை ஸ்டிரெட்ச் செய்யப்பட்ட லைட் ஸ்ட்ரிப் மூலம் இண்டர்கனெக்ட் செய்யப்படுகின்றன. காரின் உள்புறத்தில் மேம்பட்ட 10.25 இன்ச் இன்போடெயின்மெண்ட் டிஸ்ப்ளே, 10.25 இன்ச் அளவில் மேம்பட்ட டிரைவர் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. காரின் ஏர் வெண்ட்கள் மாற்றப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இந்த மாடல் ஏற்கனவே தென் கொரிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது.

    அமெரிக்காவில் இந்த மாடல் அதன் தென் கொரிய வெர்ஷனில் வழங்கப்பட்டு இருந்த என்ஜின்களை பெறும் என கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய கியா செல்டோஸ் பேஸ்லிப்ட் மாடலில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 147 ஹெச்பி பவர், 180 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என தெரிகிறது. இத்துடன் 1.6 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜினும் வழங்கப்படலாம்.

    இந்த என்ஜின் 195 ஹெச்பி பவர், 265 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தலாம். இந்திய சந்தையில் தற்போது விற்பனை செய்யப்படும் செல்டோஸ் மாடலில் 1.4 லிட்டர் GDI டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் ஸ்மார்ட்ஸ்டிரீம் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய செல்டோஸ் பேஸ்லிப்ட் மாடல் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

    • கியா செல்டோஸ் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர் தனது காரில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாக குற்றம்சாட்டி வந்தார்.
    • பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காத விரக்தியில் கோபமுற்ற வாடிக்கையாளர் தனது காரை தீ வைத்து எரித்தார்.

    ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரை சேர்ந்த நபர் தனது கியா செல்டோஸ் காரை தீ வைத்து எரித்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். கியா சர்வீஸ் தனக்கு திருப்திகரமாக இல்லை என்ற விரக்தியில் இருந்த நபர் கோபத்தில் இவ்வாறு செய்து இருக்கிறார். பின் கியா சர்வீஸ் செண்டர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் காரை எரித்த வாடிக்கையாளரை கைது செய்தனர்.

    கியா செல்டோஸ் காரை வாங்கி பயன்படுத்தி வந்த நபருக்கு கடந்த இரண்டு ஆண்டுகவாகவே காரின் என்ஜினில் குறைபாடு ஏற்பட்டு வந்ததாக அதன் வாடிக்கையாளர் குற்றம்சாட்டி வருகிறார். என்ஜின் குறைபாடை சரி செய்ய அந்த நபர் சர்வீஸ் செண்டர் சென்றுள்ளார். காரில் ஏற்படும் புகார்களை சர்வீஸ் செண்டர் மேலாளரிடம் தெரிவித்து இருக்கிறார். பின் சர்வீஸ் செய்யும் ஊழியர், மேலாளர் மற்றும் வாடிக்கையாளர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    வாக்குவாதம் முற்றியதில் கோபமுற்ற வாடிக்கையாளர் தான் எடுத்து வந்த பெட்ரோல் கேனை திறந்து, தனது கியா செல்டோஸ் முழுக்க ஊற்றினார். கார் சர்வீஸ் செண்டரின் உள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையிலேயே அவர் தனது காருக்கு தீ வைத்து எரித்தார். தீ வைத்ததும் கார் முழுக்க தீ மளமளவென பரவியது. இதைத் தொடர்ந்த கியா சர்வீஸ் செண்டர் ஊழியர் தீயணைப்பானை எடுத்து வந்து தீயை கட்டுப்படுத்தினார்.

    கியா சர்வீஸ் செண்டர் ஊழியர் தீயை கட்டுக்குள் கொண்டுவரும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக கியா சர்வீஸ் செண்டர் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காரை தீ வைத்து எரித்த வாடிக்கையாளர் மற்றும் அவருடன் வந்த மற்றொரு நபரை காவல் துறையினர் கைது செய்தனர். பின் கைது செய்யப்பட்டவர்கள் பினையில் விடுதலை செய்யப்பட்டனர்.

    • கியா இந்தியா நிறுவனத்தின் கரென்ஸ் எம்பிவி மாடல் இந்திய விற்பனையில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
    • புதிய கரென்ஸ் எம்பிவி விலை இந்தியாவில் மீண்டும் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.

    கியா இந்தியா நிறுவனம் தனது கரென்ஸ் எம்பிவி மாடல் விலையை இந்திய சந்தையில் இரண்டாவது முறையாக அதிகரித்து இருக்கிறது. முன்னதாக ஏப்ரல் மாத வாக்கில் கியா கரென்ஸ் விலை முதல் முறையாக உயர்த்தப்பட்டது. அப்போது கியா கரென்ஸ் அறிமுக விலை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு புதிய விலை அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக கரென்ஸ் மாடல் விலை ரூ. 70 ஆயிரம் உயர்த்தப்பட்டது.

    இந்த நிலையில், கியா கரென்ஸ் விலை இந்தியாவில் மீண்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. கியா கரென்ஸ் புதிய விலை நவம்பர் 1 ஆம் தேதி அமலுக்கு வந்தது. அதன்படி கரென்ஸ் மாடல் விலை தற்போது ரூ. 50 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. கியா கரென்ஸ் 1.5 லிட்டர் NA பெட்ரோல் பிரெஸ்டிஜ் வேரியண்ட் விலை ரூ. 50 ஆயிரம் அதிகரித்துள்ளது.

    கரென்ஸ் 1.5 லிட்டர் NA பெட்ரோல் பிரீமியம் வேரியண்ட் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் லக்சரி வேரியண்ட் விலை முறையே ரூ. 40 ஆயிரம் மற்றும் ரூ. 15 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. 1.5 லிட்டர் லக்சரி வேரியண்ட் விலை ரூ. 35 ஆயிரமும், மற்ற டீசல் வேரியண்ட் விலை ரூ. 30 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது.

    கியா கரென்ஸ் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்ட பிரெஸ்டிஜ் பிளஸ் டிசிடி, லக்சரி+ 6எஸ், லக்சரி+ 7எஸ், லக்சரி+ 6எஸ் டிசிடி மற்றும் லக்சரி+ 7எஸ் டிசிடி விலை ரூ. 20 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதே போன்று பிரீமியம், பிரெஸ்டிஜ் மற்றும் பிரெஸ்டிஜ் பிளஸ் வேரியண்ட்களின் விலை ரூ. 10 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது.

    புதிய விலை உயர்வை அடுத்து கியா கரென்ஸ் மாடலின் துவக்க விலை தற்போது ரூ. 10 லட்சம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17 லட்சத்து 70 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • கியா இந்தியா நிறுவனம் அக்டோபர் மாத விற்பனை விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
    • கியா நிறுவனத்தின் EV6 எலெக்ட்ரிக் மாடலின் வினியோகம் கடந்த மாதம் துவங்கியது.

    கியா இந்தியா நிறுவனம் 2022 அக்டோபர் மாதத்தில் மட்டும் 23 ஆயிரத்து 323 யூனிட்களை இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது. இதுதவிர 2022 நிதியாண்டில் கியா கார் விற்பனையில் இரண்டு லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. 2021 நிதியாண்டில் கியா நிறுவனம் 18 ஆயிரத்து 583 யூனிட்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக கியா நிறுவனம் அறிமுகம் செய்த EV6 எலெக்ட்ரிக் காரின் வினியோகத்தை ஜூன் மாத வாக்கில் துவங்கியது. கியா இந்தியா நிறுவனம் வருடாந்திர விற்பனையில் 43 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கியா நிறுவனத்தின் அதிகம் விற்பனையான கார்களில் செல்டோஸ் மாடல் முதலிடம் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து சொனெட் மற்றும் கரென்ஸ் மாடல்கள் இடம்பெற்றுள்ளன.

    மூன்று கார்களும் முறையே 9 ஆயிரத்து 777, 7 ஆயிரத்து 614 மற்றும் 5 ஆயிரத்து 479 யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. கடந்த ஆண்டு கியா இந்தியா நிறுவனத்தின் கார்னிவல் மாடல் 301 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. சமீபத்திய புதுவரவு எலெக்ட்ரிக் கார் கியா EV6 மாடல் இதுவரை 152 பேருக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

    • கியா நிறுவனத்தின் கேரன்ஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • எம்பிவி பிரிவில் அறிமுகம் செய்யப்பட்ட கேரன்ஸ் விலை மிகவும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    கியா இந்தியா நிறுவனம் தனது கேரன்ஸ் எம்பிவி மாடலை இந்திய சந்தையில் ரிகால் செய்ய முடிவு செய்துள்ளது. கேரன்ஸ் எம்பிவி மாடலில் உள்ள காற்றுப்பை மென்பொருளில் (Air Bag Control module) பிழை கண்டறியப்பட்டதே ரிகால் செய்வதற்கான காரணம் என கியா தெரிவித்து இருக்கிறது. இந்த பிழை காரின் எத்தனை யூனிட்களில் ஏற்பட்டு இருக்கிறது என்ற விவரங்களை கியா வெளியிடவில்லை.

    எனினும், கேரன்ஸ் காரில் ஏற்பட்டு இருக்கும் பிழை மென்பொருள் அப்டேட் மூலம் சரி செய்யப்பட்டு விடும். இதற்காக வாடிக்கையாளரிடம் இருந்து எவ்வித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. பாதிக்கப்பட்ட யூனிட்களை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களை கியா தொடர்பு கொண்டு காரில் ஏற்பட்ட பிரச்சினை குறித்து தகவல் தெரிவிக்கப்படும்.

    இது மட்டுமின்றி கேரன்ஸ் பயன்படுத்துவோர் தங்களின் டீலர்களை தொடர்பு கொண்டும் காரில் பிரச்சினை ஏற்பட்டு இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அதனை சரி செய்யும் முயற்சிகளை மேற்கொள்ளலாம். மேலும் கியா இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளம் அல்லது கியா செயலி மூலமாகவும் தங்களின் வாகனம் பாதிக்கப்பட்டு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளலாம்.

    • கியா இந்தியா நிறுவனம் ஏற்றுமதியில் புது மைல்கல் சாதனையை எட்டி அசத்தி இருக்கிறது.
    • இந்த மைல்கல்லை எட்ட கியா இந்தியா மூன்று ஆண்டுகளையே எடுத்துக் கொண்டுள்ளது.

    கியா இந்தியா நிறுவனம் ஏற்றுமதியில் 1 லட்சத்தி 50 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. இந்திய உற்பத்தியை துவங்கிய மூன்றே ஆண்டுகளில் கியா இந்தியா இத்தகைய சாதனையை எட்டி இருக்கிறது. இந்தியாவில் இருந்து உலகம் முழுக்க 95 நாடுகளுக்கு செல்டோஸ், சொனெட் மற்றும் கரென்ஸ் மாடல்களின் 1 லட்சத்து 50 ஆயிரத்து 395 யூனிட்களை கியா இந்தியா ஏற்றுமதி செய்து இருக்கிறது.

    ஒட்டுமொத்த ஏற்றுமதியில் கியா செல்டோஸ் மட்டும் 72 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. இதைத் தொடர்ந்து சொனெட் மற்றும் கரென்ஸ் மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 54 ஆயிரத்து 153 யூனிட்கள், ஆகஸ்ட் மாதத்தில் 8 ஆயிரத்து 174 யூனிட்களை கியா இந்தியா ஏற்றுமதி செய்து இருக்கிறது.


    இதன் மூலம் மாதாந்திர ஏற்றுமதியில் கியா புது சாதனை படைத்து இருக்கிறது. மத்திய கிழக்கு, ஆப்ரிக்கா, மத்திய மற்றும் தென்னமெரிக்கா, மெக்சிகோ மற்றும் ஆசிய பசிபிக் பகுதிகளுக்கு கியா இந்தியா தனது கார் மாடல்களை ஏற்றுமதி செய்து வருகிறது.

    "சர்வதேச அளவில் கியா நிறுவனத்திற்கு இந்தியா மிக முக்கியமான சந்தை ஆகும். இந்தியா எங்களின் விற்பனை, உற்பத்தி மற்றும் ஆய்வுக்கு மிக முக்கிய களமாக மாறி வருகிறது. கியா நெட்வொர்க்கில் அனந்தபூர் ஆலை ஏற்றுமதிக்கு சிறந்த தளமாக விளங்குகிறது. இந்த ஆலையில் இருந்து இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் தரமான வாகனங்களை அளித்து வருகிறோம்."

    "இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட மாடல்கள் உலக அரங்கில் நல்ல வரவேற்பை பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இது இந்தியாவின் உற்பத்தி திறனுக்கு சான்றாக அமைவதோடு, தரமான வாகனங்களை உற்பத்தி செய்து வாடிக்கையாளர் தேவையை பூர்த்தி செய்யும் திறன் நம்மிடம் அதிகம் இருக்கிறது என்பதை வெளிப்படுத்திக் காட்டுகிறது," என கியா இந்தியா நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைவர் மியுங் சிக் சோன் தெரிவித்து இருக்கிறார்.

    • கியா இந்தியா நிறுவனத்தின் புதிய சொனெட் X லைன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது.
    • புதிய X லைன் மாடல் டர்போ பெட்ரோல் மற்றும் டர்போ டீசல் வெர்ஷன்களில் கிடைக்கிறது.

    கியா இந்தியா நிறுவனம் புதிய சொனெட் X லைன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய சொனெட் X லைன் மாடலின் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எடிஷன் விலை ரூ. 13 லட்சத்து 39 ஆயிரம் என துவங்குகிறது. இதன் 1.5 லிட்டர் டர்போ டீசல் விலை ரூ. 13 லட்சத்து 99 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கியா சொனெட் X லைன் இரு வேரியண்ட்களும் டாப் எண்ட் ஆட்டோமேடிக் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு உள்ளன.

    புதிய X லைன் மாடல் காஸ்மெடிக் மாற்றங்களுடன் அறிமுகமாகி இருக்கிறது. அதன் படி புதிய கியா சொனெட் X லைன் மேட் கிராபைச், சேஜ் என டூயல் டோன் நிற இண்டீரியர், புதிய டிசைன் கொண்ட 16 இன்ச் அலாய் வீல்கள், ஆரஞ்சு நிற ஸ்டிட்ச்களை கொண்டிருக்கிறது. இந்திய சந்தையில் அதிக விற்பனையாகும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யுவியாக சொனெட் இருக்கிறது. புதிய X லைன் மாடல் பண்டிகை காலக்கட்டத்தில் விற்பனையை மேலும் அதிகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.


    கியா சொனெட் X லைன் பெட்ரோல் மாடலில் 1 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 118 ஹெச்பி பவர், 172 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு ட்வின் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    டீசல் மாடலில் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 115 ஹெச்பி பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    புதிய கியா சொனெட் X லைன் மாடலுக்கான முன்பதிவு நாடு முழுக்க அனைத்து கியா விற்பனை மையங்களிலும் துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய எஸ்யுவி மாடலை ஆன்லைனிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம். சொனெட் மட்டுமின்றி கியா செல்டோஸ் X லைன் மாடலும் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • கியா இந்தியா நிறுவனம் தனது சொனெட் மாடல் புது வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • இந்த சப்-4 மீட்டர் எஸ்யுவி மாடல் 2020 செப்டம்பர் மாத வாக்கில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

    கியா இந்தியா நிறுவனம் சொனெட் X லைன் மாடலுக்கான முதல் டீசரை வெளியிட்டு இருக்கிறது. இந்த சப்-4 மீட்டர் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் 2020 செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில், கியா சொனெட் X லைன் மாடல் விலை விவரங்கள் அந்நிறுவனத்தின் இரண்டாவது ஆண்டு விழாவின் போது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    கியா சொனெட் X லைன் மாடல் எக்ஸ்க்ளூசிவ் மேட் கிராபைட் நிறத்தில் கிடைக்கிறது. இந்த மாடல் முதன் முதலில் செல்டோஸ் X லைன் மாடலில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. டீசரின் படி X லைன் பேட்ஜிங் காரின் பின்புறமாக வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த காரில் காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டு பெரிய அலாய் வீல்கள், ஆரஞ்சு அக்செண்ட்கள், பிளாக்டு அவுட் எலிமெண்ட்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    காரின் உள்புறம் சொனெட் X லைன் மாடலில் புளூ நிற ஷேட் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிறத்தை கியா நிறுவனம் இண்டிகே பெரா என அழைக்கிறது. புதிய X லைன் வேரியண்ட் சொனெட் டாப் எண்ட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருப்பதால், இதில் அதிகளவு அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    கியா சொனெட் X லைன் மாடலிலும் 1 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம். சமீபத்தில் கியா நிறுவனம் தனது சொனெட் மாடல் விலையை ரூ. 34 ஆயிரம் வரை உயர்த்தியது.

    • கியா நிறுவனத்தின் செல்டோஸ் எஸ்யுவி மாடல் இந்திய விற்பனையில் தொடர்ந்து அசத்தி வருகிறது.
    • இந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி கியா நிறுவனம் இந்தியாவில் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

    கியா இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது செல்டோஸ் கார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான யூனிட் கள் விற்பனையாகி இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் அறிமுகமாகி மூன்று ஆண்டுகள் முடிவதற்குள் இந்த இலக்கை எட்டி இருப்பதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்து இருக்கிறது.

    ஆகஸ்ட் 22 ஆம் தேதி கியா இந்தியா தனது மூன்றாவது ஆண்டு விழாவை கொண்டாட இருக்கிறது. இது தவிர கியா செல்டோஸ் அறிமுகமாகியும் மூன்று ஆண்டுகள் முடிகிறது. இந்திய சந்தையில் கியா நிறுவனத்தின் அதிக பிரபலமான கார் மாடலாக கியா செல்டோஸ் விளங்குகிறது.


    இந்தியாவில் கியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் செல்டோஸ் மாடல் மட்டும் 60 சதவீத பங்குகளை கொண்டுள்ளது. விற்பனையில் மூன்று லட்சம் யூனிட்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் 91 நாடுகளுக்கு 1 லட்சத்து 03 ஆயிரத்து 033 செல்டோஸ் யூனிட்களை ஏற்றுமதி செய்து இருக்கிறது.

    சமீபத்தில் தான் கியா நிறுவனம் இந்திய விற்பனையில் ஐந்து லட்சம் யூனிட்களை கடந்து இருந்தது. இதில் செல்டோஸ் மாடல் மட்டும் 60 சதவீத பங்குகளை பெற்று இருந்தது. செல்டோஸ் ஒட்டுமொத்த விற்பனையில் டாப் எண்ட் மாடல் மட்டும் 58 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது.

    செல்டோஸ் பாடலை வாங்கிய பத்து பேரில் ஒருவர் iMT வேரியண்டை தேர்வு செய்து இருக்கின்றனர். செல்டோஸ் பாடலை பொருத்தவரை பெட்ரோல், டீசல் வேரியண்ட்கள் சம அளவு விற்பனையை பெற்றுள்ளன. 

    ×