search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "karuppasamy"

    மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கைதான ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 18-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. #NirmalaDevi
    மதுரை:

    அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி. இவர் அதே கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார்.

    மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் தூண்டுதலின் பேரிலேயே மாணவிகளை பாலியலுக்கு அழைத்ததாக நிர்மலா தேவி கூறினார். அதன் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டனர். 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் கருப்பசாமி தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், இந்த சம்பவத்தில் எனக்கு தொடர்பு இல்லை, விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவேன். எனவே எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

    அந்த மனு இன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனுதாரருக்கு ஜாமீன் வழங்குவது குறித்து தகவல் தெரிவிக்க கால அவகாசம் வேண்டும் என்றனர். அதனை நீதிபதி ஏற்றுக்கொண்டு கருப்பசாமி ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 18-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார். #NirmalaDevi
    அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் கைதான முருகன், கருப்பசாமி ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். #NirmalaDevi #Karuppasamy #Murugan
    விருதுநகர்:

    கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் வகையில் செல்போனில் பேசியதாக அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.



    இந்த நிலையில் தங்களுக்கு ஜாமீன் கேட்டு பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோர் விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    நீதிபதி முத்து சாரதா விசாரணை நடத்தி 2 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.#NirmalaDevi #Karuppasamy #Murugan

    அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் கைதான முருகன், கருப்பசாமி ஆகியோரின் ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. #NirmalaDevi #Karuppasamy #Murugan
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

    அவர் கொடுத்த தகவலின் பேரில் பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    முருகனும், கருப்பசாமியும் ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3-வது முறையாக மனு தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஜாமீன் வழங்குவதற்கு அரசு தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி இருவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்ததுடன், வழக்கு விசாரணையை வருகிற 5-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். #NirmalaDevi #Karuppasamy #Murugan
    அருப்புக்கோட்டை நிர்மலாதேவி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியின் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி. இவர் அந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளை பாலியலுக்கு அழைத்தது தொடர்பான உரையாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து கல்லூரி செயலாளர் ராமசாமி, அருப்புக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

    பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஜாமீன் கேட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி சிங்கராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் கருப்பசாமியின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, முருகனின் மனுவை விசாரணைக்காக 25-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.


    மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில் கைதான பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோருக்கு வருகிற 28-ந்தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. #NirmalaDevi #Murugan #Karuppasamy
    விருதுநகர்:

    அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரியின் பேராசிரியை நிர்மலா தேவி. இவர் அதே கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளை பாலியலுக்கு அழைத்தது தொடர்பாக கைது செய்யப்பட்டார்.

    சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரிடம் நடத்திய அதிரடி விசாரணையில் மதுரை பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரின் தூண்டுதலின் பேரிலேயே மாணவிகளை பாலியலுக்கு அழைத்ததாக கூறினார்.

    அதனைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர். கைதான 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    முருகன், கருப்பசாமியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து இருவரும் இன்று காலை மதுரை சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விருதுநகர் அழைத்துச் செல்லப்பட்டு ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் (எண்.1) ஆஜர்படுத்தப்பட்டனர்.

    அவர்களை வருகிற 28-ந் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு மும்தாஜ் உத்தரவிட்டார். முருகன் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதையொட்டி, அவரது மனைவி சுஜா கோர்ட்டுக்கு வந்திருந்தார்.

    அவர் நிருபர்களிடம் கூறும்போது, எனது கணவருக்கு ஜாமீன் கிடைத்த பிறகு உங்களை சந்திக்கிறேன். உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க நீங்கள் உதவ வேண்டும் என்றார். #NirmalaDevi #Murugan #Karuppasamy
    ×