search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிர்மலாதேவி விவகாரம்- பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைப்பு
    X

    நிர்மலாதேவி விவகாரம்- பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைப்பு

    அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் கைதான முருகன், கருப்பசாமி ஆகியோரின் ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. #NirmalaDevi #Karuppasamy #Murugan
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

    அவர் கொடுத்த தகவலின் பேரில் பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    முருகனும், கருப்பசாமியும் ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3-வது முறையாக மனு தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஜாமீன் வழங்குவதற்கு அரசு தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி இருவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்ததுடன், வழக்கு விசாரணையை வருகிற 5-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். #NirmalaDevi #Karuppasamy #Murugan
    Next Story
    ×