search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bail petition adjourned"

    அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக கைதான கருப்பசாமியின் ஜாமீன் மனுவை வருகிற 11-ந்தேதிக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை ஒத்திவைத்துள்ளது.
    மதுரை:

    கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்தது தொடர்பாக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார்.

    இவருக்கு உடந்தையாக இருந்த ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, பேராசிரியர் முருகன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் 3 பேரும் ஜாமீன் கேட்டு மாவட்ட நீதிமன்றங்களில் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் வழக்கின் தீவிரம் கருதி ஜாமீன் வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கருப்பசாமி ஜாமீன் கேட்டு 2-வது முறையாக மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கு இன்று நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் மீதான குற்றச்சாட்டு ஆவணங்களை தாக்கல் செய்யக்கோரி சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டு வழக்கை 11-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார். #NirmalaDevi #NirmalaDeviCase
    மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கைதான ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 18-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. #NirmalaDevi
    மதுரை:

    அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி. இவர் அதே கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார்.

    மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் தூண்டுதலின் பேரிலேயே மாணவிகளை பாலியலுக்கு அழைத்ததாக நிர்மலா தேவி கூறினார். அதன் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டனர். 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் கருப்பசாமி தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், இந்த சம்பவத்தில் எனக்கு தொடர்பு இல்லை, விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவேன். எனவே எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

    அந்த மனு இன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனுதாரருக்கு ஜாமீன் வழங்குவது குறித்து தகவல் தெரிவிக்க கால அவகாசம் வேண்டும் என்றனர். அதனை நீதிபதி ஏற்றுக்கொண்டு கருப்பசாமி ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 18-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார். #NirmalaDevi
    ×