search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karnataka government"

    கபினி அணை தண்ணீரை ஏரிகள் மற்றும் குளங்களில் கொண்டுபோய் நிரப்பும் பணியை கர்நாடக அரசு ஓசை இல்லாமல் செய்து வருகிறது. #KabiniDam #KarnatakaGovernment
    பெங்களூர்:

    கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் பீச்சனஹள்ளி பகுதியில் கபினி அணை உள்ளது.

    காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்த அணையின் மொத்த நீர் மட்டம் 84 அடியாகும்.

    நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணையில் 80.70 அடி தண்ணீர் உள்ளது.

    அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டாலும் கூட அணை தண்ணீரை ஏரிகள் மற்றும் குளங்களில் கொண்டுபோய் நிரப்பும் பணியை கர்நாடக அரசு ஓசை இல்லாமல் செய்து வருகிறது.

    நஞ்சன் கூடு பகுதியில் 2 ஏரிகளுக்கும், குண்டல்பேட்டையில் 10 ஏரிகளுக்கும் கபினி அணை தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இது தவிர பெலசவாடி, கமரஹள்ளி ஏரிகளிலும் நீரை நிரப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது.


    இதற்காக உள்ள நீரேற்று நிலையத்தில் உயர் கோபுர மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. இந்த மின் இணைப்பு கொடுக்கப்பட்ட பிறகு இந்த 2 ஏரிகளிலும் நீர் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் ஏரிகளில் கபினி அணை தண்ணீர் நிரப்பும் பணியை நிரஞ்சன் குமார் எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். #KabiniDam #KarnatakaGovernment
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக மாநில அரசை எதிர்பார்க்க தேவையில்லை என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறினார்.
    கீழ்வேளூர்:

    நாகை அடுத்த நாகூரில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசை எதிர்பார்க்க தேவையில்லை. வாரியத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது

    தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களை, அரசுத் துறைகளில் இணை செயலாளர்களாக நியமிக்கலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

    மேலும், நிர்வாக சீர்கேட்டிற்கு வழி வகுக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் சங் பரிவார அமைப்புகளை அரசு துறைகளில் உள்ளே கொண்டு வரவே மத்திய அரசு இந்த முயற்சியை எடுத்துள்ளது. புதுச்சேரி அரசு நிர்வாகத்தை தன் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வர மத்திய பா.ஜ.க அரசு முயற்சிக்கிறது. இதை ஒரு போதும் புதுச்சேரி அரசு ஏற்றுக் கொள்ளாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை குமாரசாமி கொடுக்கா விட்டால் அவருடைய அரசு நீடிக்காது என்று தனியரசு தெரிவித்துள்ளார்.

    ஒமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் தனியரசு எம்.எல்.ஏ., நிருபரிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி பகுதி பொதுமக்கள் மிகுந்த துயரத்தோடும், துன்பத்தோடும் கடந்த 100 நாட்களாக அமைதி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 100-வது நாள் அந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அமைதியாக மனுகொடுக்கும் நிகழ்வை அரசு முன்கூட்டியே உளவுத்துறை மூலம் கண்டறிந்து அந்த மனுவின் மீது தக்க நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த துயரசம்பவம் நடந்திருக்காது. ஒட்டு மொத்த இந்தியாவின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தூத்துக்குடி பகுதி பொதுமக்கள் அறவழி போராட்டத்தை நடத்திவந்தனர். இதில் 13 பேரை சுட்டு வீழ்த்திய இந்த தமிழக அரசு அந்த மக்களை கையாண்ட முறை வேதனையளிக்கிறது.

    இந்த துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு முதல்வர் தரும் இழப்பீடு குறைவானது. முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உயிரை கொடுத்து உருவாக்கிய அரசு இந்த அ.தி.மு.க அரசு. தற்பொழுது பொறுப்பேற்று கொண்ட எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் இருவரும் சேர்ந்து இனிமேல் இதுபோல சம்பவம் நடக்காது என உறுதி கொடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உறுதியளிக்க வேண்டும்.

    தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை குமாரசாமி கொடுக்கா விட்டால் அவருடைய அரசு நீடிக்காது, உச்சநீதிமன்றமும் கர்நாடக அரசுகுக்கு துணைபோனால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை போல் வன்முறை போராட்டத்தை தமிழக மக்கள் கையில் எடுப்பார்கள். உலகத்திலேயே எந்த அரசும் பொதுமக்களுக்கு கொடுக்காத சுமையை மத்தியில் ஆளுகின்ற மோடி அரசு கொடுத்து வருகிறது. பெட்ரோல் டீசல் விலையை வரலாறு காணாத விலையேற்றத்தை மத்திய அரசு ஏற்றியுள்ளது. இதே நிலை நீடித்தால் இந்தியாவிலேயே ஒரு பாராளுமன்ற உறுப்பினர்களை கூட பெறமுடியாத சூழ்நிலை வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கர்நாடக மாநில முதல் மந்திரியாக குமாரசாமி நாளை பதவியேற்கவுள்ள நிலையில் காங்கிரஸ் சார்பில் முஸ்லிம் எம்.எல்.ஏ. ஒருவருக்கு துணை முதல் மந்திரி பதவி அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. #KarnatakaDeputyCM
    பெங்களூரு:

    மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி நாளை கர்நாடக மாநில முதல் மந்திரியாக பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பா.ஜ.க. ஆட்சி நடைபெறாத மாநிலங்களை சேர்ந்த கட்சி தலைவர்களும், அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, சந்திரசேகரராவ், சந்திரபாபு நாயுடு உள்ளிட்டவர்களும் பங்கேற்கின்றனர்.



    முதல் மந்திரி குமாரசாமி தலைமையில் நாளை புதிதாக அமையும் மந்திரிசபையில் காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல் மந்திரி பதவி கிடைக்கலாம். இதுதவிர சில முக்கிய துறைகளுக்கான மந்திரி பதவியும் தங்களது கட்சியை சேர்ந்தவர்களுக்கு கிடைக்கும் என கர்நாடக மாநில காங்கிரசார் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் முஸ்லிம் எம்.எல்.ஏ. ஒருவருக்கு துணை முதல் மந்திரி பதவி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை இன்று எழும்பியுள்ளது.

    இதுதொடர்பாக, கர்நாடக மாநில முஸ்லிம்கள் கூட்டமைப்பின் சார்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் சட்டசபை உறுப்பினராக 7 முறை பதவி வகித்துள்ள சிவாஜிநகர் எம்.எல்.ஏ. ரோஷன் பேக் என்பவரை துணை முதல் மந்திரியாக நியமிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தங்களது கோரிக்கைக்கு பலம் சேர்க்கும் வகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மூத்த காங்கிரஸ் முஸ்லிம் தலைவரும், கர்நாடக சட்ட மேல்சபை உறுப்பினருமான ஒருவர் கூறியதாவது:-

    இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 78 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு முஸ்லிம்கள் பாரபட்சமின்றி அளித்த வாக்குகள்தான் காரணம். எனவே, சிவாஜிநகர் எம்.எல்.ஏ. ரோஷன் பேக் அல்லது முஸ்லிம் எம்.எல்.ஏ. ஒருவருக்கு துணை முதல் மந்திரி பதவியை கட்சியின் தலைமை அளிக்க வேண்டும்.

    காங்கிரஸ் கட்சிக்கு முஸ்லிம்களான நாங்கள் நிறைய தியாகங்களை செய்திருக்கிறோம். அதனால், எங்களை சேர்ந்தவர் முதல் மந்திரியாக வேண்டும் என்று இப்போது வலியுறுத்துகிறோம். எங்களது பங்களிப்பையும், ஆதரவையும் அங்கீகரிக்க தவறினால் காங்கிரசுக்கு முஸ்லிம் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #KarnatakaDeputyCM
    ×