search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கபினி அணை தண்ணீரை ஏரிகளில் நிரப்பும் கர்நாடக அரசு
    X

    கபினி அணை தண்ணீரை ஏரிகளில் நிரப்பும் கர்நாடக அரசு

    கபினி அணை தண்ணீரை ஏரிகள் மற்றும் குளங்களில் கொண்டுபோய் நிரப்பும் பணியை கர்நாடக அரசு ஓசை இல்லாமல் செய்து வருகிறது. #KabiniDam #KarnatakaGovernment
    பெங்களூர்:

    கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் பீச்சனஹள்ளி பகுதியில் கபினி அணை உள்ளது.

    காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்த அணையின் மொத்த நீர் மட்டம் 84 அடியாகும்.

    நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணையில் 80.70 அடி தண்ணீர் உள்ளது.

    அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டாலும் கூட அணை தண்ணீரை ஏரிகள் மற்றும் குளங்களில் கொண்டுபோய் நிரப்பும் பணியை கர்நாடக அரசு ஓசை இல்லாமல் செய்து வருகிறது.

    நஞ்சன் கூடு பகுதியில் 2 ஏரிகளுக்கும், குண்டல்பேட்டையில் 10 ஏரிகளுக்கும் கபினி அணை தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இது தவிர பெலசவாடி, கமரஹள்ளி ஏரிகளிலும் நீரை நிரப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது.


    இதற்காக உள்ள நீரேற்று நிலையத்தில் உயர் கோபுர மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. இந்த மின் இணைப்பு கொடுக்கப்பட்ட பிறகு இந்த 2 ஏரிகளிலும் நீர் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் ஏரிகளில் கபினி அணை தண்ணீர் நிரப்பும் பணியை நிரஞ்சன் குமார் எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். #KabiniDam #KarnatakaGovernment
    Next Story
    ×