என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "jewellery theft"
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் காங்கயம்- ஈரோடு சாலை வரதப்பம் பாளையத்தை சேர்ந்தவர் ஹரி. இவரது மனைவி பவித்ரவள்ளி. இவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டவர்.
பொங்கல் பண்டிகையையொட்டி ஹரி தனது குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட கொள்ளை கும்பல் ஹரி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை திறந்து அதில் வைக்கப்பட்டு இருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள 2 வைர வளையல், ரூ. 10 ஆயிரம் ரொக்கப்பணம், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.
வெளியூர் சென்று வீடு திரும்பிய ஹரி தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு நகை, பணம் திருட்டு போய் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து காங்கயம் போலீசில் புகார் செய்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் அங்கு விரைந்து வந்தனர். அங்கு பதிவாகி இருந்த தடயங்களை கைரேகை நிபுணர்கள் சேகரித்தனர்.
இந்த திருட்டு தொடர்பாக பவித்ரவள்ளி வீட்டில் வேலை பார்த்து வரும் 17 வயது சிறுவனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் தான் வைர நகை -பணத்தை திருடி சென்று இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலை அடுத்த களியங்காடு வட்டப்பாறை பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 34). இவர் டெம்போ டிரைவராக உள்ளார்.
சம்பவத்தன்று இரவு குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். காலையில் எழுந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்களும் சிதறிக் கிடந்தது.
அங்கு சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ஒரு பவுன் செயின் ஒன்று, ¾ பவுனில் ஒரு ஜோடி கம்மல் ஆகியவற்றை வீடு புகுந்து கொள்ளையடித்துச் சென்று இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து இரணியல் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ஞானசிகாமணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற் கொண்டனர்.
மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பூட்டு உடைக்கப்பட்ட இடம் மற்றும் பீரோக்களில் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. வீட்டில் இருந்து மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடிச் சென்று நின்றது.
வீட்டில் ஆட்கள் தூங்கிக் கொண்டு இருக்கும்போதே இந்த கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் அங்கு கண்காணிப்பு காமிராக்கள் உள்ளதா? அதில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவகோட்டை காந்தி ரோட்டில் வசிப்பவர் அசன்மைதீன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ரசிதாபானு. இவர் தந்தை இறந்து விட்டதால், வீட்டை பூட்டி விட்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். பின்பு வீட்டிற்கு வந்த ரசிதாபானு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த பொருட்கள் வீடு முழுவதும் சிதறி கிடந்தது.
மேலும் அதில் இருந்த 16 பவுன் நகைகள் திருடு போயிருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து அவர் தேவகோட்டை நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கையில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள மேலமாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி செந்தமிழ்ச்செல்வி(வயது 40). இவர் குன்னம் அருகே உள்ள ஒதியம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். முத்துசாமி வீட்டுடன் இணைந்த கடை வைத்து நடத்தி வருகிறார். செந்தமிழ்ச்செல்வி மேலமாத்தூரில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரம் உள்ள பள்ளிக்கு தினமும் தனது மொபட்டில் வந்து செல்வது வழக்கம். இவர் நகை அணிந்து தனியாக மொபட்டில் வந்து செல்வதை மர்ம நபர்கள் நோட்டமிட்டு உள்ளனர். இந்தநிலையில் நேற்று காலை செந்தமிழ்ச்செல்வி தனியாக தனது மொபட்டில் பள்ளிக்கு சென்றார். அப்போது ஒதியம் சமத்துவபுரத்தில் இருந்து 2 மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த 2 பேரும், பனிக் குல்லா அணிந்த 2 பேரும் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.
சமத்துவபுரம் தாண்டி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் செந்தமிழ்செல்வியை ஓரம்கட்டி மொபட்டில் இருந்து கீழே ஓடையில் தள்ளி, கத்தியை காட்டி மிரட்டி தாலி சங்கிலி, 2 தங்க சங்கிலிகள் என மொத்தம் 9 பவுன் நகைகளை பறித்து சென்றனர்.
மேலும் காதில் அணிந் திருந்த தோட்டை அறுத்து எடுக்க முற்பட்டபோது வேன் ஒன்று அந்த வழியாக வந்ததால் அப்படியே ஆசிரியை விட்டு விட்டு 9 பவுன் நகைகளுடன் மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். மேலும் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
காணை அருகே உள்ள ஆரியூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 39), செங்கல் சூளை தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் அதே கிராமத்தில் செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் வேலை முடிந்ததும் மாலையில் மணிகண்டன் குடும்பத்தினர் வீட்டிற்கு சென்றனர்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டனர். உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்ட நிலையில், அதில் வைத்திருந்த 8½ பவுன் நகையை காணவில்லை. மணிகண்டன் குடும்பத்தினர் வேலைக்கு சென்றதை நோட்டமிட்டு மர்மநபர்கள், கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகையை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. திருட்டுப்போன நகையின் மதிப்பு ரூ.1¾ லட்சமாகும். இதுகுறித்த புகாரின்பேரில் காணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரியில் புதிய வீட்டு வசதி வாரியம் அருகில் சத்யசாய் நகரில் குடியிருந்து வருபவர் பெருமாள். இவர் பழைய சப்-ஜெயில் சாலையில் உள்ள நகராட்சி பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கீதா பாப்பாரப்பட்டி நகராட்சி பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். நேற்று அவர்கள் வழக்கம் போல பள்ளிக்கு சென்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து பெருமாள் வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த 1½ லட்சம் ரூபாய், 25 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை காணவில்லை. மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. கொள்ளை போன நகைகள், பணத்தின் மொத்த மதிப்பு ரூ. 8 லட்சம் எனக்கூறப்படுகிறது.
இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் பெருமாள் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதே போல கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்து கொண்டனர்.
வீட்டின் மாடி வழியாக கொள்ளையர்கள் உள்ளே இறங்கி கதவை உடைத்து வீட்டிற்குள் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்றது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கொள்ளை தொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கிருஷ்ணகிரியில் பட்டப்பகலில் தலைமை ஆசிரியர் வீட்டில் ரூ.8 லட்சம் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலையை அடுத்த சேரியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன் (வயது 35), கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டை பூட்டிவிட்டு அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கினார். நேற்று காலை 6 மணிக்கு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த 4 பவுன் நகை, ரூ.21 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசில் இளவரசன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள சிங்களாந்தபுரம் காந்தி நகர் காலனியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 50), விவசாயி. இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவியும், ராஜா (25) என்ற மகன், ஜெயம்மாள் என்ற மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. என்ஜினீயரான ராஜா கோவையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ரம்யா தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். தற்போது வீட்டில் தங்கவேல், அவருடைய மனைவி, மருமகள் ரம்யா ஆகியோர் இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை தங்கவேல் மனைவியுடன் அதே பகுதியில் உள்ள அவர்களது தோட்டத்துக்கு சென்று விட்டார். மருமகள் ரம்யாவும் 8.30 மணியளவில் கல்லூரிக்கு வேலைக்கு சென்று விட்டார்.
மாலையில் ரம்யா வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள், துணிகள் சிதறி கிடந்தது.
பீரோவில் இருந்த 26¾ பவுன் நகைகள் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து ரம்யா தங்கவேலுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து பேளுக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன், பேளுக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் அங்கு பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர். அதேபோல் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. அது அங்கும், இங்கும் ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த நகை திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள் யார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ள அம்புஜவல்லிபேட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மனைவி கலா (வயது 37). இவர் சம்பவத்தன்று இரவு மாமியார், குழந்தைகளுடன் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவை நைசாக திறந்து மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர்.
பின்னர் தூங்கிக்கொண்டிருந்த கலா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை மர்மநபர்கள் பறித்தனர். இதில் திடுக்கிட்டு எழுந்த அவர், திருடன், திருடன் என சத்தம்போட்டார். இதனால் வீட்டில் இருந்தவர்களும், அக்கம் பக்கத்தினரும் எழுந்து அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் மர்மநபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் அருகே பேடரப்பள்ளி நந்தவன லே-அவுட் பகுதியை சேர்ந்த அமுதேஸ்வரி என்பவரது வீட்டில் கடந்த ஜூன் மாதம் 25-ந் தேதி, இரவு மர்ம ஆசாமிகள் பின்பக்க ஜன்னல் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 56 பவுன் நகைகளை கொள்ளையடித்து தலைமறைவாகி விட்டனர்.
இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வந்தனர். மேலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் உத்தரவின்பேரில், ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி மேற்பார்வையில், சிப்காட் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய சக்திவேல்(வயது 35) என்பவரை போலீசார் நேற்று, ஓசூர் ஜூஜூவாடி சோதனைச் சாவடி அருகே கைது செய்தனர். இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கங்குந்தி கிராமத்தை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் சக்திவேலிடமிருந்து ரூ. 6 லட்சம் மதிப்புள்ள நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். குற்றவாளியை பிடித்து, நகைகளை மீட்ட சிப்காட் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் பாராட்டி, பரிசு வழங்கினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்