search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dmk woman volunteer"

    காங்கயத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி தி.மு.க. பெண் பிரமுகர் வீட்டில் வைர நகை மற்றும் பணம் திருட்டு போனது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம்- ஈரோடு சாலை வரதப்பம் பாளையத்தை சேர்ந்தவர் ஹரி. இவரது மனைவி பவித்ரவள்ளி. இவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டவர்.

    பொங்கல் பண்டிகையையொட்டி ஹரி தனது குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட கொள்ளை கும்பல் ஹரி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை திறந்து அதில் வைக்கப்பட்டு இருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள 2 வைர வளையல், ரூ. 10 ஆயிரம் ரொக்கப்பணம், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.

    வெளியூர் சென்று வீடு திரும்பிய ஹரி தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு நகை, பணம் திருட்டு போய் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து காங்கயம் போலீசில் புகார் செய்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் அங்கு விரைந்து வந்தனர். அங்கு பதிவாகி இருந்த தடயங்களை கைரேகை நிபுணர்கள் சேகரித்தனர்.

    இந்த திருட்டு தொடர்பாக பவித்ரவள்ளி வீட்டில் வேலை பார்த்து வரும் 17 வயது சிறுவனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் தான் வைர நகை -பணத்தை திருடி சென்று இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    ×