என் மலர்
செய்திகள்

திருவண்ணாமலை அருகே கட்டிட மேஸ்திரி வீட்டில் நகை, பணம் திருட்டு
திருவண்ணாமலை அருகே கட்டிட மேஸ்திரி வீட்டில் நகை, பணம் திருடி சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையை அடுத்த சேரியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன் (வயது 35), கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டை பூட்டிவிட்டு அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கினார். நேற்று காலை 6 மணிக்கு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த 4 பவுன் நகை, ரூ.21 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசில் இளவரசன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலையை அடுத்த சேரியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன் (வயது 35), கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டை பூட்டிவிட்டு அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கினார். நேற்று காலை 6 மணிக்கு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த 4 பவுன் நகை, ரூ.21 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசில் இளவரசன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Next Story