என் மலர்
செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை திருட்டு
தேவகோட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 16 பவுன் நகையை திருடி சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவகோட்டை:
தேவகோட்டை காந்தி ரோட்டில் வசிப்பவர் அசன்மைதீன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ரசிதாபானு. இவர் தந்தை இறந்து விட்டதால், வீட்டை பூட்டி விட்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். பின்பு வீட்டிற்கு வந்த ரசிதாபானு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த பொருட்கள் வீடு முழுவதும் சிதறி கிடந்தது.
மேலும் அதில் இருந்த 16 பவுன் நகைகள் திருடு போயிருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து அவர் தேவகோட்டை நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கையில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டது.
தேவகோட்டை காந்தி ரோட்டில் வசிப்பவர் அசன்மைதீன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ரசிதாபானு. இவர் தந்தை இறந்து விட்டதால், வீட்டை பூட்டி விட்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். பின்பு வீட்டிற்கு வந்த ரசிதாபானு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த பொருட்கள் வீடு முழுவதும் சிதறி கிடந்தது.
மேலும் அதில் இருந்த 16 பவுன் நகைகள் திருடு போயிருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து அவர் தேவகோட்டை நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கையில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டது.
Next Story






