என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Jay Shah"
- ஆதரவு அளித்த சக ஐசிசி இயக்குநர்களுக்கு கிரேக் பார்க்லே நன்றி தெரிவித்தார்
- ஐசிசி நிகழ்வுகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை ஐசிசியின் நிதி மற்றும் வணிக விவகாரக் குழு கவனிக்கிறது.
மெல்போர்ன்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக நியூசிலாந்தின் கிரேக் பார்க்லே ஒருமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜிமாப்வேயின் தாவெங்வா முகுலானி போட்டியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து பார்க்லேவுக்கு ஐசிசி வாரியம் தனது முழு ஆதரவை தெரிவித்தது. இதன்மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பார்க்லே தலைவர் பதவியில் இருப்பார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது பெருமையாக உள்ளது என்றும், தனக்கு ஆதரவு அளித்த சக ஐசிசி இயக்குநர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பார்க்லே கூறினார்.
இதேபோல், இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளராக பொறுப்பு வகிக்கும் ஜெய் ஷா, ஐசிசி-யின் நிதி மற்றும் வணிக விவகாரக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐசிசி நிகழ்வுகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் உறுப்பினர் நாடுகளுக்குப் பணத்தை விநியோகம் செய்வதை ஐசிசியின் நிதி மற்றும் வணிக விவகாரக் குழு கவனிக்கிறது. இந்த குழுவின் தலைவராக உள்ள ரோஸ் மெக்கோலம் விரைவில் ஓய்வுபெற உள்ள நிலையில், அவருக்கு பின் தலைவராக ஜெய் ஷா பதவியேற்க உள்ளார்.
- இது விளையாட்டில் பாலின சமத்துவத்தை நோக்கிய வரவேற்கத்தக்க நடவடிக்கை.
- ஜெய்ஷா அறிவிப்புக்கு முன்னாள் வீராங்கனை அஞ்சலி சர்மா வரவேற்பு.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று பின்னர் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
பாலியல் பாகுபாட்டை சரி செய்யும் வகையில் பிசிசிஐ முதல் நடவடிக்கை எடுத்துள்ளது குறித்து அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நாங்கள் ஊதிய சமத்துவத்தை செயல்படுத்த உள்ளோம். இந்திய மகளிர் அணிக்கு, ஆண்கள் அணிக்கு நிகராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ரூ.15 லட்சமும், ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சமும், டி20 போட்டிக்கு 3 லட்சமும் ஊதியமாக வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பி.சி.சி.ஐ.யின் இந்த அறிவிப்புக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இது விளையாட்டில் பாலின சமத்துவத்தை நோக்கிய வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இந்தியாவின் புத்திசாலித்தனமான முன்னற்ற நடவடிக்கையாக இது கருதப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதேபோல் பிசிசிஐயின் அறிவிப்புக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை அஞ்சலி சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டில் பங்கேற்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் இடையேயான ஊதிய இடைவெளியைக் குறைக்கும் இந்த நடவடிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு மட்டுமல்ல,உலகெங்கிலும் உள்ள அனைத்து விளையாட்டு வீராங்கனைகளுக்கும் ஊக்கமளிக்கும் நடவடிக்கையாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிசிசிஐ அறிவிப்புக்கு விராட்கோலியும் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
- 2023 ஆசிய கோப்பை போட்டி நடுநிலையான இடத்தில் நடத்தப்படும்
- இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்வது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்யும்.
மும்பை:
அடுத்த ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அட்டவணைப்படி பாகிஸ்தானில் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய் ஷா, ஆசிய கோப்பை போட்டியில் விளையாட இந்திய அணி,பாகிஸ்தான் செல்லாது என தெரிவித்தார்.
2023 ஆசிய கோப்பை போட்டி நடுநிலையான இடத்தில் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்யும் என்றும், இதில் நாங்கள் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டோம் என்றும் அவர் கூறினார் ஆனால் 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட போட்டி தொடரை நடுநிலையான இடத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
- நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்தது.
- நிர்வாகிகள் 12 ஆண்டுகள் தொடர்ந்து பதவியில் இருக்க முடியும்
புதுடெல்லி:
மாநில கிரிக்கெட் சங்கங்கள் மற்றும் பிசிசிஐ ஆகியவற்றில் உள்ள நிர்வாகிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் வகையில் சட்ட விதிகளில் மாற்றம் செய்ய அனுமதி கோரி பிசிசிஐ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மாநில கிரிக்கெட் சங்கம் அல்லது பி்சிசிஐ-யில் ஆறு ஆண்டுகள் பதவி வகித்தால் மூன்று ஆண்டுகள் கழித்துதான் மீண்டும் பதவி வகிக்க முடியும் என்று விதி உள்ளது. கட்டாயம் இடைவெளி விட வேண்டும் என்ற இந்த விதியை (cooling-off period) மாற்ற அனுமதிக்கும்படி பிசிசிஐ தனது மனுவில் தெரிவித்திருந்தது.
இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு, சட்ட விதிகளை மாற்ற பிசிசிஐக்கு அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம், கிரிக்கெட் சங்கத் தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் பதவியில் தொடரமுடியும்.
மாநில கிரிக்கெட் சங்கங்களில் ஆறு ஆண்டுகள் மற்றும் பிசிசிஐயில் ஆறு ஆண்டுகள் என நிர்வாகிகள் 12 ஆண்டுகள் தொடர்ந்து பதவியில் இருக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. பிசிசிஐயில் ஒருவர் ஒரு பதவியில் இரண்டு முறை தலா 3 ஆண்டுகள் தொடர்ந்து பதவி வகிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- துபாயில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
- இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் ஜெய்ஷா இந்தப் போட்டியை நேரில் ரசித்தார்.
புதுடெல்லி:
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் துபாயில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
இந்த வெற்றியை மைதானத்தில் இருந்த ரசிகர்களும், போட்டியை டெலிவிஷனில் பார்த்த ரசிகர்களும் கொண்டாடினார்கள்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் ஜெய்ஷா இந்தப் போட்டியை நேரில் ரசித்தார். இந்தியா வெற்றி பெற்றதும் அவர் கைதட்டி ஆரவாரம் செய்தார்.
அப்போது ஒருவர் அவரது கையில் தேசிய கொடியை கொடுக்க வந்தார். ஆனால் ஜெய்ஷா தேசிய கொடியை வாங்க மறுத்தார்.
வெற்றி கொண்டாட்டத்தில் ஜெய்ஷா தேசிய கொடியை வாங்க மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஜெய்ஷா மறுக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. எதிர்க்கட்சியினர் இந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள். இது தொடர்பாக ஜெய்ஷாவை பலரும் விமர்சனம் செய்கிறார்கள்.
Jay Shah seems to have strong influence of his RSS ancestors 👇 pic.twitter.com/FmvF5RVcvI
— YSR (@ysathishreddy) August 28, 2022
இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த படி டி.ஆர்.எஸ். தலைவர் ஒருவர் கூறும்போது, "இதுவே பா.ஜனதாவை சேராத ஒருவர் கொடியை ஏற்க மறுத்து இருந்தால் அந்த நபர் தேச விரோதி ஆக்கப்பட்டு இருப்பார்.
நாள்முழுவதும் விவாதமாக்கப்பட்டு இருக்கும். அதிர்ஷ்டவசமாக அது ஹாஹின்ஷாவின் மகன் ஜெய்ஷா ஆகிவிட்டார் என கிண்டலுடன் தெரிவித்தார்.
இதே வீடியோவை மராட்டிய மாநில காங்கிரஸ் கட்சியும் பகிர்ந்துள்ளது. உள்துறை மந்திரியின் மகன் தேசிய கொடியை வாங்க மறுத்தது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்