search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ISL"

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூர் மற்றும் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. #ISL2018 #NorthEastUnitedFC #JamshedpurFC
    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஜாம்ஷெட்பூர் எப்.சி மற்றும் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணியின் பர்த்தலோமியூ முதல் கோல் அடித்தார். இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதியில் நார்த்ஈஸ்ட் அணி 1-0 என முன்னிலை வகித்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஜாம்ஷெட்பூர் அணியை சேர்ந்த பருக் சவுத்ரி 49-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமனிலைக்கு கொண்டு வந்தார். அதன்பின்னர், ஆட்டத்தின் இறுதி வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    இறுதியில், ஜாம்ஷெட்பூர், நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1 -1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

    இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் ஜாம்ஷெட்பூர் அணி முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. #ISL2018 #NorthEastUnited #JamshedpurFC
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி அணியை 5 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கோவா அணி அபார வெற்றி பெற்றது. #ISL2018 #FCGoa #MumbaiCityFC
    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கோவாவில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் எப்.சி. கோவா அணியும், மும்பை சிட்டி எப்.சி அணியும் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே கோவா அணியினர் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் 6-வது நிமிடத்தில் பெரான் கரோமினஸ் முதல் கோல் அடித்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் 1-0 என கோவா அணி முன்னிலை வகித்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 55வது நிமிடத்தில் ஜாக்சந்த் சிங் ஒரு கோலும், 61-வது நிமிடத்தில் எடு பீடியா ஒரு கோலும், 84 மற்றும் 90 வது நிமிடத்தில் பலங்கா பெர்னாண்டசும் கோல் அடித்தனர்.

    இறுதியில், எப்.சி. கோவா அணி 5 - 0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி எப்.சி. அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் கோவா முதல் இடத்துக்கு முன்னேறியது. #ISL2018 #FCGoa #MumbaiCityFC
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி அணிக்கும், டெல்லி டைனமோஸ் அணிக்கும் இடையிலான ஆட்டம் சமனிலையில் முடிந்தது. #ISL2018 #DelhiDynamos #ChennaiyinFC
    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னையின் எப்.சி, டெல்லி டைனமோஸ் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து இரு அணிகளும் நிதானமாக ஆடின. கோல் அடிக்க கிடைத்த வாய்ப்புகளை இரண்டு அணியினரும் பயன்படுத்தி கொள்ளவில்லை. இதனால் எந்த அணியும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.

    இறுதியில், சென்னையின் எப்.சி. அணிக்கும், டெல்லி டைனமோஸ் அணிக்கும் இடையிலான ஆட்டம் சமனிலையில் முடிந்தது. #ISL2018 #DelhiDynamos #ChennaiyinFC
    புனேவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் எப்.சி புனே சிட்டி அணியை 3 - 0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எப்.சி. அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. #ISL2018 #BengaluruFC #FCPuneCity
    புனே:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் புனேவில் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு எப்.சி, எப்.சி. புனே சிட்டி அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து இரு அணிகளும் நிதானமாக ஆடின. முதல் பாதியின் இறுதியில் பெங்களூரு அணியை சேர்ந்த சுனில் சேத்ரி அடுத்தடுத்து 41 மற்றும் 43 வது நிமிடங்களில் கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.

    இதையடுத்து, முதல் பாதியில் பெங்களூரு அணி 2-0 என முன்னிலை வகித்தது. பெங்களூரு அணியினரின் ஆட்டத்துக்கு புனே அணியினரால் ஈடுகொடுக்க முடியவில்லை.



    ஆட்டத்தின் 64வது நிமிடத்தால் மிக்கு ஒரு கோல் அடித்தார். அதன்பின் ஆட்ட நேர இறுதிவரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    இறுதியில், பெங்களூரு அணி புனே அணியை 3 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. அத்துடன் புள்ளிப்பட்டியலில்  முதலிடத்தையும் பெற்றுள்ளது. #ISL2018 #BengaluruFC #FCPuneCity
    மும்பையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் புனே அணியை 2-0 என்ற கோல் கணக்கில் மும்பை அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. #ISL2018 #MumbaiCityFC #FCPuneCity
    மும்பை:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மும்பையில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை சிட்டி எப்.சி, எப்.சி புனே சிட்டி அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில்  மும்பை மொடோ சுகோ முதல் கோல் அடித்தார். தொடர்ந்து, ரபெல் பாஸ்டோஸ் 45வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, 2-0 என்ற கோல் கணக்கில் முதல் பாதியில் முன்னிலை வகித்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எந்த அணியினரும் கோல் அடிக்கவில்லை. இறுதியில், மும்பை அணி 2-0 என்ற கோல் கணக்கில் புனே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. மும்பை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. 

    இந்தப் போட்டியில் தோல்வியடைந்தன் மூலம் நடப்பு ஐஎஸ்எல் கால்பந்து சீசனின் முதல் 2 போட்டிகளிலும் புனே அணி தோல்வியடைந்துள்ளது. #ISL2018 #MumbaiCityFC #FCPuneCity
    சென்னையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி அணியை 4-3 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. #ISL2018 #ChennaiyinFC #NorthEastUnited
    சென்னை:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சென்னையில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னையின் எப்.சி, நார்த் ஈஸ்ட் பைபிள் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 4-வது நிமிடத்தில் சென்னை அணியின் ரவ்லின்  பார்கெஸ் முதல் கோல் அடித்தார். தொடர்ந்து, தாய் சிங் 15 மற்றும் 32-வது நிமிடங்களில் ஒரு கோல் அடித்தார்.

    நார்த் ஈஸ்ட் அணி சார்பில் பர்த்தலோமியூ 29, 37, 39-வது நிமிடங்களில் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் நார்த் ஈஸ்ட் அணியினர் 54வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது வெற்றியை உறுதி செய்தனர்.

    இந்தப் போட்டியில் தோல்வியடைந்தன் மூலம் நடப்பு ஐஎஸ்எல் கால்பந்து சீசனின் முதல் 3 போட்டிகளிலும் சென்னை அணி தோல்வியடைந்துள்ளது. #ISL2018 #ChennaiyinFC #NorthEastUnited
    சென்னையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி அணியை 3 -1 என்ற கோல் கணக்கில் எப்.சி. கோவா அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. #ISL2018 #ChennaiyinFC #FCGoa
    சென்னை:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சென்னையில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னையின் எப்.சி, எப்.சி. கோவா அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் கோவா அணியின் எடு பெடியா முதல் கோலை அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் கோவா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 53-வது நிமிடத்தில் கோவா அணியின் பெரான் கரோமினாஸ் ஒரு கோலும், 80-வது நிமிடத்தில் மோர்டடா பால் ஒரு கோலும் அடித்தனர். இதனால் கோவா அணி 3 - 0 என முன்னேறியது. 
     
    கடைசியாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் இறுதியில் சென்னையி எப்.சி அணி சார்பில் ஈலி சபியா ஒரு கோல் அடித்தார்.

    இறுதியில், சென்னையின் எப்.சி அணியை 3-1 என்ற கணக்கில் கோவா அணி வீழ்த்தி வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்தது. #ISL2018 #ChennaiyinFC #FCGoa
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மும்பை எப்.சி மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. #ISL2018 #KeralaBlasters #MumbaiCityFC
    கொச்சி:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி சமீபத்தில் தொடங்கியது. இதில் கொச்சியில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை சிட்டி எப்.சி, கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின.

    இரு அணிகளும் தொடக்கத்தில் இருந்தே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின. ஆட்டத்தின் 24-வது நிமிடத்தில் கேரளா அணியின் ஹலிசரண் நர்ஜாரி ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். முதல் பாதியின் இறுதியில் கேரளா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.



    இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து, கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. கூடுதல் நேரத்தின் 93-வது நிமிடத்தில் மும்பை அணியின் பிரஞ்சால் பூமிஜ் ஒரு கோல் அடித்தார்.

    இறுதியில், கேரளா மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. #ISL2018 #KeralaBlasters #MumbaiCityFC
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கொல்கத்தா அணியை 1 - 0 என்ற கணக்கில் வீழ்த்தி நார்த் ஈஸ்ட் எப்.சி அணி வெற்றி பெற்றது. #ISL2018 #NorthEastFC #ATK
    கொல்கத்தா:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி சமீபத்தில் தொடங்கியது. கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா மற்றும் நார்த் ஈஸ்ட் எப்.சி அணிகள் நேற்று மோதின. 

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் பொறுப்பாக ஆடின. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.



    ஆட்டத்தின் 88-வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியை சேர்ந்த ரவ்லின் போர்க்ஸ் ஒரு கோல் அடித்து தனது அணிக்கு வெற்றி தேடித் தந்தார். 

    இறுதியில், கொல்கத்தா அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி நார்த் ஈஸ்ட் எப் சி அணி வெற்றி பெற்றது. #ISL2018 #NorthEastFC #ATK
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் புனே சிட்டி மற்றும் டெல்லி டைனமோஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது. #ISL2018 #FCPuneCity #DelhiDynamos
    டெல்லி:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி சமீபத்தில் தொடங்கியது. இதில் சென்னையின் எப்.சி., பெங்களூரு எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), எப்.சி.கோவா, மும்பை சிட்டி, ஜாம்ஷெட்பூர், அட்லெடிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ், டெல்லி டைனமோஸ், புனே சிட்டி ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.

    டெல்லியில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் எப்.சி. புனே சிட்டி அணியும், டெல்லி டைனமோஸ் அணியும் சந்தித்தன.

    இரு அணிகளும் தொடக்கத்தில் இருந்தே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின. முதல் பாதியின் இறுதியில் டெல்லி அணியின் ராணா கராமி ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை தேடிக் கொடுத்தார். இதனால் முதல் பாதியில் டெல்லி அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

    இதன் தொடர்ச்சியாக, ஆட்டத்தின் இறுதியில், புனே அணியின் டிகோ கார்லஸ் ஒரு கோல் அடித்தார். இதன்மூலம்  1-1 என ஆட்டம் சமனிலையில் முடிந்தது. #ISL2018 #FCPuneCity #DelhiDynamos
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மும்பை அணி தனது முதல் லீக்கில் ஜாம்ஷெட்பூர் அணியிடம் வீழ்ந்தது. #ISL2018 #JamshedpurFC #MumbaiCity
    மும்பை:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி சமீபத்தில் தொடங்கியது. இதில் சென்னையின் எப்.சி., பெங்களூரு எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), எப்.சி.கோவா, மும்பை சிட்டி, ஜாம்ஷெட்பூர், அட்லெடிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ், டெல்லி டைனமோஸ், புனே சிட்டி ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.

    மும்பையில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி அணியும், ஜாம்ஷெட்பூர் அணியும் சந்தித்தன.

    இரு அணிகளும் தொடக்கத்தில் இருந்தே தாக்குதல் பாணியை கடைபிடித்தன. ஜாம்ஷெட்பூர் அணியின் மாரியோ ஆர்க்யுஸ் 28வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். மும்பை அணி எந்த கோலும் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் ஜாம்ஷெட்பூர் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

    தொடர்ந்து, நடைபெற்ற இரண்டாவது பாதியிலும் ஜாம்ஷெட்பூர் அணி அபாரமாக ஆடியது. அந்த அணியின் பாபியோ மார்கடோஸ் கூடுதல் நேரத்தின் 5-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, ஜாம்ஷெட்பூர் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் இன்று கோலாகலமாக துவங்கிய நிலையில், முதல்நாளான இன்று கேரள அணி கொல்கத்தாவை 2-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளது. #ISL2018 #ATKvKBFC
    கொல்கத்தா:

    இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் 2014-ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடந்து வருகிறது. அறிமுக ஆண்டில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், 2015-ம் ஆண்டில் சென்னையின் எப்.சி.அணியும், 2016-ம் ஆண்டில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், கடந்த ஆண்டில் (2017) சென்னையின் எப்.சி. அணியும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின. இந்த நிலையில் 5-வது ஐ.எஸ்.எல். கால்பந்து திருவிழா இன்று தொடங்கியது.

    சென்னை எப்.சி உட்பட 10 அணிகள் பங்கேற்கும் இந்த முதல் ஆட்டத்தில் கேரளாவும், கொல்கத்தாவும் மோதுகின்றன. முதல் ஆட்டத்தின் முதல்பாதி சுற்று முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

    இடைவெளி முடிந்து மீண்டும் துவங்கியஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய கேரள அணி 2 கோல்களை அடித்தது. நேரம் முடிவடைய இருந்த சூழலில் கோல் எதுவும் அடிக்க முடியாமல் கொல்கத்தா திணற, 2-0 என்ற கோல் கணக்கில் கேரள அணி வெற்றி பெற்றுள்ளது.

    நாளை பெங்களுரு எப்.சி மற்றும் சென்னை எப்.சி ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது. #ISL2018 #ATKvKBFC
    ×