என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.எஸ்.எல். கால்பந்து - மும்பை எப்.சி மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது
Byமாலை மலர்5 Oct 2018 7:27 PM GMT (Updated: 5 Oct 2018 7:27 PM GMT)
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மும்பை எப்.சி மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. #ISL2018 #KeralaBlasters #MumbaiCityFC
கொச்சி:
5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி சமீபத்தில் தொடங்கியது. இதில் கொச்சியில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை சிட்டி எப்.சி, கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின.
இரு அணிகளும் தொடக்கத்தில் இருந்தே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின. ஆட்டத்தின் 24-வது நிமிடத்தில் கேரளா அணியின் ஹலிசரண் நர்ஜாரி ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். முதல் பாதியின் இறுதியில் கேரளா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து, கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. கூடுதல் நேரத்தின் 93-வது நிமிடத்தில் மும்பை அணியின் பிரஞ்சால் பூமிஜ் ஒரு கோல் அடித்தார்.
இறுதியில், கேரளா மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. #ISL2018 #KeralaBlasters #MumbaiCityFC
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X