search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jamshedpur FC"

    ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கோவா அணியை 4-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. #ISL2018 #JamshedpurFC #FCGoa
    ஜாம்ஷெட்பூர்:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற போட்டியில் ஜாம்ஷெட்பூர் எப்.சி, கோவா அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் மைக்கேல் சூசைராஜ் முதல் கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.

    இதையடுத்து, கோவா அணியின் சார்பில் மூர்ததா பால் 33வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அதன் பின்னர், முதல் பாதி முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமனிலை வகித்தன.

    இரண்டாவது பாதியில், மைக்கேல் சூசைராஜ் மீண்டும் ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து, மெமோ 77-வது நிமிடத்திலும், சுமித் பாசி 78-வது நிமிடத்திலும் ஒரு கோல் அடித்தனர்.

    இறுதியில், ஜாம்ஷெட்பூர் அணி 4- 1 என்ற கோல் கணக்கில் கோவா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த  வெற்றி மூலம் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. #ISL2018 #JamshedpurFC #FCGoa
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 22-வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது. #ISL2018 #KeralaBlasters #Jamshedpur
    ஜாம்ஷெட்பூர்:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு ஜாம்ஷெட்பூரில் நடந்த 22-வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ஜாம்ஷெட்பூர் அணி முதல் பாதியில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அந்த அணி வீரர்கள் டிம் காஹில் 3-வது நிமிடத்திலும், மிச்செல் சூசைராஜ் 31-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். ஆனால் கடைசி கட்டத்தில் ஆக்ரோஷமாக தாக்குதல் ஆட்டத்தை தொடுத்த கேரளா அணி சரிவில் இருந்து மீண்டு சமநிலையை எட்டியது. கேரளா அணி தரப்பில் லாவிஸ்லா ஸ்டோஜனோவிச் 71-வது நிமிடத்திலும், சி.கே.வினீத் 86-வது நிமிடத்திலும் பதில் கோல் திருப்பினார்கள்.

    டெல்லியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 23-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் எப்.சி.-நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி) அணிகள் மோதுகின்றன. 
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூர் மற்றும் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. #ISL2018 #NorthEastUnitedFC #JamshedpurFC
    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஜாம்ஷெட்பூர் எப்.சி மற்றும் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணியின் பர்த்தலோமியூ முதல் கோல் அடித்தார். இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதியில் நார்த்ஈஸ்ட் அணி 1-0 என முன்னிலை வகித்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஜாம்ஷெட்பூர் அணியை சேர்ந்த பருக் சவுத்ரி 49-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமனிலைக்கு கொண்டு வந்தார். அதன்பின்னர், ஆட்டத்தின் இறுதி வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    இறுதியில், ஜாம்ஷெட்பூர், நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1 -1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

    இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் ஜாம்ஷெட்பூர் அணி முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. #ISL2018 #NorthEastUnited #JamshedpurFC
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மும்பை அணி தனது முதல் லீக்கில் ஜாம்ஷெட்பூர் அணியிடம் வீழ்ந்தது. #ISL2018 #JamshedpurFC #MumbaiCity
    மும்பை:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி சமீபத்தில் தொடங்கியது. இதில் சென்னையின் எப்.சி., பெங்களூரு எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), எப்.சி.கோவா, மும்பை சிட்டி, ஜாம்ஷெட்பூர், அட்லெடிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ், டெல்லி டைனமோஸ், புனே சிட்டி ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.

    மும்பையில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி அணியும், ஜாம்ஷெட்பூர் அணியும் சந்தித்தன.

    இரு அணிகளும் தொடக்கத்தில் இருந்தே தாக்குதல் பாணியை கடைபிடித்தன. ஜாம்ஷெட்பூர் அணியின் மாரியோ ஆர்க்யுஸ் 28வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். மும்பை அணி எந்த கோலும் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் ஜாம்ஷெட்பூர் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

    தொடர்ந்து, நடைபெற்ற இரண்டாவது பாதியிலும் ஜாம்ஷெட்பூர் அணி அபாரமாக ஆடியது. அந்த அணியின் பாபியோ மார்கடோஸ் கூடுதல் நேரத்தின் 5-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, ஜாம்ஷெட்பூர் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
    ×