என் மலர்
செய்திகள்

ஐ.எஸ்.எல். கால்பந்து - மும்பைக்கு எதிரான போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணி வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மும்பை அணி தனது முதல் லீக்கில் ஜாம்ஷெட்பூர் அணியிடம் வீழ்ந்தது. #ISL2018 #JamshedpurFC #MumbaiCity
மும்பை:
5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி சமீபத்தில் தொடங்கியது. இதில் சென்னையின் எப்.சி., பெங்களூரு எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), எப்.சி.கோவா, மும்பை சிட்டி, ஜாம்ஷெட்பூர், அட்லெடிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ், டெல்லி டைனமோஸ், புனே சிட்டி ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.
மும்பையில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி அணியும், ஜாம்ஷெட்பூர் அணியும் சந்தித்தன.
இரு அணிகளும் தொடக்கத்தில் இருந்தே தாக்குதல் பாணியை கடைபிடித்தன. ஜாம்ஷெட்பூர் அணியின் மாரியோ ஆர்க்யுஸ் 28வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். மும்பை அணி எந்த கோலும் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் ஜாம்ஷெட்பூர் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
தொடர்ந்து, நடைபெற்ற இரண்டாவது பாதியிலும் ஜாம்ஷெட்பூர் அணி அபாரமாக ஆடியது. அந்த அணியின் பாபியோ மார்கடோஸ் கூடுதல் நேரத்தின் 5-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, ஜாம்ஷெட்பூர் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
Next Story






