search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IRCTC"

    இந்திய ரயில்வேக்கு டெலிகாம் சேவையை வழங்கும் உரிமையை ரிலையன்ஸ் ஜியோ பெற்று இருக்கிறது. #Jio



    இந்திய ரயில்வேக்கு டெலிகாம் சேவையை வழங்கும் உரிமையை ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம் பெற்றுள்ளது. அதன்படி 2019, ஜனவரி 1ம் தேதி முதல் இந்திய ரயில்வே ஜியோ சேவையை பயன்படுத்துகிறது. இதன் மூலம் இந்திய ரயில்வே டெலிகாம் செலவீனங்களை குறைந்தபட்சம் 35 சதவிகிதம் வரை குறைக்க முடியும் என கூறப்படுகிறது.

    கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்திய ரயில்வே பாரதி ஏர்டெல் நிறுவன சேவையை பயன்படுத்தி வந்தது. ரயில்வே ஊழியர்களுக்கு என மொத்தம் 1.95 லட்சம் மொபைல் போன் இணைப்புகளை (சி.யு.ஜி.) இந்திய ரயில்வே பயன்படுத்தியது. இதற்கென இந்திய ரயில்வே மொத்தம் ரூ.100 கோடியை ஆண்டு கட்டணமாக செலுத்தி வந்தது. இதற்கான வேலிடிட்டி இந்த ஆண்டு டிசம்பர் 31-க்குள் நிறைவுறுகிறது.

    இதுகுறித்து ரயில்வே போர்டு வெளியிட்டு இருக்கும் உத்தரவில், ரெயில்டெல் நிறுவனத்திற்கு புதிய மொபைல் போன் இணைப்புகளை வழங்கும் உரிமை ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய டெலிகாம் சேவை டிசம்பர் 31, 2018-க்குள் நிறைவுறுகிறது.

    புதிய சி.யு.ஜி சேவைகள் ஜனவரி 1, 2018 முதல் அமலுக்கு வரும் என ரயில்வே வெளியிட்டிருக்கும் உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சி.யு.ஜி. இணைப்புகளில் டெலிகாம் சேவை வழங்கும் நிறுவனங்கள் குறிப்பிட்ட குழுவினருடன் அழைப்புகளை மேற்கொள்ளவும், எஸ்.எம்.எஸ். அனுப்பிக் கொள்ளவும் முடியும்.



    இந்திய ரெயில்வே பயன்படுத்த இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ சி.யு.ஜி. சேவையில் 4ஜி / 3ஜி இணைப்புகள், அழைப்புகள் உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்குகிறது. ஜியோ நிறுவனம் ரெயில்வேக்கு நான்கு திட்டங்களை வழங்குகிறது. 

    இவை மூத்த அதிகாரிகள்: 60 ஜி.பி. சலுகை, மாதம் ரூ.125 விலையிலும், 45 ஜி.பி. சலுகை மாத கட்டணம் ரூ.99 விலையிலும், இணை செயலாளர் பணியில் உள்ள அதிகாரிகளுக்கு 30 ஜி.பி. சலுகை ரூ.67 விலையிலும், க்ரூப் சி பணியாளர்களுக்கு ரூ.49 விலையில் சலுகைகள் வழங்கப்படுகிறது. 

    சாதாரண பணியாளர்களுக்கு 25 ஜி.பி. டேட்டா ரூ.199 விலையில் வழங்கப்படுகிறது. இதன் பின் பயனர்கள் ஒரு ஜி.பி. டேட்டாவை பயன்படுத்த ரூ.20 கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். ரெயில்வே பணியாளர்கள் ரூ.10 கட்டணத்திற்கு 2 ஜி.பி. கூடுதல் டேட்டா பயன்படுத்தலாம்.

    ஏர்டெல் நிறுவனம் தற்சமயம் 1.95 லட்சம் பணியாளர்களுக்கு சேவையை வழங்கி வரும் நிலையில், ரிலையன்ஸ் ஜியோ 3.78 லட்சம் ரெயில்வே பணியாளர்களுக்கு சேவையை வழங்குகிறது. இதன் காரணமாக ரெயில்வேயின் டெலிகாம் சேவை கட்டணங்கள் 35 சதவிகிதம் வரை குறையும் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    நவராத்திரி பண்டிகை தொடங்கியுள்ளதை முன்னிட்டு ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் ரெயில்வே பயணிகளுக்கு சிறப்பு உணவை அறிமுகம் செய்துள்ளது. #IRCTC #Navaratri
    மும்பை:

    இந்திய பண்டிகைகளில் நவராத்திரி மிகவும் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக, வடமாநிலங்களில் நவராத்திரி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.

    இதுபோன்ற பண்டிகை காலங்களில் ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகளை கவரும் வகையில் ஐ.ஆர்.சி.டி.சி. சிறப்பு உணவுகளை வழங்கி வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக, நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு ரெயில்களில் சிறப்பு உணவை, விராட் கா கானா என்ற பெயரில் ஐ.ஆர்.சி.டி.சி. வழங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



    நவராத்திரி கொண்டாடப்படும் இந்த 9 நாட்களிலும் இந்த சிறப்பு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    மேலும், இந்த சிறப்பு உணவு நாக்பூர், அம்பாலா, ஜெய்ப்பூர், இடார்சி, ஜான்சி, நாசிக், ரத்லம், மதுரா, நிஜாமுதீன் மற்றும் லக்னோ ஆகிய ரெயில் நிலையங்களில் கிடைக்கும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #IRCTC #Navaratri
    1-ந் தேதி முதல் ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பயணிகள் விருப்பத்தை பொறுத்தே காப்பீடு (இன்சூரன்ஸ்) செய்யப்படும். #IRCTC #Insurance
    சென்னை:

    இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி.) இணையதளம் மூலம் ரெயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. ரெயில் பயணத்தின்போது எதிர்பாராமல் ஏற்படும் விபத்துகளில் சிக்கி இறப்பவர்களுக்கும், படுகாயமடைபவர்களுக்கும் உரிய இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்காக ரெயில்வே நிர்வாகம் பயணிகளிடம் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ரூ.1 மட்டும் காப்பீடு தொகையாக வசூலித்து வருகிறது. இணையதளம் மூலம் பெறப்படும் இ-டிக்கெட்டுகளுக்கு மட்டும் இந்த வசதி செய்யப்பட்டு வருகிறது. ரெயில்வே கவுண்ட்டர்களில் எடுக்கப்படும் டிக்கெட்டுகளுக்கு காப்பீடு கட்டண திட்டம் நடைமுறையில் இல்லை.

    இந்தநிலையில் வருகிற 1-ந்தேதி முதல் இணையதளம் மூலம் இ-டிக்கெட்டுகள் பெறுபவர்களுக்கு அவர்களது விருப்பத்தின் பேரிலேயே காப்பீடு செய்யப்பட உள்ளது. இதற்காக காப்பீடு வேண்டுமா? வேண்டாமா? என்று ஒரு பகுதி இடம்பெற்றிருக்கும். அதில் பயணிகள் தங்கள் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.

    காப்பீடு செய்தவர்கள் விபத்து ஏற்படும் பட்சத்தில் இறக்க நேரிட்டால் ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தால் ரூ.7.50 லட்சமும் இழப்பீடு தொகையாக வழங்கப்படும்.

    இந்த தகவலை ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.   #IRCTC #Insurance 
    ஐ.ஆர்.சி.டி.சி.-யின் ரெயில் கனெக்ட் ஆன்ட்ராய்டு செயலியில் கட்டணம் செலுத்த புதிய பேமென்ட் ஆப்ஷன் சேர்க்கப்பட்டுள்ளது. #PhonePe #IRCTC
     

    இந்திய ரெயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. உடன் இணைவதை போன்பெ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி. ரெயில் கனெக்ட் ஆன்ட்ராய்டு செயலியில் பணம் செலுத்த இனி போன்பெ பயன்படுத்தலாம்.

    இதனால் போன்பெ செயலியை பயன்படுத்தும் சுமார் ஒரு கோடி பயனர்கள் யு.பி.ஐ., கிரெடிட், டெபிட் கார்டு மற்றும் போன்பெ வாலெட் பயன்படுத்தி தங்களது வங்கி கணக்குகளில் இருந்து நேரடியாக பணம் செலுத்தலாம்.

    "இந்தியாவில் பயணங்களை மேற்கொள்ள முன்பதிவுகளுக்கு நம்பத்தகுந்த தளமாக இருக்கும் ஐ.ஆர்.சி.டி.சி.யுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த கூட்டணியின் மூலம் இந்தியா முழுக்க டிஜிட்டல் பண பரிமாற்றங்களை அதிகரிக்க முடியும். ஐ.ஆர்.சி.டி.சி. செயலியில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பேமென்ட் வசதிகளுடன் பயனர்கள் இனி யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்த முடியும்," என போன்பெ நிறுவனததின் கார்திக் ரகுபதி தெரிவித்தார்.

    "இந்த கூட்டணி மூலம் ஐ.ஆர்.சி.டி.சி. பயனர்கள் சிறப்பான முன்பதிவு அனுபவம் பெறுவதோடு டிஜிட்டல் பேமென்ட் நன்மைகளை பெரும்பாலானோருக்கு கொண்டு சேர்க்கும்," என அவர் மேலும் தெரிவித்தார்.

    முன்னதாக ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் இ-வாலெட் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இதை கொண்டு பயனர்கள் தட்கல் டிக்கெட்களை ஐ.ஆர்.சி.டி.சி. ரெயில் கனெக்ட் செயலிய மூலம் முன்பதிவு செய்ய முடியும். வேகமாக டிக்கெட் முன்பதிவு செய்யும் நோக்கில் இ-வாலெட் சேவையில் பயனர்கள் முன்கூட்டியே பணத்தை சேர்த்து வைக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற மொபைல் வாலெட் போன்றே இந்த பணம் கொண்டு டிக்கெட் முன்பபதிவின் போது பயன்படுத்தலாம்.
    ஆன்லைனில் ரெயில் டிக்கெட்டை ஐ.ஆர். சி.டி.சி. இணைய தளத்தில் பதிவு செய்வோருக்கு புதிய வசதிகளை அந்த இணைய தளம் ஏற்படுத்தி உள்ளது. #IRCTC
    சென்னை:

    ரெயில் பயணத்துக்கு டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் பயணிகள் கடைசி நேரத்தில் ரெயில் பயணத்தை ரத்து செய்துவிட்டு பஸ் பயணத்தை நாட வேண்டியதிருக்கிறது.

    தற்போது ஆன்லைனில் ரெயில் டிக்கெட்டை ஐ.ஆர். சி.டி.சி. இணைய தளத்தில் பதிவு செய்வோருக்கு புதிய வசதிகளை அந்த இணைய தளம் ஏற்படுத்தி உள்ளது.

    காத்திருப்போர் பட்டிய லில் உள்ள ரெயில் டிக்கெட் உறுதியாக கிடைக்குமா? அல்லது ஆர்.ஏ.சி. நிலை வருமா? அல்லது டிக்கெட் கிடைக்காதா? என்பதை முன்கூட்டியே கணித்து சொல்லும் வசதி இந்த இணைய தளத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

    இதே போல் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டை வைத்து அடுத்த 12 மணி நேரத்திற்குள் புறப்படும் ரெயிலில் பயணம் செய்ய உறுதி செய்யும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

    இதில் 24 மணி நேரத்திற்குள் விசே‌ஷ ரெயிலில் பயணம் செய்ய விருப்பமா? என்ற கேள்வி இணையதளத்தில் கேட்கப்படும். அதற்கு பதில் கொடுப்பதை பொறுத்து விசே‌ஷ ரெயில் இயக்கப்பட்டால் அதில் டிக்கெட் உறுதியாகிறது.



    டெல்லி-சென்னை இடையே 3-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இருந்தால் ஒரு ரெயிலில் காத்திருப்போர் பட்டியலில் இருந்தால் இன்னொரு ரெயிலில் அதை உறுதி செய்து கொடுத்து விடுகிறார்கள்.

    அல்லது 3 ரெயில்களிலுமே காத்திருப்போர் பட்டியல் அதிகமாக இருந்தால் ஒரு விசே‌ஷ ரெயிலை விட்டு காத்திருப்போர் பட்டியலில் உள்ள அந்த பயணிகளை அந்த விசே‌ஷ ரெயிலில் பயணம் செய்யும் முறையை ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் அறிமுகம் செய்துள்ளது. இதனால் ரெயில் பயணிகள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

    பயணிகளின் எண்ணிக்கையை கணித்து ரெயில்வேயின் வணிக பிரிவு புதிய ரெயில்களை இயக்க ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்றும் ரெயில்வே அதிகாரிகளுக்கு மந்திரி உத்தரவிட்டுள்ளார். #IRCTC
    ரெயில்களில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகள் உறுதியாக கிடைக்குமா என்பதை உடனடியாக தெரிந்து கொள்ள ரெயில்வே அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. #IRCTC #WaitlistedTrainTicket
    புதுடெல்லி:
     
    ரெயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட்கள் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மற்றும் ஆப் மூலம் முன்பதிவு செய்யப்படுகின்றன. அவ்வாறு முன்பதிவு செய்யும் போது பெரும்பாலும் வெயிட்டிங் லிஸ்ட்டில் தான் இருக்கும். இதனால் டிக்கெட் உறுதியாக கிடைக்குமா? கிடைக்காதா? என்ற சந்தேகம் இருக்கும். டிக்கெட் உறுதியாவது குறித்து ரெயில் புறப்படும் அன்றுதான் பெரும்பாலும் தெரியவரும்.
    இந்த முறை பயணிகளுக்கு பெரும் சிரமாம இருந்து வருகிறது. 

    இந்நிலையில், இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கொண்டுவர ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வசதியின் மூலம், முன்பதிவு செய்யும் போதே டிக்கெட்டுகள் உறுதியாக கிடைக்குமா என்பதை இணையதளமே யூகித்து சொல்லிவிடும். 

    இந்த புதிய வசதி குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது, ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் புதிதாக மாற்றம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய சேவையின் மூலம் காத்திருப்பு பட்டியலில் உள்ள தங்களது டிக்கெட் உறுதி செய்யப்பட வாய்ப்பு உள்ளதா என்பதை பயணிகள் உடனே தெரிந்துக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.
     
    இந்த புதிய வசதி நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. #IRCTC #WaitlistedTrainTicket
    ×