search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐ.ஆர்.சி.டி.சி."

    ஐ.ஆர்.சி.டி.சி. வலைதளம் பயன்படுத்துவோருக்கு எழும் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு இனி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் சாட்பாட் உடனுக்குடன் பதில் சொல்லும். #irctc #chatbot



    ஐ.ஆர்.சி.டி.சி. ஆன்லைன் சேவை ஆரம்பத்தில் இருந்ததை விட தற்சமயம் அதிகளவு மேம்பட்டு இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்திய ரயில்வேயின் ஆன்லைன் சேவை பலமுறை மாற்றம் செய்யப்பட்டு பல்வேறு புது வசதிகள் அவ்வப்போது சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

    சமீபத்தில் ஐ.ஆர்.சி.டி.சி. வலைதளம் மேம்படுத்தப்பட்டு புது இன்டர்ஃபேஸ் மற்றும் புது அம்சங்கள் சேர்க்கப்பட்டன. புது இன்டர்ஃபேஸ் மற்றும் அம்சங்களுடன் ஐ.ஆர்.சி.டி.சி. சேவையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த சாட்பாட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 



    ஆஸ்க்திஷா (AskDisha) என அழைக்கப்படும் இந்த சேவை ஐ.ஆர்.சி.டி.சி.யின் வாடிக்கையாளர் சேவை மைய உதவியாள் போன்று செயல்படும். ஆஸ்க்திஷா மூலம் பயனர்கள் எந்நேரமும் தங்களது சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை கேட்டு அதற்கு உடனடியாக பதில் பெற்றுக் கொள்ளலாம்.

    பொதுவாக ஐ.ஆர்.சி.டி.சி.யின் வாடிக்கையாளர் சேவை மையம் பற்றி அதிகளவு குற்றச்சாட்டுகள் இருந்து வந்த நிலையில், இந்த சாட்பாட் ஐ.ஆர்.சி.டி.சி. வாடிக்கையாளர் சேவை மைய அனுபவத்தை மேம்படுத்தும். வாடிக்கைாயளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஏ.ஐ. சாட்பாட் உடனடியாக பதில் அளிக்கிறது.



    தற்சமயம் குறுந்தகவல் வகையில் பதில் அளிக்கும் ஆஸ்க்திஷா சாட்பாட் விரைவில் குரல் வடிவில் பதில் அளிக்கும் என ஐ.ஆர்.சி.டி.சி. தெரிவித்து இருக்கிறது. ஆஸ்க்திஷா குரல் வடிவம் ஐ.ஆர்.சி.டி.சி. ஆன்ட்ராய்டு செயலியில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோரோவர் எனும் நிறுவனம் மூலம் இயங்கும் சாட்பாட், முடிந்த வரை பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது. இத்துடன் பயனர்கள் பொதுவாக கேட்க நினைத்து டைப் செய்ய துவங்கும் கேள்விகளை சரியாக பரிந்துரை செய்யும். பயனர்கள் வித்தியாசமான கேள்வியை கேட்கும் போது வாடிக்கையாளர் சேவை மைய மின்னஞ்சல் அல்லது தொடர்பு எண் வழங்கும்.

    ஐ.ஆர்.சி.டி.சி.யின் ஆஸ்க்திஷா சாட்பாட் சேவையை பயன்படுத்துவோர், தங்களின் சேவை அனுபவத்தை எமோஜி வடிவில் மதிப்பீடு செய்யவும் முடியும். #irctc #chatbot
    இந்திய ரயில்வேக்கு டெலிகாம் சேவையை வழங்கும் உரிமையை ரிலையன்ஸ் ஜியோ பெற்று இருக்கிறது. #Jio



    இந்திய ரயில்வேக்கு டெலிகாம் சேவையை வழங்கும் உரிமையை ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம் பெற்றுள்ளது. அதன்படி 2019, ஜனவரி 1ம் தேதி முதல் இந்திய ரயில்வே ஜியோ சேவையை பயன்படுத்துகிறது. இதன் மூலம் இந்திய ரயில்வே டெலிகாம் செலவீனங்களை குறைந்தபட்சம் 35 சதவிகிதம் வரை குறைக்க முடியும் என கூறப்படுகிறது.

    கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்திய ரயில்வே பாரதி ஏர்டெல் நிறுவன சேவையை பயன்படுத்தி வந்தது. ரயில்வே ஊழியர்களுக்கு என மொத்தம் 1.95 லட்சம் மொபைல் போன் இணைப்புகளை (சி.யு.ஜி.) இந்திய ரயில்வே பயன்படுத்தியது. இதற்கென இந்திய ரயில்வே மொத்தம் ரூ.100 கோடியை ஆண்டு கட்டணமாக செலுத்தி வந்தது. இதற்கான வேலிடிட்டி இந்த ஆண்டு டிசம்பர் 31-க்குள் நிறைவுறுகிறது.

    இதுகுறித்து ரயில்வே போர்டு வெளியிட்டு இருக்கும் உத்தரவில், ரெயில்டெல் நிறுவனத்திற்கு புதிய மொபைல் போன் இணைப்புகளை வழங்கும் உரிமை ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய டெலிகாம் சேவை டிசம்பர் 31, 2018-க்குள் நிறைவுறுகிறது.

    புதிய சி.யு.ஜி சேவைகள் ஜனவரி 1, 2018 முதல் அமலுக்கு வரும் என ரயில்வே வெளியிட்டிருக்கும் உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சி.யு.ஜி. இணைப்புகளில் டெலிகாம் சேவை வழங்கும் நிறுவனங்கள் குறிப்பிட்ட குழுவினருடன் அழைப்புகளை மேற்கொள்ளவும், எஸ்.எம்.எஸ். அனுப்பிக் கொள்ளவும் முடியும்.



    இந்திய ரெயில்வே பயன்படுத்த இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ சி.யு.ஜி. சேவையில் 4ஜி / 3ஜி இணைப்புகள், அழைப்புகள் உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்குகிறது. ஜியோ நிறுவனம் ரெயில்வேக்கு நான்கு திட்டங்களை வழங்குகிறது. 

    இவை மூத்த அதிகாரிகள்: 60 ஜி.பி. சலுகை, மாதம் ரூ.125 விலையிலும், 45 ஜி.பி. சலுகை மாத கட்டணம் ரூ.99 விலையிலும், இணை செயலாளர் பணியில் உள்ள அதிகாரிகளுக்கு 30 ஜி.பி. சலுகை ரூ.67 விலையிலும், க்ரூப் சி பணியாளர்களுக்கு ரூ.49 விலையில் சலுகைகள் வழங்கப்படுகிறது. 

    சாதாரண பணியாளர்களுக்கு 25 ஜி.பி. டேட்டா ரூ.199 விலையில் வழங்கப்படுகிறது. இதன் பின் பயனர்கள் ஒரு ஜி.பி. டேட்டாவை பயன்படுத்த ரூ.20 கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். ரெயில்வே பணியாளர்கள் ரூ.10 கட்டணத்திற்கு 2 ஜி.பி. கூடுதல் டேட்டா பயன்படுத்தலாம்.

    ஏர்டெல் நிறுவனம் தற்சமயம் 1.95 லட்சம் பணியாளர்களுக்கு சேவையை வழங்கி வரும் நிலையில், ரிலையன்ஸ் ஜியோ 3.78 லட்சம் ரெயில்வே பணியாளர்களுக்கு சேவையை வழங்குகிறது. இதன் காரணமாக ரெயில்வேயின் டெலிகாம் சேவை கட்டணங்கள் 35 சதவிகிதம் வரை குறையும் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    ஐ.ஆர்.சி.டி.சி.-யின் ரெயில் கனெக்ட் ஆன்ட்ராய்டு செயலியில் கட்டணம் செலுத்த புதிய பேமென்ட் ஆப்ஷன் சேர்க்கப்பட்டுள்ளது. #PhonePe #IRCTC
     

    இந்திய ரெயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. உடன் இணைவதை போன்பெ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி. ரெயில் கனெக்ட் ஆன்ட்ராய்டு செயலியில் பணம் செலுத்த இனி போன்பெ பயன்படுத்தலாம்.

    இதனால் போன்பெ செயலியை பயன்படுத்தும் சுமார் ஒரு கோடி பயனர்கள் யு.பி.ஐ., கிரெடிட், டெபிட் கார்டு மற்றும் போன்பெ வாலெட் பயன்படுத்தி தங்களது வங்கி கணக்குகளில் இருந்து நேரடியாக பணம் செலுத்தலாம்.

    "இந்தியாவில் பயணங்களை மேற்கொள்ள முன்பதிவுகளுக்கு நம்பத்தகுந்த தளமாக இருக்கும் ஐ.ஆர்.சி.டி.சி.யுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த கூட்டணியின் மூலம் இந்தியா முழுக்க டிஜிட்டல் பண பரிமாற்றங்களை அதிகரிக்க முடியும். ஐ.ஆர்.சி.டி.சி. செயலியில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பேமென்ட் வசதிகளுடன் பயனர்கள் இனி யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்த முடியும்," என போன்பெ நிறுவனததின் கார்திக் ரகுபதி தெரிவித்தார்.

    "இந்த கூட்டணி மூலம் ஐ.ஆர்.சி.டி.சி. பயனர்கள் சிறப்பான முன்பதிவு அனுபவம் பெறுவதோடு டிஜிட்டல் பேமென்ட் நன்மைகளை பெரும்பாலானோருக்கு கொண்டு சேர்க்கும்," என அவர் மேலும் தெரிவித்தார்.

    முன்னதாக ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் இ-வாலெட் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இதை கொண்டு பயனர்கள் தட்கல் டிக்கெட்களை ஐ.ஆர்.சி.டி.சி. ரெயில் கனெக்ட் செயலிய மூலம் முன்பதிவு செய்ய முடியும். வேகமாக டிக்கெட் முன்பதிவு செய்யும் நோக்கில் இ-வாலெட் சேவையில் பயனர்கள் முன்கூட்டியே பணத்தை சேர்த்து வைக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற மொபைல் வாலெட் போன்றே இந்த பணம் கொண்டு டிக்கெட் முன்பபதிவின் போது பயன்படுத்தலாம்.
    ×