search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "INDvAFG"

    • முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 272 ரன்களை எடுத்தது.
    • இந்தியா சார்பில் கேப்டன் ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 272 ரன்களை எடுத்தது.

    தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி வேகமாக ரன் குவிப்பில் ஈடுபட்டது. இந்தியா சார்பில் துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர், 84 பந்துகளில் 131 ரன்களை குவித்து அசத்தினார். இதில் 16 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். இவருடன் களமிறங்கிய இஷான் கிஷன் தன் பங்கிற்கு 47 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து களமிறங்கிய விராட் கோலி அரைசதம் அடித்தார். இவருடன் ஆடிய ஸ்ரேயஸ் அய்யர் தன் பங்கிற்கு அதிரடி ஆட்டத்தை ஆடினார். இதன் மூலம் இந்திய அணி 35 ஓவர்கள் முடிவில் 273 ரன்களை குவித்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டி முடிவில் விராட் கோலி 55 ரன்களையும், ஸ்ரேயஸ் அய்யர் 25 ரன்களையும் குவித்தனர்.

    • ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 272 ரன்களை எடுத்தது.
    • ஆயிரம் ரன்களை கடந்த நான்காவது இந்திய வீரர் ஆனார் ரோகித் சர்மா.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 272 ரன்களை எடுத்தது.

    தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி வேகமாக ரன் குவிப்பில் ஈடுபட்டது. இந்தியா சார்பில் துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர், 84 பந்துகளில் 131 ரன்களை குவித்து அசத்தினார். இதில் 16 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். இந்த போட்டியில் சதம் அடித்த ரோகித் சர்மா பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

    அதன்படி, உலகக் கோப்பை தொடர்களில் அதிக முறை சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார். அதிக சதங்கள் அடித்திருந்த வீரர்களில் ரோகித் சர்மா, சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்துள்ளார்.

    இத்துடன் உலகக் கோப்பை தொடரில் ஆயிரம் ரன்களை கடந்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார். முன்னதாக சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோர் இந்த சாதனையை படைத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

    • டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 272 ரன்களை எடுத்தது.

    புதுடெல்லி:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. ஹஷ்மதுல்லா ஷஹிதி, அஸ்மதுல்லா ஒமர்ஜாய் ஆகியோர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர்.

    ஹஷ்மதுல்லா ஷஹிதி 80 ரன்னும், அஸ்மதுல்லா ஒமர்ஜாய் 62 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 272 ரன்களை எடுத்துள்ளது.

    இந்திய அணி சார்பில் பும்ரா 4 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 273 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

    • உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
    • டெல்லியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி இன்று நடைபெறுகிறது.

    சென்னை:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி இன்று மதியம் நடைபெறுகிறது.

    இந்தப் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்குகிறது.

    இந்திய அணியில் அஸ்வினுக்கு பதிலாக ஷர்துல் தாக்குர் சேர்க்கப்பட்டுள்ளார்.

    • இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.
    • சேப்பாக்கத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    புதுடெல்லி:

    13-வது ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் 10 நாடுகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை ரவுண்ட் ராபின் முறையில் மோதவேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த இந்த ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்திய அணி 2-வது போட்டியில் ஆப்கானிஸ்தானை நாளை எதிர்கொள்கிறது. புதுடெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.

    ஆப்கானிஸ்தானை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற இந்தியாவுக்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

    டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுப்மன் கில் தொடக்க ஆட்டத்தில் விளையாடவில்லை. அவர் நாளைய போட்டியிலும் ஆட மாட்டார். அவர் இந்திய அணியோடு டெல்லி செல்லவில்லை. சென்னையிலேயே தங்கி இருக்கிறார். மருத்துவக் குழு தொடர்ந்து அவரை கண்காணித்து வருகிறது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச்சு, பீல்டிங் மிகவும் அபாரமாக இருந்தது. ஜடேஜா, குல்தீப் யாதவ், பும்ரா ஆகியோர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்கள்.

    விராட் கோலி, கே.எல்.ராகுலின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. உடல் தகுதி குறித்து விமர்சனம் செய்தவர்களுக்கு தனது பேட்டிங் மூலம் ராகுல் பதிலடி கொடுத்தார்.

    நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரேயாஸ் அய்யர் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதனால் அவர் இடத்தில் சூர்யகுமார் யாதவ் இடம் பெறுவாரா என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல இஷான் கிஷனும் நல்ல வாய்ப்பை பயன்படுத்தவில்லை.

    பந்துவீச்சில் மாற்றம் இருக்குமா எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை ஆடுகளம் என்பதால் 3 சுழற்பந்து வீரர்கள் இடம் பெற்றனர். நாளைய போட்டியில் 2 சுழற்பந்து வீரர் என்ற நிலை ஏற்பட்டால் அஸ்வின் கழற்றி விடப்படுவார். முகமது ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஹஷ்மத்துல்லா ஷகிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்திடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அந்த அணி இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்து முதல் வெற்றியைப் பெறும் வேட்கையில் உள்ளது.

    அந்த அணியில் ரஷித்கான் சுழற்பந்தில் முத்திரை பதிக்கக் கூடியவர். அவரை நம்பியே அந்த அணி அதிகமாக இருக்கிறது. இது தவிர நூர் அகமது, முஜிபுர் ரகுமான் போன்ற சிறந்த வீரர்களும் ஆப்கானிஸ்தானில் உள்ளனர்.

    இரு அணியும் இதுவரை 3 ஆட்டத்தில் மோதி உள்ளன. இதில் இந்தியா 2-ல் வெற்றி பெற்றது. ஒரு போட்டி சமனில் முடிந்தது.

    பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • முதலில் ஆடிய இந்தியா 2 விக்கெட்டுக்கு 212 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் 111 ரன்களை மட்டுமே எடுத்தது.

    துபாய்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி இன்று தனது கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் மோதியது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. கே.எல்.ராகுல் 62 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய விராட் கோலி சதமடித்து அசத்தினார். அவர் 61 பந்துகளில் 12 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. முன்னணி வீரர்களை புவனேஷ்வர் குமார் வெளியேற்றினார். இதனால் சீரான இடைவெளியில் ஆப்கானிஸ்தான் விக்கெட்டுகளை இழந்தது.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 111 ரன்களை மட்டுமே எடுத்தது. இப்ராகிம் சட்ரன் அதிகபட்சமாக 64 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார் 5 விக்கெட் வீழ்த்தினார்.

    • கே.எல்.ராகுல், விராட் கோலி இருவரும் இணைந்து விரைவில் 100 ரன்கள் சேர்த்தனர்.
    • இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது

    துபாய்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி இன்று தனது கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

    சூப்பர்-4 சுற்றில் அடுத்தடுத்து தோல்வி அடைந்து இறுதிச் சுற்று வாய்ப்பை இழந்த இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் முழு பலத்தையும் வெளிப்படுத்தியது. துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் கே.எல்.ராகுல், விராட் கோலி இருவரும் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இவர்கள் இருவரும் இணைந்து விரைவில் 100 ரன்கள் சேர்த்தனர். அணியின் ஸ்கோர் 119 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்தபோது இந்த ஜோடி பிரிந்தது. கே.எல்.ராகுல் 62 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அடித்து ஆட முற்பட்டு 6 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மறுமுனையில் அதிரடி காட்டிய விராட் கோலி சதம் கடந்தார். 53 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் அவர் இந்த இலக்கை எட்டினார். தொடர்ந்து ஆடிய அவர் ஆட்டமிழக்காமல் 122 ரன்கள் சேர்க்க,  இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. ரிஷப் பண்ட் 20 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் பரீத் அகமது 2 விக்கெட் எடுத்தார்.

    இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்குகிறது.

    இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் ‘டை’ ஆனதால் கண்ணீர் விட்டு கதறிய சிறுவனுக்கு ரஷித் கான், ஷேசாத் ஆறுதல் கூறினார்கள். #INDvAFG #AsiaCup2018
    இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் துபாயில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் சேர்த்தது. பின்னர் இந்தியா பேட்டிங் செய்தது. தொடக்க ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பின்னர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இந்தியா தோல்வியை நோக்கிச் சென்றது.

    கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் ரஷித் கான் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் போட்டி ‘டை’யில் முடிந்தது. கடைசி ஓவரை சந்தித்த ஜடேஜா முதல் பந்தில் ரன்ஏதும் அடிக்கவில்லை. 2-வது பந்தை பவுண்டரிக்கு தூக்கினார். இதனால் கடைசி நான்கு பந்தில் மூன்று ரன்கள் தேவைப்பட்டது. 3-வது பந்தில் ஜடேஜா ஒரு ரன்னும், 4-வது பந்தில் கலீல் அகமது ஒரு ரன்னும் எடுத்தனர்.

    இதனால் ஸ்கோர் 252 என சமநிலைப் பெற்றது. கடைசி இரண்டு பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டது. ஐந்தாவது பந்தை ஜடேஜா சந்தித்தார். கைவசம் விக்கெட் இல்லாததால் ரசிகர்கள் பதற்றத்துடன் காணப்பட்டனர். ஜடேஜா ஒரு ரன் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இதனால் போட்டி வெற்றி தோல்வியின்றி ‘டை’ ஆனது.



    இந்நிலையில் ஜடேஜா அவுட் ஆனவுடன் மைதானத்தில் இருந்த ஒரு சீக்கிய சிறுவன் மிகவும் கவலையடைந்து அழுதான். இக்காட்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதையடுத்து அச்சிறுவனை நேரில் சந்தித்து ஆப்கானிஸ்தான் வீரர்களான ரஷித் கான் மற்றும்  முகமது ஷேசாத் ஆகியோர் அறுதல் கூறினார்கள்.

    அப்புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. சிறுவனுக்கு ஆறுதல் கூறிய ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
    முகமது ஷேசாத், முகமது நபி ஆகியோரின் அபார ஆட்டத்தால் இந்தியாவின் வெற்றிக்கு --- ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஆப்கானிஸ்தான் #AsiaCup2018 #INDvAFG
    ஆசிய கோப்பையில் இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ஷேசாத், ஜாவித் அஹ்மதி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    அஹ்மதி மிகவும் மந்தமாக விளையாடிய நிலையில் முகமது ஷேசாத் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பந்து பவுண்டரிக்கும், சிக்சருக்கும் என பறந்தது. ஒருபுறம் ஷேசாத் அபாரமாக விளையாடினாலும் மறுமுனையில் விக்கெட்டுக்கள் விழுந்த வண்ணமே இருந்தது.

    ஆட்டத்தின் 29-வது ஓவரை சாஹர் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி முகமது ஷேசாத் 88 பந்தில் 10 பவுண்டரி, 6 சிக்சருடன் சதம் அடித்தார்.



    தொடர்ந்து விளையாடிய ஷேசாத் 116 பந்தில் 11 பவுண்டரி, 7 சிக்சருடன் 124 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். நைப் 15 ரன்களும், நஜிமுல்லா சத்ரன் 20 ரன்களும் அடித்தனர். முகமது நபி சிறப்பாக விளையாடி 56 பந்தில் 64 ரன்கள் விளாசினார். முகமது ஷேசாத், முகமது நபி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான் 50 ஒவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் சேர்த்தது.



    இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 253 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்திய அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
    ஆசிய கோப்பையில் இந்தியாவிற்கு எதிராக ஆப்கானிஸ்தான் தொடக்க வீரர் முகமது ஷேசாத் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். #AsiaCup2018 #INDvAFG
    ஆசிய கோப்பையில் இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ஷேசாத், ஜாவித் அஹ்மதி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.



    அஹமதி மிகவும் மந்தமாக விளையாடிய நிலையில் முகமது ஷேசாத் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பந்து பவுண்டரிக்கும், சிக்சருக்கும் என பறந்தது. ஒருபுறம் ஷேசாத் அபாரமாக விளையாடினாலும் மறுமுனையில் விக்கெட்டுக்கள் விழுந்த வண்ணமே இருந்தது.

    ஆட்டத்தின் 29-வது ஓவரை சாஹர் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி முகமது ஷேசாத் 88 பந்தில் 10 பவுண்டரி, 6 சிக்சருடன் சதம் அடித்தார்.
    இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததுள்ளது. டோனி கேப்டனாக பணியாற்றுகிறார். #AsiaCup2018 #Dhoni
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றில் இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

    இந்திய அணியில் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், டோனி கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். அத்துடன் தீபக் சாஹர் அறிமுகமாகியுள்ளார்.

    இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. லோகேஷ் ராகுல், 2. அம்பதி ராயுடு, 3. மணிஷ் பாண்டே, 4. டோனி, 5. தினேஷ் கார்த்திக், 6. கேதர் ஜாதவ், 7. ஜடேஜா, 8. தீபக் சாஹர், 9. சித்தார்த் கவுல், 10. குல்தீப் யாதவ், 11. கலீல் அகமது.
    ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய அணி, தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இன்று சந்திக்கிறது. #AsiaCup2018 #INDvAFG
    துபாய்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய், அபுதாபியில் நடைபெற்று வருகிறது. ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி இந்தப்போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது.

    ‘லீக்’ ஆட்டங்களில் ஹாங்காங்கை 26 ரன் வித்தியாசத்திலும், பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது. ‘சூப்பர் 4’ சுற்றில் வங்காளதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்திலும், பாகிஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்திம் வென்றது. இந்திய அணி தான் மோதிய 4 ஆட்டங்களிலும் வெற்றியை ருசித்தது.

    இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இன்று சந்திக்கிறது. இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு இந்தப்போட்டி தொடங்குகிறது.

    இந்த ஆட்டத்திலும் வென்று இந்தியாவின் அதிரடி நீடிக்கும்? என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது.

    பேட்டிங்கில் தவான் 327 ரன்னும், கேப்டன் ரோகித்சர்மா 269 ரன்னும், அம்பதி ராயுடு 116 ரன்னும் எடுத்து நல்ல நிலையில் உள்ளனர். பந்துவீச்சில் பும்ரா (7 விக்கெட்), புவனேஷ்வர் குமார் (6 விக்கெட்), குல்தீப் யாதவ், யசுவேந்திர சாஹல் (தலா 5 விக்கெட்) ஆகியோர் சிறப்பான நிலையில் உள்ளனர்.

    இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டதால் இன்றைய ஆட்டத்தில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படும் என்று தெரிகிறது.


    தவான், டோனி அல்லது தினேஷ் கார்த்திக், பும்ரா, புவனேஷ்வர்குமார் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அவர்களுக்கு பதிலாக லோகேஷ் ராகுல், மனிஷ் பாண்டே, சித்தார்த் கவூல், கலீல் அகமது ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

    ஆப்கானிஸ்தான் அணி ‘லீக்’ ஆட்டங்களில் இலங்கை, வங்காளதேசத்தை வீழ்த்தியது. ஆனால் ‘சூப்பர் 4’ சுற்றில் பாகிஸ்தான், வங்காளதேசத்திடம் தோற்று இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்தது. இந்தியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    இரு அணிகளும் இதற்கு முன்பு ஒரே ஒரு முறை மட்டுமே மோதியுள்ளன. இதில் இந்தியா வெற்றி பெற்று இருந்தது. #AsiaCup2018 #INDvAFG
    ×