என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "HS Prannoy"
- இந்தியாவின் பிரனோய் , இந்தோனேஷியாவின் கிறிஸ்டியன் அடினாடாவை எதிர்கொண்டார்.
- அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பிவி சிந்து, இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்கா துன்ஜங்கை எதிர்கொண்டார்.
கோலாலம்பூர்:
மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பிரனோய், இந்தோனேஷியாவின் கிறிஸ்டியன் அடினாடாவை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் 21-19 என்ற கணக்கில் முதல் சுற்றை பிரனோய் கைப்பற்றினார். பின்னர் காயம் காரணமாக கிறிஸ்டியன் அடினாடா போட்டியிலிருந்து விலகினார். இதனால் இந்தியாவின் பிரனோய் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பிவி சிந்து, இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்கா துன்ஜங்கை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் 14 -21 , 17 -21 என்ற கணக்கில் பி.வி. சிந்து தோல்வி அடைந்தார்.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி , தாய்லாந்து வீரர் குன்லவுட் விடிசார்ன் ஆகியோர் மோதினர்.
- பரபரப்பான ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார்.
கோலாலம்பூர்:
மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி , தாய்லாந்து வீரர் குன்லவுட் விடிசார்ன் ஆகியோர் மோதினர்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21- 19 , 21-19 என்ற செட் கணக்கில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி வெற்றி பெற்றார். இதனால் அவர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
உலகின் 9-வது இடத்தில் இருக்கும் பிரனோய், உலகின் 11-ம் நிலை வீரரான லியை 13-21, 21-16, 21-11 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 10 நிமிடங்கள் நடைபெற்றது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 16-வது சுற்றில் ஜப்பான் வீராங்கனையான அயா ஓஹோரியை 16-21, 11-21 என்ற கணக்கில் பிவி சிந்து வீழ்த்தினார். இந்த ஆட்டம் 40 நிமிடங்கள் நடந்தது.
இதன் மூலம் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி மற்றும் பிரணாய் பெண்கள் பிரிவில் பிவி சிந்து ஆகியோர் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 2 இடம் உயர்ந்து 7-வது இடத்தை பிடித்துள்ளார்.
- இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஒரு இடம் முன்னேறி 11-வது இடத்தை தனதாக்கினார்.
உலக பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. உலக பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 2 இடம் உயர்ந்து 7-வது இடத்தை பிடித்துள்ளார்.
இது அவருடைய சிறந்த தரநிலையாகும். மற்ற இந்திய வீரர்கள் லக்ஷயா சென் 22-வது இடத்திலும், ஸ்ரீகாந்த் 23-வது இடத்திலும் உள்ளனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஒரு இடம் முன்னேறி 11-வது இடத்தை தனதாக்கினார்.
- முதல் சுற்றில் அவருடன் மோதிய என்ஜி கா லாங் அங்கஸ் காயத்துடன் பாதியில் வெளியேறினார்.
- இரண்டாவது சுற்றில் முன்னாள் உலக சாம்பியனான சிங்கப்பூரின் லோ கீன் யூவை எதிர்கொள்கிறார்.
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்திய வீரர் எச்.எஸ்.பிரனோய் தகுதி பெற்றார். முதல் சுற்றில் அவருடன் மோதிய என்ஜி கா லாங் அங்கஸ் காயத்துடன் பாதியில் வெளியேறினார். இதனால் பிரனோய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
உலக தரவரிசையில் 18-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர், இரண்டாவது சுற்றில் முன்னாள் உலக சாம்பியனான சிங்கப்பூரின் லோ கீன் யூவை எதிர்கொள்கிறார்.
இன்று நடைபெறவுள்ள பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனைகளான அஷ்வினி பட் மற்றும் ஷிகா கவுதம் ஆகியோர் கொரிய ஜோடியான பேக் ஹா நா மற்றும் லீ யூ லிம் உடன் மோத உள்ளனர்.
- மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது.
- முதல் செட்டில் 21-17 இழந்த பிரனோய் இரண்டாவது செட்டை 9-21 என வென்றார்.
கோலாலம்பூர்:
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் அந்நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. பெண்கள் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறினார்.
இந்நிலையில் ஆண்களுக்கான அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவை சேர்ந்த பிரனோய் மற்றும் ஹாங் காங் வீரரான லாங் அங்குஸ் மோதினர். முதல் செட்டில் 17-21 இழந்த பிரனோய் இரண்டாவது செட்டை 21-9 என வென்றார். மூன்றாவது செட்டை லாங் அங்குஸ் 21-17 என போராடி வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.
இதன் மூலம் இந்தியாவின் பதக்க கனவு தகர்ந்தது.
- இந்திய வீரர் எச்.எஸ்.பிரனோய் அரையிறுதியில் சீன வீரரிடம் தோல்வி அடைந்தார்.
- இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியா சார்பில் பிரனோய் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஜகார்த்தா:
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனோய் சீன வீரர் சாவோ ஜென் பெங்குடன் மோதினார்.
இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய சீன வீரர் 21-16, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் பிரனோய் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- இந்திய வீரர் எச்.எஸ்.பிரனோய் ஹாங்காங் வீரரை 2வது சுற்றில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
- இந்தியாவின் சார்பில் பிரனோய் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
ஜகார்த்தா:
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனோய் டென்மார்க் வீரர் ராஸ்மஸ் ஜெம்கேயுடன் மோதினார்.
இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய பிரனோய் 21-14, 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
- இந்திய வீரர் எச்.எஸ்.பிரனோய், சக வீரரான லக்சயா சென்னை முதல் சுற்றில் வீழ்த்தினார்
- இந்தியாவின் மற்ற வீரர்கள் தோல்வியடைந்த நிலையில் பிரனோய் மட்டுமே காலிறுதிக்கு முன்னேறினார்
ஜகார்த்தா:
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனோய், சக வீரரான லக்சயா சென்னை வீழ்த்தி 2ம் சுற்றுக்கு முன்னேறி இருந்தார்.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற 2-வது சுற்று போட்டியில் எச்.எஸ்.பிரனோய், ஹாங்காங் வீரர் ஹா லோங் அன்ஹுஸ் உடன் மோதினார். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய பிரனோய் 21-11, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்தியாவின் மற்ற வீரர்கள் தோல்வியடைந்த நிலையில் பிரனோய் மட்டுமே காலிறுதிக்கு முன்னேறி உள்ளார்.
காலிறுதியில் டென்மார்க் வீரர் ராஸ்மஸ் ஜெம்கேயுடன், பிரனோய் மோத உள்ளார்.
ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் மானு ஆத்ரி - பி சுமீத் ரெட்டி ஜோடி பல்கேரியா ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி 21-13, 21-18 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியது.
ஆனால் பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் சன்யோகிதா - பிரஜக்தா சவாந்த் ஜோடி துருக்கி ஜோடியிடம் 20-22, 14-21 என தோல்வியடைந்து வெளியேறியது.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து சீனாவின் ஹி பிங்ஜியாவோவை எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து 14-21, 15-21 நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரில் இருந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார்.
ஆண்களுக்கான ஒற்றையர் காலிறுதி ஆட்டம் ஒன்றில் எச்எஸ் பிரணாய் சீனாவைச் சேர்ந்த ஷி யுகியை எதிர்கொண்டார். இதில் பிரணாய் 17-21, 18-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார். ஷி யுகி உடன் பிராணய் நான்கு முறை மோதியுள்ளார். இதில் மூன்று முறை தோல்வியை சந்தித்துள்ளார்.
பிவி சிந்து முதல் செட்டில் இரண்டு முறை சமநிலை அடைந்தார். ஆனால் முதல் பாதி நேரத்தில் 10-11 என ஒரு புள்ளி வித்தியாசத்தில் பின்தங்கினார். 2-வது பாதி நேரத்தில் சீன வீராங்கனை ஹி பிங்ஜியாவோ தொடர்ச்சியாக 6 புள்ளிகள் பெற்றதால் பிவி சிந்து 14-21 எனத் தோல்வியடைந்தார்.
2-வது செட்டில் பிவி சிந்து 6-3 என முன்னிலைப் பெற்றிருந்தார். அதன்பின் ஸ்கோர் 7-7 என சமநிலை அடைந்தது. அதன்பின் ஹி பிங்ஜியாவோ 11-8 என முன்னிலைப் பெற்றார். அதன்பின் பிவி சிந்து முன்னிலை பெற முயன்றார். ஆனால் ஹி பிங்ஜியாவோ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் சிந்து 15-21 என 2-வது செட்டை இழந்தார்.
இதில் இந்திய வீரர் பிரணாய் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் செட்டை 21-15 என பிரணாய் வீழ்த்தினார். ஆனால், 2-வது செட்டை 9-21 என கோட்டை விட்டார். என்றாலும் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது சுற்றை 21-14 எனக்கைப்பற்றி லின் டானை முதல் சுற்றோடு வெளியேற்றினார்.
பிரணாய் 2-வது சுற்றில் வாங் சு வெய்-ஐ 2-வது சுற்றில் எதிர்கொள்கிறார். இவர் இந்திய வீரர் சாய் பிரனீத்தை 21-10, 21-13 என வீழ்த்தியவர் ஆவார். பிரணாய் உடன் சமீர் வர்மாவும் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்