search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எச்.எஸ்.பிரனோய்"

    • மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது.
    • முதல் செட்டில் 21-17 இழந்த பிரனோய் இரண்டாவது செட்டை 9-21 என வென்றார்.

    கோலாலம்பூர்:

    மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் அந்நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. பெண்கள் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறினார்.

    இந்நிலையில் ஆண்களுக்கான அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவை சேர்ந்த பிரனோய் மற்றும் ஹாங் காங் வீரரான லாங் அங்குஸ் மோதினர். முதல் செட்டில் 17-21 இழந்த பிரனோய் இரண்டாவது செட்டை 21-9 என வென்றார். மூன்றாவது செட்டை லாங் அங்குஸ் 21-17 என போராடி வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

    இதன் மூலம் இந்தியாவின் பதக்க கனவு தகர்ந்தது.

    • இந்திய வீரர் எச்.எஸ்.பிரனோய் அரையிறுதியில் சீன வீரரிடம் தோல்வி அடைந்தார்.
    • இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியா சார்பில் பிரனோய் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறினார்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனோய் சீன வீரர் சாவோ ஜென் பெங்குடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய சீன வீரர் 21-16, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் பிரனோய் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • இந்திய வீரர் எச்.எஸ்.பிரனோய் ஹாங்காங் வீரரை 2வது சுற்றில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
    • இந்தியாவின் சார்பில் பிரனோய் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனோய் டென்மார்க் வீரர் ராஸ்மஸ் ஜெம்கேயுடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய பிரனோய் 21-14, 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

    • இந்திய வீரர் எச்.எஸ்.பிரனோய், சக வீரரான லக்சயா சென்னை முதல் சுற்றில் வீழ்த்தினார்
    • இந்தியாவின் மற்ற வீரர்கள் தோல்வியடைந்த நிலையில் பிரனோய் மட்டுமே காலிறுதிக்கு முன்னேறினார்

    ஜகார்த்தா:

    இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனோய், சக வீரரான லக்சயா சென்னை வீழ்த்தி 2ம் சுற்றுக்கு முன்னேறி இருந்தார்.

    இந்த நிலையில் இன்று நடைபெற்ற 2-வது சுற்று போட்டியில் எச்.எஸ்.பிரனோய், ஹாங்காங் வீரர் ஹா லோங் அன்ஹுஸ் உடன் மோதினார். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய பிரனோய் 21-11, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்தியாவின் மற்ற வீரர்கள் தோல்வியடைந்த நிலையில் பிரனோய் மட்டுமே காலிறுதிக்கு முன்னேறி உள்ளார்.

    காலிறுதியில் டென்மார்க் வீரர் ராஸ்மஸ் ஜெம்கேயுடன், பிரனோய் மோத உள்ளார்.

    ×