search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எச்.எஸ்.பிரனாய்"

    • பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டி வருகிற 24-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடக்கிறது.
    • டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஓடென்ஸ் நகரில் இன்று முதல் 22-ந் தேதி வரை தேதி வரை நடக்கிறது.

    ஓடென்ஸ்:

    டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஓடென்ஸ் நகரில் இன்று முதல் 22-ந் தேதி வரையும், பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டி வருகிற 24-ந் தேதி முதல் 29-ந் தேதி வரையும் நடக்கிறது.

    இந்த இரண்டு போட்டியில் இருந்தும் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் 31 வயது இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் விலகி இருக்கிறார்.

    சமீபத்தில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் முதுகு வலியுடன் ஆடி ஒற்றையர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற பிரனாய் காயத்தில் இருந்து குணமடைந்து முழு உடல் தகுதியை எட்டுவதற்கு 2-3 வாரம் பிடிக்கும் என்று தெரிகிறது. இதனால் அவர் இந்த போட்டிகளில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 6-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
    • இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 14-வது இடம் பிடித்துள்ளார்.

    புதுடெல்லி:

    உலக பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 6-வது இடத்தைப் பிடித்துள்ளார். இது அவருடைய சிறந்த தரநிலையாகும். உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றதன் மூலம் அவர் தரவரிசையில் முன்னேறியுள்ளார்.

    மற்ற இந்திய வீரர்கள் லக்ஷயா சென் 12-வது இடத்திலும், ஸ்ரீகாந்த் 20-வது இடத்திலும் உள்ளனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 14-வது இடம் பிடித்துள்ளார்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரனாய் அரையிறுதிக்கு முன்னேறினார்.
    • இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஆண்கள் ஜோடி காலிறுதியில் தோல்வி அடைந்தது.

    கோபன்ஹேகன்:

    28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், டென்மார்க் வீரர் விக்டர் அக்செல்சென்னுடன் மோதினார்.

    இதில் பிரனாய் 13-21, 21-15, 21-16 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி காலிறுதியில் தோல்வி அடைந்தது.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரனாய் காலிறுதிக்கு முன்னேறினார்.
    • இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஆண்கள், பெண்கள் ஜோடி 3வது சுற்றுக்கு முன்னேறியது.

    கோபன்ஹேகன்:

    28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், சிங்கப்பூர் வீரர் கென் லோ யூவுடன் மோதினார்.

    இதில் பிரனாய் 21-18, 15-21, 21-19 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென் 3வது சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஆண்கள், பெண்கள் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதியில் இந்தியாவின் பிரனாய், சீனாவின் வெங் ஹாங் யாங் மோதினர்.
    • இந்திய வீரர் பிரனாயை வீழ்த்தி சீனாவின் வெங் ஹாங் யாங் சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.

    சிட்னி:

    ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்தது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் பிரனாய், சீன வீரர் வெங் ஹாங் யாங் ஆகியோர் மோதினர்.

    முதல் செட்டை 21-9 என்ற கணக்கில் வெங் ஹாங் கைப்பற்றினார். இதனால் சுதாரித்துக் கொண்டு விளையாடிய பிரனாய் 23-21 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை தனதாக்கினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை வெங் ஹாங் யாங் 22-20 என்ற கணக்கில் கைப்பற்றினார். அத்துடன் சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், ரஜாவத் ஆகியோர் அரையிறுதியில் மோதினர்.
    • இதில் எச்.எஸ்.பிரனாய் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    சிட்னி:

    ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், சக வீரரான பிரியான்ஷு ரஜாவத்துடன் மோதினார்.

    இதில் பிரனாய் 21-18, 21-12 என்ற நேர்செட்டில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் எச்.எஸ்.பிரனாய், சீன வீரரான வெங் ஹாங் யாங்கை எதிர்கொள்கிறார்.

    • இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் ஜப்பான் வீரருடன் மோதினார்.
    • இதில் 21-18, 21-16 என்ற செட் கணக்கில் பிரனாய் வென்றார்.

    ஜெகார்த்தா:

    இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் உள்ள இஸ்டோராவில் நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் ஜப்பான் வீரர் நராகோவை 21-18, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், டென்மார்க் வீரர் அக்செல்சென்னை எதிர்கொள்கிறார்.

    • இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் ஹாங்காங் வீரருடன் மோதினார்.
    • இதில் 21-18, 21-16 என்ற செட் கணக்கில் பிரனாய் வென்றார்.

    ஜெகார்த்தா:

    இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் உள்ள இஸ்டோராவில் நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் எச் எஸ் பிரனாய் ஹாங்காங் வீரர் ஆங்க்சை 21-18, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் காலிறுதி சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், ஜப்பான் வீரர் நரகோடாவை எதிர்கொள்கிறார்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 2 இடம் உயர்ந்து 7-வது இடத்தை பிடித்துள்ளார்.
    • இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஒரு இடம் முன்னேறி 11-வது இடத்தை தனதாக்கினார்.

    உலக பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. உலக பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 2 இடம் உயர்ந்து 7-வது இடத்தை பிடித்துள்ளார்.

    இது அவருடைய சிறந்த தரநிலையாகும். மற்ற இந்திய வீரர்கள் லக்ஷயா சென் 22-வது இடத்திலும், ஸ்ரீகாந்த் 23-வது இடத்திலும் உள்ளனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஒரு இடம் முன்னேறி 11-வது இடத்தை தனதாக்கினார்.

    ×