search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Japan Open Badminton"

    • சாத்விக் சாய்ராஜ்-சிராக் ஷெட்டி இணை காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் 2வது சுற்றில் வென்றார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, டென்மார்க்கின் லாஸ்சி மொல்ஹிடி-ஜேப்பி பாய் ஜோடியுடன் மோதியது.

    இதில் சாத்விக்-சிராக் ஜோடி 21-16, 21-11 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றை எட்டியது.

    இதேபோல், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், பிரனோய் வென்றனர்.

    • சாத்விக் சாய்ராஜ்-சிராக் ஷெட்டி இணை 2-வது சுற்றுக்கு முன்னேறியது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் முதல் சுற்றில் வென்றார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, இந்தோனேசியாவின் லீயோ ரோலி கர்னாண்டோ-டேனியல் மார்ட்டின் ஜோடியுடன் மோதியது.

    இதில் சாத்விக்-சிராக் ஜோடி 21-16, 11-21, 21-13 என்ற செட் கணக்கில் வென்று 2-வது சுற்றை எட்டியது.

    இதேபோல், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென் வென்றார்.

    • முன்னாள் உலக சாம்பியனும் தற்போதைய உலகின் 7ம் நிலை வீரருமான சிங்கப்பூரின் லோ கீன் யூவை இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் எதிர்கொண்டார்.
    • பரபரப்பான இந்த ஆட்டத்தில், இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் சிங்கப்பூரின் லோ கீன் யூவை 22-20, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒசாகாவில் நடந்து வருகிறது. உலக தரவரிசையில் 18-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில், முன்னாள் உலக சாம்பியனும் தற்போதைய உலகின் 7ம் நிலை வீரருமான சிங்கப்பூரின் லோ கீன் யூவை இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் எதிர்கொண்டார்.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில், இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் சிங்கப்பூரின் லோ கீன் யூவை 22-20, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

    இதன்மூலம் காலிறுதிக்கு தகுதி பெற்றார். காலிறுதி சுற்றில், உலக பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சவ்தியென் சென்னை பிரனாய் எதிர்கொள்கிறார்.

    • முதல் சுற்றில் அவருடன் மோதிய என்ஜி கா லாங் அங்கஸ் காயத்துடன் பாதியில் வெளியேறினார்.
    • இரண்டாவது சுற்றில் முன்னாள் உலக சாம்பியனான சிங்கப்பூரின் லோ கீன் யூவை எதிர்கொள்கிறார்.

    ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்திய வீரர் எச்.எஸ்.பிரனோய் தகுதி பெற்றார். முதல் சுற்றில் அவருடன் மோதிய என்ஜி கா லாங் அங்கஸ் காயத்துடன் பாதியில் வெளியேறினார். இதனால் பிரனோய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    உலக தரவரிசையில் 18-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர், இரண்டாவது சுற்றில் முன்னாள் உலக சாம்பியனான சிங்கப்பூரின் லோ கீன் யூவை எதிர்கொள்கிறார்.


    இன்று நடைபெறவுள்ள பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனைகளான அஷ்வினி பட் மற்றும் ஷிகா கவுதம் ஆகியோர் கொரிய ஜோடியான பேக் ஹா நா மற்றும் லீ யூ லிம் உடன் மோத உள்ளனர். 

    ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஜப்பான் வீரர் கென்டோ மொமோடா, ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் சாம்பியன் பட்டம் வென்றனர். #JapanOpen
    ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் ஜப்பானின் கென்டோ மொமோடா - தாய்லாந்தின் கோசிட் பெட்ப்ரதாப் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினார்கள். இதில் கென்டோ மொமோடா 21-14, 21-11 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.



    பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் ஜப்பானின் நோசோமி ஒகுஹாரா - ஒலிம்பிக் சாம்பியன் ஸ்பெயினின் கரோலினா மரின் ஆகியோர் மோதினார்கள். இதில் கரோலினாவிற்கு ஒகுஹாரா கடும் சவாலாக விளங்கினார். கரோலினா முதல் செட்டை 21-19 எனக் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை 17-21 என இழந்தார். 1-1 என ஸ்கோர் சமநிலையில் இருந்தது. வெற்றியை தீர்மானிக்கும் 3-வது சுற்றில் கரோலின் சிறப்பாக விளையாடி 21-11 எனக்கைப்பற்றி கரோலினா மரின் சாம்பியன் பட்டம் வென்றார்.
    ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்தார். #JapanOpen #srikanth

    ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்தார். அவர் கொரியாவின் சீ டாங்சிடம் 21-19, 16-21, 18-21 என்ற செட் கணக்கில் தோற்று வெளியேறினார். இதன்மூலம் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. ##JapanOpen #Srikanth

    ×