search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indonesia Open badminton"

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீ காந்த், சக இந்திய வீரரான லக்சயா சென் ஆகியோர் மோதினர்.
    • பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21 - 17 , 22- 20 என்ற செட் கணக்கில் ஸ்ரீ காந்த் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

    ஜகர்த்தா:

    இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீ காந்த், சக இந்திய வீரரான லக்சயா சென் ஆகியோர் மோதினர்.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21 - 17 , 22- 20 என்ற செட் கணக்கில் ஸ்ரீ காந்த் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

    பெண்கள் ஒற்றைய பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து இந்தோனேசியா ஓபன் சாம்பியனான தை சூயிங்கிடம் 21-18, 21-16 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். சீன தைபே வீராங்கனைக்கு எதிராக 24 நேருக்கு நேர் சந்தித்த சிந்துவின் 19-வது தோல்வி இதுவாகும்.

    இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இரண்டு முறை ஒலிம்பிக் சாம்பியனான லின் டானை வீழ்த்தினார் பிரணாய். #IndonesiaOpen2018
    இந்தோனேசியாவில் உள்ள ஜகர்தாவில் இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் தொடக்க ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீரரான எச்எஸ் பிரணாய் இரண்டு முறை ஒலிம்பிக் சாம்பியன் பட்டம் வென்ற சீனாவின் லின் டான்-ஐ எதிர்கொண்டார்.

    இதில் இந்திய வீரர் பிரணாய் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் செட்டை 21-15 என பிரணாய் வீழ்த்தினார். ஆனால், 2-வது செட்டை 9-21 என கோட்டை விட்டார். என்றாலும் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது சுற்றை 21-14 எனக்கைப்பற்றி லின் டானை முதல் சுற்றோடு வெளியேற்றினார்.



    பிரணாய் 2-வது சுற்றில் வாங் சு வெய்-ஐ 2-வது சுற்றில் எதிர்கொள்கிறார். இவர் இந்திய வீரர் சாய் பிரனீத்தை 21-10, 21-13 என வீழ்த்தியவர் ஆவார். பிரணாய் உடன் சமீர் வர்மாவும் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
    இந்தோனேசியா ஒபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னணி வீரரான ஸ்ரீகாந்த கிதாம்பி முதல் சுற்றிலேயே கடும் சவாலை சந்திக்க இருக்கிறார். #Srikanth
    கடந்த வாரம் மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளில் யாரும் அரையிறுதியை தாண்டவில்லை.

    ஆண்களுக்கான அரையிறுதி ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி, ஜப்பானைச் சேர்ந்த கென்டோ மொமோட்டாவை எதிர்கொண்டார். இதில் ஸ்ரீகாந்த் கிதாம்பி நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.



    இந்நிலையில் நாளை இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் ஜகர்த்தாவில் நடக்கிறது. இதில் ஸ்ரீகாந்த் கிதாம்பியும், கோன்டே மொமோட்டாவும் முதல் சுற்றிலேயே பலப்பரீட்சை நடத்த காத்திருக்கிறார்கள்.

    மலேசிய ஓபனில் அடைந்த தோல்விக்கு ஸ்ரீகாந்த் பதிலடி கொடுப்பாரா? என்று பார்ப்போம். சாய்னா நேவால் இந்தோனேசியாவின் டினர் டியா அயுஸ்டைனை எதிர்கொள்கிறார்.
    ×