search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன்- முதல் சுற்றிலேயே சவாலை சந்திக்கும் ஸ்ரீகாந்த் கிதாம்பி
    X

    இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன்- முதல் சுற்றிலேயே சவாலை சந்திக்கும் ஸ்ரீகாந்த் கிதாம்பி

    இந்தோனேசியா ஒபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னணி வீரரான ஸ்ரீகாந்த கிதாம்பி முதல் சுற்றிலேயே கடும் சவாலை சந்திக்க இருக்கிறார். #Srikanth
    கடந்த வாரம் மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளில் யாரும் அரையிறுதியை தாண்டவில்லை.

    ஆண்களுக்கான அரையிறுதி ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி, ஜப்பானைச் சேர்ந்த கென்டோ மொமோட்டாவை எதிர்கொண்டார். இதில் ஸ்ரீகாந்த் கிதாம்பி நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.



    இந்நிலையில் நாளை இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் ஜகர்த்தாவில் நடக்கிறது. இதில் ஸ்ரீகாந்த் கிதாம்பியும், கோன்டே மொமோட்டாவும் முதல் சுற்றிலேயே பலப்பரீட்சை நடத்த காத்திருக்கிறார்கள்.

    மலேசிய ஓபனில் அடைந்த தோல்விக்கு ஸ்ரீகாந்த் பதிலடி கொடுப்பாரா? என்று பார்ப்போம். சாய்னா நேவால் இந்தோனேசியாவின் டினர் டியா அயுஸ்டைனை எதிர்கொள்கிறார்.
    Next Story
    ×