search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Healthy Recipes"

    • உடல் எடை குறைய தினமும் முளைக்கட்டிய பயறை சாப்பிடலாம்.
    • சாதாரணப் பயறுகளைவிட முளைக்கட்டிய பயறில் ஊட்டச்சத்துகள் அதிகம்.

    தேவையான பொருட்கள் :

    முளைக்கட்டிய பயறு கலவை - ஒரு கப்,(அனைத்து பயிறுகளும் கலந்தது)

    வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்

    சீரகம் - ஒரு டீஸ்பூன்,

    உப்பு , மிளகுத்தூள் - தேவைக்கு,

    கறிவேப்பிலை - சிறிதளவு

    செய்முறை:

    முளைக்கட்டிய பயறை வேக வைக்கவும். சிறிதளவு வேக வைத்த பயறை தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள பயறை வேக வைத்த தண்ணீருடன் சேர்த்து அரைக்கவும்.

    அடி கனமான பாத்திரத்தில் வெண்ணெய் விட்டு உருக்கி சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

    இதனுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.

    மேலே மிளகுத்தூள், தனியாக எடுத்து வைத்த பயறு சேர்த்து கலந்து பருகலாம்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்த கீரையை பச்சையாக உண்ணுதல் மிகவும் நல்லது.
    • வல்லாரைக் கீரை சமைக்கும்போது புளி சேர்த்தால், அதன் பலன் முழுமையாக கிடைக்காது.

    தேவையான பொருட்கள் :

    வல்லாரைக்கீரை - அரை கட்டு,

    தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று,

    இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்),

    தேங்காய் துருவல், - கால் கப்,

    பச்சை மிளகாய் - 5,

    கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,

    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,

    எண்ணெய் - 2 டீஸ்பூன்,

    உப்பு - தேவைக்கேற்ப.

    செய்முறை:

    வல்லாரைக்கீரையை முள் நீக்கி விட்டு நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் வல்லாரைக்கீரை, நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய் துருவல் என ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும்.

    ஆறியபின் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும்.

    மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுதில் சேர்க்கவும்.

    சத்தான சுவையான வல்லாரை சட்னி ரெடி.

    குறிப்பு: வல்லாரைக் கீரை மூளையை சுறுசுறுப்பாக்கும். நினைவாற்றலை வளர்க்கும். வல்லாரைக் கீரை சமைக்கும்போது புளி சேர்த்தால், அதன் பலன் முழுமையாக கிடைக்காது.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகள் தினமும் வெரைட்டியாக சாப்பிட ஆசைப்படுவாங்க.
    • குழந்தைகளுக்கு இந்த தோசையை செய்து கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள்:

    தோசைமாவு - தேவையான அளவு

    பன்னீர் - 2 கப்

    குடை மிளகாய் - 1

    வெங்காயம் - 1

    தக்காளி - 1

    பச்சை மிளகாய் - 1

    மஞ்சள்தூள் - 1/2 டீ ஸ்பூன்

    சீரகத்தூள் - 1 டீ ஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்

    கரம் மசாலா - 1 டீ ஸ்பூன்

    பட்டர் - தேவையான அளவு

    கொத்தமல்லித்தழை, புதினா - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு

    நெய் - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பன்னீரை துருவிக் கொள்ளவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து பட்டர் சேர்த்து உருகியதும் வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய் சேர்த்து நன்கு சாஃப்ட் ஆகும் வரை வதக்க வேண்டும்.

    பிறகு, அதில் தக்காளி சேர்த்து வதங்கியதும் மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகாய் தூள், கரம் மசாலா வதக்கி கொள்ள வேண்டும்.

    இப்பொழுது அதில், துருவிய பன்னீரை சேர்த்து கொள்ளலாம்.

    தேவையான அளவு உப்பு மற்றும் கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து வதக்க வேண்டும். இப்பொழுது பன்னீர் மசாலா ரெடியாகி விட்டது. இதை தனியே வைத்துக் கொள்ள வேண்டும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை எடுத்து தோசை போல் ஊற்றி அதன் மேல் நெய் சேர்த்து நன்கு மொறு மொறுப்பாகும் வரை வேக விட வேண்டும்.

    இப்பொழுது தோசையின் மேல் பன்னீர் மசாலாவை சேர்க்க வேண்டும். அதன் மேல் சிறிது பட்டர் வைத்துக் கொள்ளலாம். தோசை வெந்ததும் இரண்டாக மடித்து தட்டில் மாற்ற வேண்டும்.

    இப்போது சூப்பரான பன்னீர் மசாலா தோசை ரெடி.

    இதனுடன் தேங்காய் சட்னி சேர்த்து பரிமாறினால் நன்றாக இருக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்த சட்னி செய்ய 15 நிமிடங்களே போதுமானது.
    • இன்று இந்த சட்னி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    வெங்காயம் - 1

    தக்காளி - 1

    பூண்டு - 4 பற்கள்

    காய்ந்த மிளகாய் -5

    இஞ்சி - சிறிய துண்டு

    கறிவேப்பிலை - 2 ஆர்க்கு

    புதினா - சிறிதளவு

    கொத்தமல்லி இலை - சிறிதளவு

    புளி - 1/2 தேக்கரண்டி

    துருவிய தேங்காய் - 1/4 கப்

    உப்பு - தேவைக்கேற்ப

    எண்ணெய் - 2 தேக்கரண்டி

    தாளிக்க

    எண்ணெய் - 1 தேக்கரண்டி

    கடுகு - 1/2 தேக்கரண்டி

    உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி

    செய்முறை

    வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும்.

    இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிகப்பு மிளகாயை போட்டு வறுத்த பின்னர் வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, புளி என்று ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் துருவிய தேங்காய் சேர்த்து 5 நிமிடம் வதக்கி பின் இறக்கி ஆற வைக்கவும்.

    அனைத்து நன்றாக ஆறிய பின்னர் மிக்சியில் போட்டு உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, அரைத்த சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.

    சூப்பரான கதம்ப சட்னி ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • பலவகை ரசங்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம்.
    • அகத்திக்கீரை ரசம் சுவையிலும் மணத்திலும் தனித்துவம் மிக்கது.

    தேவையான பொருட்கள்

    அகத்திக்கீரை - 1 கட்டு

    சீரகம், தனியா - தலா 1 டீஸ்பூன்

    காய்ந்த மிளகாய் - 3

    சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி

    தேங்காய் - 2 சில்லு

    புளி - எலுமிச்சை அளவு

    உப்பு, நல்லெண்ணெய் - தேவைக்கு

    கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு

    செய்முறை

    அகத்திக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொதிக்கும் தண்ணீரில் வேகவைத்து, தண்ணீரை வடிக்கவும்.

    சீரகம், தனியா, காய்ந்த மிளகாய், சின்னவெங்காயம், தேங்காய் இவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும்.

    புளியை சிறிதளவு தண்ணீரில் ஊறவைத்து கரைக்கவும்.

    வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் அதில் புளிக்கரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.

    வேகவைத்த கீரை, மசாலா விழுதைச் சேர்த்து தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.

    இப்போது சூப்பரான சத்தான அகத்திக்கீரை ரசம் ரெடி.

    பெண்களுக்கு தாய்ப்பால் ஊற, இந்த ரசத்தைத்தான் கொடுப்பார்கள்.

    இந்த ரசத்தை சூப் போன்றும் குடிக்கலாம்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • ராஜ்மாவில் நிறைந்துள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்க உதவும்.
    • ராஜ்மாவில் உள்ள துத்தநாகம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும்.

    தேவையான பொருட்கள்

    ராஜ்மா - 1 கப்,

    ஸ்வீட்கார்ன் - 1 கப்,

    வெள்ளரிக்காய் - 1

    தக்காளி - 1

    வெங்காயம் - 1,

    வெங்காயத்தாள் - சிறிதளவு,

    எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்,

    உப்பு - தேவைக்கு,

    மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,

    புதினா இலை - சிறிது.

    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, புதினா, வெள்ளரிக்காய், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ராஜ்மாவை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் வேகவைத்துக் கொள்ளவும்.

    ஸ்வீட்கார்னையும் வேகவைத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வேக வைத்த ராஜ்மா, ஸ்வீட்கார்ன், உப்பு, வெங்காயம், தக்காளி, வெங்காயத்தாள், வெள்ளரிக்காய், எலுமிச்சை சாறு, மிளகுத்தூள், புதினா சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    அருமையான ராஜ்மா, ஸ்வீட்கார்ன் சாலட் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • கேழ்வரகில் கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால், எலும்புகள் வலுப்படும்.
    • கேழ்வரகில் நார்ச்சத்து அதிக அளவு உள்ளது.

    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 3 கப்

    உப்பு - 1/2 டீஸ்பூன்

    தேங்காய் - 1/2 மூடி (துருவிக் கொள்ளவும்)

    நெய் - தேவையான அளவு

    செய்முறை :

    * ஒரு பாத்திரத்தில் கோழ்வரகு மாவு மற்றும் உப்பு போட்டு, லேசாக தண்ணீர் சேர்த்து புட்டு பதத்திற்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.

    * இட்லி பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து கொதிக்க விட வேண்டும்.

    * அதற்குள் ஒரு இட்லி துணியை நீரில் நனைத்து நீரை முற்றிலும் பிழிந்து, இட்லி தட்டில் விரித்து, பிரட்டி வைத்துள்ள கேழ்வரகு கலவையை இட்லி தட்டில் பரப்பி விடவும்.

    * இட்லி பாத்திரத்தில் உள்ள நீரானது கொதிக்க ஆரம்பித்ததும், இட்லி தட்டை பாத்திரத்தினுள் வைத்து, மூடி வைத்து 20 நிமிடம் வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.

    * பிறகு அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, சூடாக இருக்கும் போதே அத்துடன் தேங்காய் துருவல் மற்றும் நெய் சேர்த்து பிரட்டி பரிமாறினால், சத்தான கேழ்வரகு புட்டு ரெடி!!

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • கேழ்வரகில் நார்ச்சத்து அதிக அளவு உள்ளது.
    • கேழ்வரகில் கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால், எலும்புகள் வலுப்படும்.

    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - நான்கு கப்

    உளுந்து - முக்கால் கப் ,

    குடைமிளகாய் - 1,

    ப.மிளகாய் - 3

    கேரட் - 1,

    வெங்காயம் - 1,

    இஞ்சி - சிறிய துண்டு,

    பச்சைப் பட்டாணி - கால் கப்

    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

    கொத்தமல்லித் தழை - தேவையான அளவு

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    தாளிக்க

    கடுகு, பெருங்காயம், உளுந்தம் பருப்பு - தலா கால் டீஸ்பூன்,

    காய்ந்த மிளகாய் - மூன்று ,

    கறிவேப்பிலை - சிறிதளவு,

    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், குடைமிளகாய், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.

    கேழ்வரகு மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு கெட்டியாகக் கரைத்து வையுங்கள்.

    உளுந்தை நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைத்து நன்றாக அரைத்து கேழ்வரகு மாவில் சேர்த்து உப்பு போட்டு இட்லி மாவு பதத்தில் முதல் நாள் இரவே கரைத்து வையுங்கள். மறுநாள் நன்றாகப் பொங்கி விட்டிருக்கும். இந்த மாவை இட்லித் தட்டில் ஊற்றி 10 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து இட்லிகளை ஆற வைத்துச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வையுங்கள்.

    கடாயில் எண்ணெய் சேர்த்துக் கடுகு, பெருங்காயம், உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் குடைமிளகாய், கேரட் துருவல், வேகவைத்த பட்டாணி, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

    பிறகு கொஞ்சம் உப்பு சேர்த்து வெட்டி வைத்த இட்லித் துண்டுகளைப் போட்டு நன்றாகப் புரட்டி யெடுங்கள்.

    கடைசியாக கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்குங்கள்.

    இப்போது சூப்பரான கேழ்வரகு மசாலா இட்லி ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • முடக்கத்தான் கீரை உடலில் ஏற்படும் வாய்வு பிரச்சனைகளை விரட்டி அடிக்கும் அருமருந்தாகும்.
    • முடக்கத்தான் கீரை மூட்டு வலி, முடக்கு வாதம், கைகால் குடைச்சலை தீர்க்கும்.

    தேவையான பொருட்கள்:

    முடக்கத்தான் கீரை இலை - 3 கைப்பிடி

    பச்சரிசி - கால் கிலோ

    சிவப்பு மிளகாய் - 6

    மிளகு தூள் - 1 டீஸ்பூன்

    தேங்காய் - அரை மூடி

    நெய் - தேவையான அளவு

    பாசிப்பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க:

    கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம், கடலைப்பருப்பு - தலா 1 டீஸ்பூன்

    செய்முறை:

    முடக்கத்தான் கீரை இலையை நன்கு கழுவி, பொடியாய் நறுக்கிக் கொள்ளவும்.

    தேங்காயை துருவிக்கொள்ளவும்.

    பச்சரியை நன்றாக கழுவி 1 மணிநேரம் ஊறவைக்கவும்.

    ஊறவைத்த பச்சரியுடன் தேங்காய் துருவல், சிவப்பு மிளகாய் சேர்த்து கரகரப்பாய் அரைத்துகொள்ளவும்.

    வாணலியில் சிறிதளவு நெய் விட்டு சூடானதும் முடக்கத்தான் கீரை இலையை போட்டு நன்றாக வதக்கவும்.

    அரைத்த மாவில் வதக்கிய கீரை, மிளகு தூள், உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும்.

    வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து, கலந்து வைத்த மாவைப் போட்டு நிறம் மாறும்வரை வதக்கவும். கைவிடாமல் கிளறி விடவும். மாவு பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது இறக்கி ஆற வைக்கவும்.

    மாவு நன்றாக ஆறியதும் மாவை நெய்யைத் தொட்டுக்கொண்டு பிடி கொழுக்கட்டைகளாக பிடித்து வைக்கவும்.

    இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் இட்லி தட்டில் செய்து வைத்த பிடி கொழுக்கட்டைகளை அடுக்கி வைத்து 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான முடக்கத்தான் கீரை பிடி கொழுக்கட்டை ரெடி.

    இந்த கொழுக்கட்டை மூட்டு வலி, வாய்வு பிடிப்புக்கு மிகவும் நல்லது. ஆவியில் வேக வைப்பதால் இதன் மருத்துவத்தன்மை முழுமையாய் கிடைக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • ஓடியாடி விளையாடும் குழந்தைகளுக்குச் சத்து நிறந்த உணவைக் கொடுக்க வேண்டும்.
    • இன்று ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    பஞ்சாபி மிளகு அப்பளம் - 5 (பெரியது)

    வெங்காயம் - 150 கிராம்

    தக்காளி - 100 கிராம்

    வெள்ளரிக்காய் - 1,

    கேரட் - 2

    கொத்தமல்லி - தேவையான அளவு

    ஓமப்பொடி - 2 கப்

    சாட் மசாலா - 3 டீஸ்பூன்

    சர்க்கரை - 2 டீஸ்பூன்

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    அப்பளத்தின் இரு புறமும் சிறிது எண்ணெய் தடவி மைக்ரோவேவ் அவனில் இரண்டு நிமிடங்கள் வைத்து நன்கு சுட்டெடுங்கள். மைக்ரோவேவ் அவன் இல்லாதவர்கள் கேஸ் அடுப்பில் சூட்டுக்கொள்ளலாம்.

    அப்பளம் லேசாக ஆறியதும் அதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, வெள்ளரி, துருவிய கேரட் முதலியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் பரப்புங்கள்.

    அதன் மேல் தேவையான சாட் மசாலா, உப்பு, சர்க்கரையைத் தூவுங்கள்.

    கடைசியில் ஓமப் பொடி, கொத்தமல்லி தூவி அலங்கரியுங்கள்.

    சூப்பரான மசாலா பப்பட் சாட் ரெடி.

    சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் விரும்பும் சாட் இது.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • வெந்தய கீரை கூட்டு, மிகவும் சத்தான, சுவையான கூட்டு.
    • சூடான சாதத்தில் இந்த கூட்டு, நெய் சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    வெந்தய கீரை - 2 கப்

    பாசி பருப்பு - 5 மேஜைக்கரண்டி

    தேங்காய் - கால் கப்

    சாம்பார் தூள் - 1 தேக்கரண்டி

    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

    உப்பு - தேவைக்கேற்ப

    சர்க்கரை - 1/4 தேக்கரண்டி

    தாளிக்க

    எண்ணெய் - 2 தேக்கரண்டி

    கடுகு - 1/2 தேக்கரண்டி

    உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

    சீரகம் - 1 தேக்கரண்டி

    சின்ன வெங்காயம் -7

    செய்முறை

    சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாசி பருப்பை நன்றாக கழுவி 1/2 கப் தண்ணீர் சேர்த்து, 2 விசில் மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும்.

    வெந்தய கீரையை ஆய்ந்து, கழுவி சுத்தம் செய்துகொள்ளவும்.

    சிறிது தண்ணீரை கொதிக்கவைத்து, அதில் வெந்தய கீரை, சாம்பார் தூள், மஞ்சள் தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து வேக வைக்கவும்.

    தேங்காயை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    வெந்த கீரை வெந்ததும் அதில் வேக வைத்த பருப்பை சேர்க்கவும்.

    அடுத்து அதில் அரைத்த தேங்காயையும் சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் தாளிக்க வேண்டிய பொருட்களை சேர்த்த பின்னர் சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமானவுடன் கூட்டில் சேர்த்து கலக்கவும்.

    இப்போது சூப்பரான வெந்தய கீரை பருப்பு கூட்டு ரெடி.

    அறவே கசப்புத்தன்மை தெரியாது. எந்த சாதத்துடனும் தொட்டு சாப்பிடலாம்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    டைப் 2 வகை நீரிழிவு நோய்க்கான அபாயத்தை சோயா பீன்ஸ் குறைக்கிறது. எலும்பு முறிவு ஏற்பட்ட ஒருவர் சோயாபீன்ஸ் உட்கொள்வதன் மூலம் விரைவில் குணமாக உதவுகிறது.
    தேவையான பொருட்கள் :

    சோயா பீன்ஸ் - அரை கப்
    தக்காளி -1
    சிறிய வெங்காயம் - 1 கைப்பிடி
    கொத்தமல்லி - சிறிதளவு
    மிளகுத்தூள் -1/2 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    உப்பு - தேவைக்கேற்ப
    பட்டை, பூண்டு - தேவைக்கேற்ப

    செய்முறை :

    சோயாபீன்ஸை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் சோயா பீன்ஸ், தக்காளி, வெங்காயம், தேவையான அளவு உப்பு, பூண்டு, பட்டை, மிளகுத்தூள், மஞ்சள்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.

    அனைத்தும் நன்றாக வெந்தபின் அதனை மசித்து வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும்.

    அடுத்து அதில் போதுமான அளவு உப்பு சேர்த்து கொத்தமல்லி தழை தூவி, சூடாக பரிமாறலாம்.

    சப்பாத்தி, தோசை, சூடான சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த கூட்டு.
    ×