search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hanged himself"

    • நாதன் (65) கூலித் தொழிலாளி இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார்.
    • இந்த நிலையில் நேற்று காலை நாதன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    திருச்செங்கோடு பால்மடை காமாட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் நாதன் (65) கூலித் தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இவரது மனைவி மற்றும் மூத்த மகன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிகிறது. இவரது 2-வது மகன் பிரபு அதே பகுதியில் உள்ளதாகவும் அவர் தந்தையை பராமரித்து வந்தாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை நாதன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கடனை திருப்பி செலுத்த முடியாததால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    சத்துவாச்சாரி ஒய்.ஆர்.எஸ்.எஸ். 2-வது தெருவை சேர்ந்தவர் கமால் (வயது 54). ஆட்டோ டிரைவர். இவர் பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

    டிரைவர் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை.

    கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்து வந்தனர்.

    இதனால் விரத்தி அடைந்த கமால் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனைக் கண்ட அவரது குடும்பத்தினர் இது குறித்து சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கமால் பிணத்தை மீட்டு பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கமால் கடன் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரு வாரமாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்தவர் மனோகரன்.

    இவரது மகள் சத்யா (வயது 19). இவர் வாணியம்பாடியில் உள்ள ஒருதனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த ஒரு வாரமாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள் ளார். இதனால் அவரை தாயார் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சத்யா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி தாலுகா போலீ சார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தந்தை திட்டியதால் விரக்தி
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் அடுத்த வஞ்சூர், ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் ராகுல் (வயது 17). குடியாத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது ராகுலை, அவரது தந்தை திட்டியுள்ளார்.

    இதனால் மனமுடைந்த ராகுல் வீட்டில் இருந்த பேனில் தூக்கில் தொங்கினார்.

    இதனை பார்த்த அவரது பெற்றோர், ராகுலை மட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ராகுல் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து விருதம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எலக்ட்ரீக்கல் கடை நடத்தி வந்தார்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் பார்சனா பள்ளி பகுதியைச் சேர்ந்த சதீஷ் (வயது 30). இவர் ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் எலக்ட்ரீக்கல் கடை நடத்தி வந்தார்.

    இந்தநிலையில் நேற்று இரவு வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து உமராபாத் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து உடலை கைப்பற்றி ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் அரசுமர தெருவை சேர்ந்தவர் சாம்ராஜ் இவரது மகன் அனுமுத்து (வயது 35).

    இவர் கார்பெண்டர் வேலை செய்து வந்தார். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    திருமணம் ஆன பிறகு அனுமுத்து மாமியார் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் அனுமுத்து தனது மனைவியுடன் சண்டை போட்டு கொண்டு புதுப்பேட்டை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இந்நிலையில் கடந்த வாரம் அனுமுத்து தனது மாமியார் வீட்டுக்கு வந்தார். மனமுடைந்த அவர் வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலிஸ் சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கருத்து வேறுபாடு காரணமாக மன உளைச்சல்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அடுத்த சாஸ்திரி நகர் அருகே உள்ள பகவதி நகரைச் சேர்ந்தவர் லோகேஷ் (வயது 29), கார்பெண்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக, லோகேஷை விட்டு பிரிந்து தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார்.

    பின்னர் மாமியார் வீட்டுக்குச் சென்று லோகேஷ், மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். லோகேஷ் வீட்டிற்கு வர அவரது மனைவி மறுத்துவிட்டார்.

    இதனால் மன உளைச்சலுக்கு ஆளானார். நேற்று இரவு வீட்டில் இருந்த லோகேஷ் பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் லோகேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை சேர்த்தனர்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த பையனப்பள்ளியில் பகுதியில் சுடுகாடு உள்ளது. அப்போது சுடுகாடு அருகே உள்ள மரத்தில் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி புடவையால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதனை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வெலக்கல்நத்தம் கிராம நிர்வாக அலுவலர் சிவன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரு தலை காதலால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அருகே ஒருதலை காதலால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றர்.

    வேலூர் அடுத்த பாகாயம் அருகே உள்ள மேட்டு இடையம்பட்டி கிராமம், கணவாய்மேடு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் மணிகண்டன்(வயது 26), கட்டிட மேஸ்திரி. இவர் அதே பகுதியில் உள்ள உறவினர் பெண்ணை ஒரு தலையாக கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

    மேலும் அந்தப் பெண்ணிடம் தனது காதலை கூறியதாக தெரிகிறது. ஆனால் அவர் தன் பெற்றோர் பார்த்து சொல்பவரே திருமணம் செய்து கொள்வேன் எனக் கூறியுள்ளார். இதனால் மணிகண்டன் தனது பெற்றோரை அழைத்துக்கொண்டு அவர் வீட்டுக்குச் சென்று பெண் கேட்டுள்ளார்.

    ஆனால் அவருக்கு தங்கள் மகளை தரமாட்டோம் என பெண்ணின் பெற்றோர் கூறியதாக தெரிகிறது. இதனால் மன வேதனை அடைந்த மணிகண்டன் நேற்று முன்தினம் அருகிலுள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பாகாயம் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரே கயிற்றில் தொங்கிய பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    கலசபாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த தென்பள்ளிப்பட்டு மதுரா மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 70). இவரது மனைவி கஸ்தூரி (65) இவர்கள் உப்பு மற்றும் கோலமாவு வியாபாரம் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் கடந்த 6 மாதமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவதிப்பட்டு வந்தனர்.

    மேலும் அதே கிராமத்தில் வசித்து வந்த மகன் மற்றும் மருமகள் அவ்வப்போது வீட்டிற்கு வந்து தேவையானதை வாங்கிக் கொடுத்து பார்த்து வந்துள்ளனர்.

    இருப்பினும் கடந்த 3 நாட்களாக கதவை சாத்திக்கொண்டு யாரிடமும் பேசாமல் இருந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மதியம் வழக்கம் போல் அவரது மருமகள் பூங்காவனம் வீட் டிற்கு சென்று உள்ளார்.

    அப்போது ஒரே கயிற்றில் கதிர்வேலுவும் அவரது மனைவி கஸ்தூரியும் தூக்கில் தொங்கி கிடந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பூங்காவனம் கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இறந்த நிலையில் கிடந்த இருவரையும் கீழே இறக்கினர்.

    இச் சம்பவம் குறித்து கலசபாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கணவன், மனைவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரே கயிற்றில் கணவன் மனைவி தூக்கு போட்டு இறந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • அறையில் கணவர் தூக்குபோட்டு தொங்கி கொண்டி ருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு 46 புதூர் வேல பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் கில்பர்ட் (30). இவரது மனைவி ஆரோக்கியரோசாலி (27). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    ஜான் கில்பர்ட் லக்காபு ரத்தில் உள்ள ஒரு சிப்ஸ் கம்பெனியில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவி யுடன் தகராறில் ஈடுபட்டு உள்ளார். அவரது மனைவி கண்டித்தும் அவர் அதை கண்டு கொள்ளவில்லை.

    இந்நிலையில் நேற்று முன்தினம் சிக்ஸ் கம்பெனி க்கு விடுமுறை என்பதால் வாங்கிய சம்பளத்தில் அதிக அளவில் மது அருந்திவிட்டு குடிபோதையில் ஜான் கில்பர்ட் வீட்டுக்கு வந்து உள்ளார். அவர் மனைவி யிடம் தகராறில் ஈடுபட்டு அவர் வெளியே போகச் சொல்லி திடீரென வீட்டிற்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டார்.

    சிறிது நேரம் பார்த்து விட்டு அவரது மணி வீட்டின் கதவை தட்டி யுள்ளார். ஆனால் பதில் ஏதும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழியாக பார்த்த போது வீட்டில் உள்ள அறையில் கணவர் தூக்கு போட்டு தொங்கி கொண்டி ருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று அவரை மீட்டு சிகிச்சை க்காக ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரி சோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே வரும் வழி யிலேயே ஜான் கில்பர்ட் இறந்து விட்டதாக தெரி வித்தார்.

    இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜான் கில்பர்ட் உடலைப் பார்த்து அவரது மனைவி- குழந்தை கள் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

    • மரத்தில் பிணமாக தொங்கினார்
    • சாவில் சந்தேகம் இருப்பதாக மகள் புகார்

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த வில்வபுரத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 80). இவரது மகள் கோகிலா (50). மகன் நாராயணமூர்த்தி (45). கோகிலா திருமணமாகி ராணிப்பேட்டையில் வசித்து வருகிறார்.

    நாராயணமூர்த்தி தந்தையிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பாலகிருஷ்ணன் வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.

    நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பாலகிருஷ்ணன் தூக்கில் தொங்குவதை கண்டு கோகிலாவிற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செய்யாறு போலீசார் பாலகிருஷ்ணன் உடலை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    கோகிலா போலீஸ் நிலையத்தில் தனது தந்தை சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×