என் மலர்
உள்ளூர் செய்திகள்

டிரைவர் தூக்கிட்டு தற்கொலை
- கடனை திருப்பி செலுத்த முடியாததால் விரக்தி
- போலீசார் விசாரணை
வேலூர்:
சத்துவாச்சாரி ஒய்.ஆர்.எஸ்.எஸ். 2-வது தெருவை சேர்ந்தவர் கமால் (வயது 54). ஆட்டோ டிரைவர். இவர் பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
டிரைவர் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை.
கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்து வந்தனர்.
இதனால் விரத்தி அடைந்த கமால் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனைக் கண்ட அவரது குடும்பத்தினர் இது குறித்து சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கமால் பிணத்தை மீட்டு பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கமால் கடன் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.






