என் மலர்
உள்ளூர் செய்திகள்

சுடுகாட்டில் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை
- பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை சேர்த்தனர்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த பையனப்பள்ளியில் பகுதியில் சுடுகாடு உள்ளது. அப்போது சுடுகாடு அருகே உள்ள மரத்தில் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி புடவையால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதனை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வெலக்கல்நத்தம் கிராம நிர்வாக அலுவலர் சிவன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






