என் மலர்
உள்ளூர் செய்திகள்

கார்பெண்டர் தூக்கிட்டு தற்கொலை
- 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் அரசுமர தெருவை சேர்ந்தவர் சாம்ராஜ் இவரது மகன் அனுமுத்து (வயது 35).
இவர் கார்பெண்டர் வேலை செய்து வந்தார். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணம் ஆன பிறகு அனுமுத்து மாமியார் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் அனுமுத்து தனது மனைவியுடன் சண்டை போட்டு கொண்டு புதுப்பேட்டை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்நிலையில் கடந்த வாரம் அனுமுத்து தனது மாமியார் வீட்டுக்கு வந்தார். மனமுடைந்த அவர் வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலிஸ் சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






