என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதியவர் தூக்கிட்டு தற்கொலை
    X

    முதியவர் தூக்கிட்டு தற்கொலை

    • மரத்தில் பிணமாக தொங்கினார்
    • சாவில் சந்தேகம் இருப்பதாக மகள் புகார்

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த வில்வபுரத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 80). இவரது மகள் கோகிலா (50). மகன் நாராயணமூர்த்தி (45). கோகிலா திருமணமாகி ராணிப்பேட்டையில் வசித்து வருகிறார்.

    நாராயணமூர்த்தி தந்தையிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பாலகிருஷ்ணன் வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.

    நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பாலகிருஷ்ணன் தூக்கில் தொங்குவதை கண்டு கோகிலாவிற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செய்யாறு போலீசார் பாலகிருஷ்ணன் உடலை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    கோகிலா போலீஸ் நிலையத்தில் தனது தந்தை சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×