என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை
    X

    வாலிபர் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை

    • எலக்ட்ரீக்கல் கடை நடத்தி வந்தார்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் பார்சனா பள்ளி பகுதியைச் சேர்ந்த சதீஷ் (வயது 30). இவர் ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் எலக்ட்ரீக்கல் கடை நடத்தி வந்தார்.

    இந்தநிலையில் நேற்று இரவு வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து உமராபாத் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து உடலை கைப்பற்றி ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×