search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hanged himself"

    • வேலை கிடைக்காத விரக்தியில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி டவுன், ஆரணி பாளையம் கே.கே. நகரை சேர்ந்தவர் நடராஜன். நெசவு தொழிலாளி.

    இவரது மனைவி லட்சுமி, மகன்கள் பார்த்திபன், கணேஷ் (வயது 32). கணேஷ் டிப்ளமோ முடித்துவிட்டு வேலை தேடி வந்தார்.

    வேலை கிடைக்காததால் மன உளைச்சலில் காண ப்பட்டார். குடும்பத்தினர் ஆற்காடு பகுதியில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றிருந்தனர்.

    கணேஷ் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்த நிலையில் வேலை கிடைக்காத விரக்தியில் கணேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து ஆரணி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கணேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் விசாரணை
    • தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் கஸ்பா பகுதியை சேர்ந்தவர் திவாகர் (வயது 18). பால் வியாபாரி. இவர் இன்று காலை ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் பின் புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.

    அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து ஆம்பூர் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திவாகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கவனித்துக் கொள்ள யாரும் இல்லாததால் மன உளைச்சலில் காணப்பட்டார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரம் அடுத்த செதுவாலை பகுதியைச் சேர்ந்தவர் சுபான் ( வயது 19). இவர் வேலூர் பைபாஸ் சாலையில் உள்ள லாரி உடைக்கும் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    இவரது தாயார் வெளிநாட்டிற்கு சென்று வீட்டு வேலை செய்து வருகிறார். அதேபோல் இவருடைய அண்ணனும் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சுபான் தன்னுடைய தாத்தாவுடன் செதுவாலையில் தங்கி உள்ளார்.

    இந்த நிலையில் தன்னை கவனித்துக் கொள்ள யாரும் இல்லாததால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் சுபான் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு சுபான் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த அவரது தாத்தா வீட்டின் கதவை தட்டினார்.

    நீண்ட நேரமாகியும், கதவு திறக்காததால் உடனடியாக அருகில் இருந்தவர்களை அழைத்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது சுபான் தூக்கில் தொங்கியவாறு துடிதுடித்துக்கொண்டு இருந்தார்.

    உடனடியாக அவரை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சுபான் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடல்நிலை சரியில்லாததால் மன உளைச்சல்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த குறிப்பேடு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் தீபா (வயது 22).

    இவர் 1½ ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் தலையில் அடிபட்டு தொடர்ந்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    உடல்நிலை சரியாகாததால் மன உளைச்சலுக்கு ஆளானார். திடீரென வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவருடைய தந்தை தீபாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற்று வீட்டிற்கு திரும்பினார்.

    பின்னர் வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மேல் மருவத்தூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீபாவை பரிசோதித்த டாக்டர்கள் தீபா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கீழ்க்கொ டுங்காலூர் போலீஸ் நிலையத்தில் ஏழுமலை புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வயிற்று வலியால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை, சிப்காட் அடுத்த பெல் நரசிங்கபுரம் சர்ச் தெருவை சேர்ந்தவர் நிலா. இவரது மகன் பிரபாகரன்(29) சென்னையில் சினிமா படப்பிடிப்பிற்கான செட் அமைக்கும் பணியில் கூலி வேலை செய்து வந்தவர்.

    கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட பிரபாகரன் அதற்காக மாத்திரை, மருந்து சாப்பிட்டு வந்துள்ளார்.

    இந்த நிலையில் வயிற்று வலியால் கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த பிரபாகரன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது தொடர்பாக பிரபாகரனின் தாய் நிலா கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார், பிரபாகரன் உடலை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்
    • மின்விசிறியில் பிணமாக தொங்கினார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை வள்ளலார் நகர் ஈ.வே.ரா. தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது29) இவர் பி.காம் வரை படித்துவிட்டு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சந்தோஷ் பார்த்து வந்த வேலையிலிருந்து விடுவிக்கப்பட்டதாக தெரிகிறது.

    இதனால் சந்தோஷ் வேலைக்கு செல்லாமல் வீட்டில் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்க சென்றவர் நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் எழுந்திரிக்கவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் சந்தோஷ் அறைக்கு சென்று பார்த்த போது, அங்கு மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இது குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் விரைந்து சென்று சந்தோஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தந்தை போலீசில் புகார்

    செய்யாறு:

    வெம்பாக்கம் தாலுகா மேல் கஞ்சாங்குழி கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன். இவரது மகள் லட்சுமிக்கு (வயது 21) கடந்த ஒருமாதத்துக்கு முன்பு மாப்பிள்ளை பார்த்து பெற் றோர் நிச்சயதார்த்தம் செய்தனர்

    ஆனால்லட்சுமி, மேல் கஞ் சாங்குழி கிராமத்தை சேர்ந்த ஆனந்த் என்பவரை காத வித்து யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டுள்ளார். தொடர்ந்து ஆனந்துடன் அவரது வீட்டில் லட்சுமி வசித்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று முன் தினம் அவரது வீட்டில் லட் சுமி தூக்கில் தற்கொலை செய்து கொண்டதாக தந்தை பூபாலனுக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது.

    அதிர்ச்சி அடைந்த அவர் தனது மனைவி மற்றும் குடும் பத்தினருடன் சென்று கதறினார். இது குறித்து அவர் பிரம்மதேசம் போலீஸ் நிலை யத்தில் அளித்த புகாரில் தனது மகள் லட்சுமி சாவில் சந்தேகம் இருப்பதாக தெரி வித்துள்ளார்.

    இதுகுறித்து பிரம்மதேசம் சப்- இன்ஸ் பெக்டர் பாபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • உடல் நலம் பாதிக்கப்பட்டதால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    வெம்பாக்கம்:

    வெம்பாக்கம் அடுத்த பெரிய ஏழாளச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 30). இவர் செய்யாறு சிப்காட்டில் கடந்த 10 வருடமாக வேலை செய்து வந்தார்.

    இவரது மனைவி நிர்மலா ( 27), இவர்களுக்கு தீபன் (7) என்ற மகனும், ஒரு வயதில் சஸ்மிதா என்ற பெண் குழந்தையும் உள்ளது.

    பாஸ்கரனுக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்க ப்பட்டதால் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 8-ந் தேதி மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளானார்.

    வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு பாஸ்கரன் தொங்கிய நிலையில் கிடந்தார். இதனைக் கண்ட உறவினர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    மேல் சிகிச்சைக்காக செங்கல் பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பாஸ்கரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாஸ்கரின் தந்தை தாமோதரன் தூசி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • குடும்ப தகராறில் விரக்தி
    • வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த மாதனூர் சந்தை மேடை சேர்ந்தவர் தயாளன் (வயது 40), கூலி தொழிலாளி.

    இவரது மனைவியுடன் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தயாளன் நேற்றிரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தயாளன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனைவி தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வற்புறுத்தியதால் விரக்தி
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் லத்தேரி அடுத்த பி.என்.பாளையம், பாறையூர், இருளர் காலனியை சேர்ந்தவர் சோமநாதன். டிராக்டர் டிரைவர்.

    இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் மகாலட்சுமி நங்கமங்கலத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு கணவரிடம் வற்புறுத்தினார்.

    மது போதையில் இருந்த சோமநாதன் மனைவியை அவரது தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்ல மறுப்பு தெரிவித்தார். இதனால் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் விரக்தி அடைந்த சோமநாதன் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கினார். இதனைக் கண்ட சோமநாதன் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக லத்தேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சோமநாதன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து லத்தேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனவேதனை அடைந்த ரேணுகா தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
    • போலீசார் தற்கொலை செய்வதற்கு முன்பு கணேசன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை கைப்பற்றினர்.

    கோவை,

    கோவை மதுக்கரை அருகே உள பாலத்துறை மெயின் ரோட்டை சேர்ந்தவர் கணேசன் (வயது 68). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி ரேணுகா (54). இவர்களுக்கு வைஷ்ணு என்ற மகன் உள்ளார்.

    தந்தை மகனுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த ரேணுகா தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    மயங்கிய நிலையல் இருந்த அவரை கணேசன் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    சம்பவத்தன்று கணேசன் தனது மனைவியை பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்றார். சிறிது நேரத்துக்கு பின்னர் மீண்டும் வீட்டிற்கு சென்றார்.

    வீட்டில் தனியாக இருந்த அவர் மனைவி தூக்க மாத்திரை சாப்பிட்டதற்கு அவர் தான் காரணம் என நினைத்து மிகுந்த மனவேதனை அடைந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கணேசன் வீட்டில் அருகே உள்ள தேக்கு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் தற்கொலை செய்வதற்கு முன்பு கணேசன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என எழுதி இருந்தார்.

    பின்னர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தாயார் இறந்த வேதனையில் பரிதாபம்
    • மன உளைச்சலில் காணப்பட்டார்

    வேலூர்:

    வேலூர் அடுத்த மூஞ் சூர்பட்டு கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராதிகா (வயது 27). இவர் 5 ஆண்டுக்கு முன் ஆரணி எஸ்.வி. நகர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரை திரு மணம் செய்துகொண்டு அங்கேயே வசித்து வந்தார்.

    இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர். மேலும், ராதிகா 5 மாதம் கர்ப்பிணியாகவும் இருந்தார்.

    இந்த நிலையில், மூஞ் சூர்பட்டில் உள்ள ராதிகா வின் தாயார் சுமதி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தாய் சுமதியை உடனிருந்து

    கவனித்துக்கொள்ள ராதிகா கடந்தவாரம் ஆரணியில் இருந்து பெற்றோர் வீட்டுக்கு சென்று மருத்துவ மனையில் சுமதியை உடனிருந்து கவனித்து வந்தார்.

    கடந்த 29-ந்தேதி காலை சிகிச்சை பலனின்றி சுமதி இறந்து விட்டார். தாய் இறந்ததால் ராதிகா மன உளைச்சலில் காணப்பட்டார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இது குறித்து வேலுார் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ராதிகா உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×