search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
    X

    இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

    • உடல்நிலை சரியில்லாததால் மன உளைச்சல்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த குறிப்பேடு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் தீபா (வயது 22).

    இவர் 1½ ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் தலையில் அடிபட்டு தொடர்ந்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    உடல்நிலை சரியாகாததால் மன உளைச்சலுக்கு ஆளானார். திடீரென வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவருடைய தந்தை தீபாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற்று வீட்டிற்கு திரும்பினார்.

    பின்னர் வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மேல் மருவத்தூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீபாவை பரிசோதித்த டாக்டர்கள் தீபா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கீழ்க்கொ டுங்காலூர் போலீஸ் நிலையத்தில் ஏழுமலை புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×