search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பால் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை
    X

    பால் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை

    • போலீசார் விசாரணை
    • தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் கஸ்பா பகுதியை சேர்ந்தவர் திவாகர் (வயது 18). பால் வியாபாரி. இவர் இன்று காலை ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் பின் புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.

    அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து ஆம்பூர் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திவாகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×