என் மலர்
உள்ளூர் செய்திகள்

கணவன் தூக்கிட்டு தற்கொலை
- மனைவி தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வற்புறுத்தியதால் விரக்தி
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம் லத்தேரி அடுத்த பி.என்.பாளையம், பாறையூர், இருளர் காலனியை சேர்ந்தவர் சோமநாதன். டிராக்டர் டிரைவர்.
இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் மகாலட்சுமி நங்கமங்கலத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு கணவரிடம் வற்புறுத்தினார்.
மது போதையில் இருந்த சோமநாதன் மனைவியை அவரது தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்ல மறுப்பு தெரிவித்தார். இதனால் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் விரக்தி அடைந்த சோமநாதன் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கினார். இதனைக் கண்ட சோமநாதன் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக லத்தேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சோமநாதன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து லத்தேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






