search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
    X

    வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

    • வேலை கிடைக்காத விரக்தியில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி டவுன், ஆரணி பாளையம் கே.கே. நகரை சேர்ந்தவர் நடராஜன். நெசவு தொழிலாளி.

    இவரது மனைவி லட்சுமி, மகன்கள் பார்த்திபன், கணேஷ் (வயது 32). கணேஷ் டிப்ளமோ முடித்துவிட்டு வேலை தேடி வந்தார்.

    வேலை கிடைக்காததால் மன உளைச்சலில் காண ப்பட்டார். குடும்பத்தினர் ஆற்காடு பகுதியில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றிருந்தனர்.

    கணேஷ் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்த நிலையில் வேலை கிடைக்காத விரக்தியில் கணேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து ஆரணி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கணேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×