search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
    X

    வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

    • வயிற்று வலியால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை, சிப்காட் அடுத்த பெல் நரசிங்கபுரம் சர்ச் தெருவை சேர்ந்தவர் நிலா. இவரது மகன் பிரபாகரன்(29) சென்னையில் சினிமா படப்பிடிப்பிற்கான செட் அமைக்கும் பணியில் கூலி வேலை செய்து வந்தவர்.

    கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட பிரபாகரன் அதற்காக மாத்திரை, மருந்து சாப்பிட்டு வந்துள்ளார்.

    இந்த நிலையில் வயிற்று வலியால் கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த பிரபாகரன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது தொடர்பாக பிரபாகரனின் தாய் நிலா கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார், பிரபாகரன் உடலை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×