search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காதல் திருமணம் செய்த பெண் தூக்கிட்டு தற்கொலை
    X

    காதல் திருமணம் செய்த பெண் தூக்கிட்டு தற்கொலை

    தந்தை போலீசில் புகார்

    செய்யாறு:

    வெம்பாக்கம் தாலுகா மேல் கஞ்சாங்குழி கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன். இவரது மகள் லட்சுமிக்கு (வயது 21) கடந்த ஒருமாதத்துக்கு முன்பு மாப்பிள்ளை பார்த்து பெற் றோர் நிச்சயதார்த்தம் செய்தனர்

    ஆனால்லட்சுமி, மேல் கஞ் சாங்குழி கிராமத்தை சேர்ந்த ஆனந்த் என்பவரை காத வித்து யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டுள்ளார். தொடர்ந்து ஆனந்துடன் அவரது வீட்டில் லட்சுமி வசித்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று முன் தினம் அவரது வீட்டில் லட் சுமி தூக்கில் தற்கொலை செய்து கொண்டதாக தந்தை பூபாலனுக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது.

    அதிர்ச்சி அடைந்த அவர் தனது மனைவி மற்றும் குடும் பத்தினருடன் சென்று கதறினார். இது குறித்து அவர் பிரம்மதேசம் போலீஸ் நிலை யத்தில் அளித்த புகாரில் தனது மகள் லட்சுமி சாவில் சந்தேகம் இருப்பதாக தெரி வித்துள்ளார்.

    இதுகுறித்து பிரம்மதேசம் சப்- இன்ஸ் பெக்டர் பாபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×