என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
- தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்
- மின்விசிறியில் பிணமாக தொங்கினார்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை வள்ளலார் நகர் ஈ.வே.ரா. தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது29) இவர் பி.காம் வரை படித்துவிட்டு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சந்தோஷ் பார்த்து வந்த வேலையிலிருந்து விடுவிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனால் சந்தோஷ் வேலைக்கு செல்லாமல் வீட்டில் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்க சென்றவர் நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் எழுந்திரிக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் சந்தோஷ் அறைக்கு சென்று பார்த்த போது, அங்கு மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இது குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் விரைந்து சென்று சந்தோஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்