search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
    X

    வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

    • தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்
    • மின்விசிறியில் பிணமாக தொங்கினார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை வள்ளலார் நகர் ஈ.வே.ரா. தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது29) இவர் பி.காம் வரை படித்துவிட்டு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சந்தோஷ் பார்த்து வந்த வேலையிலிருந்து விடுவிக்கப்பட்டதாக தெரிகிறது.

    இதனால் சந்தோஷ் வேலைக்கு செல்லாமல் வீட்டில் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்க சென்றவர் நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் எழுந்திரிக்கவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் சந்தோஷ் அறைக்கு சென்று பார்த்த போது, அங்கு மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இது குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் விரைந்து சென்று சந்தோஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×