search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "H Vinoth"

    • இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் ஏகே62 படத்தில் நடிக்கவுள்ளார்.
    • இவர் சபரிமலைக்கு யாத்திரை செய்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'துணிவு' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.


    விக்னேஷ் சிவன்

    இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் சபரிமலைக்கு யாத்திரை சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோவை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் இயக்குனர் எச். வினோத் சபரிமலையில் சாமி தரிசனம் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.


    • எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் 'துணிவு'.
    • இப்படத்தின் புதிய போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிட்டது.


    துணிவு போஸ்டர்

    வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் துணிவு திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், 'துணிவு' படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அஜித்தின் புகைப்படத்துடன் 'தி ரியல் வின்னர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வரும் ரசிகர்கள் இது 'துணிவு' பொங்கல் தான் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • எச்.வினோத் இயக்கத்தில் ‘துணிவு’ திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது.
    • இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிட்டது.


    எச்.வினோத்

    வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் துணிவு திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், 'துணிவு' படத்தின் இயக்குனர் எச். வினோத் சபரிமலைக்கு யாத்திரை சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான திரைப்படம் ‘துணிவு’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிட்டது.


    அஜித் - மஞ்சுவாரியர்

    வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் துணிவு திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், நடிகை மஞ்சுவாரியர், அஜித்துடனான புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து 'நீங்கள் நீங்களாகவே இருந்ததற்கு நன்றி அஜித் சார்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.


    • எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான திரைப்படம் ‘துணிவு’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிட்டது.


    துணிவு

    வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் துணிவு திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், அஜித்தின் டான்ஸ் மூவ்ஸ் பற்றி இயக்குனர் எச். வினோத் கூறியதாவது, "துணிவு படத்தின் முதல் பாதியில் வரும் சில நடனங்கள் அஜித் சாரே ஆடியது. பெரிய ஆங்கில் எதுவும் பார்க்கவில்லை. கேமராவை வைத்து விட்டு நீங்க ஆடுங்க சார் என்று விட்டு விட்டோம். மைக்கேல் ஜாக்சன் மூன் வாக் 'moonwalk' நடனத்தை நானும் கல்யாண் சாரும் கேட்காமலே அஜித் சார் அவராகவே ஆசைப்பட்டு ஆடினார். அந்த கதைக்கு சரியாக தேவைப்பட்டது. அதை அஜித் சார் ஈசியாக செய்து விட்டார்" என்று நெகிழ்ச்சியாக கூறினார்.

    • எச் வினோத் இயக்கத்தில் நேற்று முன்தினம் வெளியான திரைப்படம் ‘துணிவு’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிட்டது.


    விக்னேஷ் சிவன் பதிவு

    வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் துணிவு திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன் 'துணிவு' திரைப்படத்தை பார்த்து ரசிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு "திரையில் கிங்கை பார்ப்பது ரசிப்பது அலாதியானது. அனைத்து விதத்திலும் 'துணிவு' திரைப்படம் பிளாக் பஸ்டர். எச்.வினோத் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" என பதிவிட்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

    • துணிவு - வாரிசு திரைப்படங்கள் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
    • ஜனவரி 13-ஆம் தேதி முதல் 16 -ஆம் தேதி வரை வாரிசு மற்றும் துணிவு படங்களின் அதிகாலை 4 மணி மற்றும் 5 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.

    இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் மற்றும் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் வெகு விமர்சையாக நேற்று திரையரங்குகளில் வெளியானது. இரு நடிகர்களின் ரசிகர்கள் மட்டுமல்லாது பல திரைப் பிரபலங்களும் ரசிகர்களுடன் சிறப்புக் காட்சியைக் கண்டு மகிழ்ந்தனர்.


    வாரிசு -துணிவு

    இதைத்தொடர்ந்து ஜனவரி 13-ஆம் தேதி முதல் 16 -ஆம் தேதி வரை வாரிசு மற்றும் துணிவு படங்களின் அதிகாலை 4 மணி மற்றும் 5 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல், திரையரங்க வளாகங்களில் உள்ள உயர்வான பேனர்களுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்யவும் விதிகளை மீறி அதிக கட்டணம் வசூலிப்பதற்கும் தடை விதித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.


    துணிவு - வாரிசு

    இந்நிலையில், தற்போது திரையரங்க அதிபர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12, 13 மற்றும் 18-ம் தேதிகளில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களுக்கு கூடுதல் காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், 14-ம் தேதி முதல் 17 -ம் தேதி வரையி்ல் திரையரங்குகளில் 4 காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் நேற்று வெளியானது.
    • இப்படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

    விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் நேற்று வெளியானது. இந்த இரு படங்களும் ஒரே சமயத்தில் வெளியானதால் ரசிகர்கள், திரையுலகினர், சினிமா விமர்சகர்கள் என பலரின் மத்தியிலும் எதிர்பார்ப்பு அதிகரித்தது. மேலும் ரசிகர்கள் திரையரங்குகளில் மேள தாளம் முழங்க, கட் அவுட் வைத்து மாலை அணிவித்து தங்களின் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். இதற்கு முன்பு விஜய்யின் ஜில்லா, அஜித்தின் வீரம் திரைப்படமும் 9 ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

     

    வாரிசு - துணிவு

    வாரிசு - துணிவு


    இந்நிலையில் வாரிசு-துணிவு திரைப்படங்களின் தமிழ்நாட்டில் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படங்கள் தமிழ்நாட்டில் மட்டும் வெளியான முதல் நாளில் தலா ரூ.20 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. 

    • வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் இன்று வெளியானது.
    • இப்படத்தின் சிறப்பு காட்சியை ரசிகர்களுடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பார்த்து மகிழ்ந்தார்.

    இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் மற்றும் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் வெகு விமர்சையாக இன்று திரையரங்குகளில் வெளியானது. இரு நடிகர்களின் ரசிகர்கள் மட்டுமல்லாது பல திரைப் பிரபலங்களும் ரசிகர்களுடன் சிறப்புக் காட்சியைக் கண்டு மகிழ்ந்தனர்.


    துணிவு - வாரிசு

    இதையடுத்து சென்னையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் ரசிகர்களுடன் வாரிசு படத்தைப் பார்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தளபதி 67 படம் குறித்து கூறியதாவது, "வாரிசு படத்தின் ரிலீஸுக்காக காத்திருந்தேன். இதன் பிறகு அப்டேட்கள் வரும்" எனக் கூறினார்.


    லோகேஷ் கனகராஜ்

    இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும், விரைவில் தளபதி 67 படத்தின் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி 67 படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

    • போக்குவரத்துக்கு இடையூறாக பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களை கைகளால் தட்டி ஆரவாரம் செய்தனர்.
    • பாதுகாப்புக்கு நின்ற கோட்டை போலீசார் ரசிகர்களை கலைந்து செல்லும்படி எச்சரிக்கை விடுத்தனர்.

    நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவான துணிவு திரைப்படம் இன்று (புதன் கிழமை) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இதை முன்னிட்டு திருச்சி மாநகரில் 6 தியேட்டர்களில் இன்று அதிகாலை 1.30 மணிக்கு ரசிகர் மன்றத்தினருக்கு சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அந்த திரையரங்குகள் முன்பு இரவு 11 மணி முதல் ரசிகர்கள் திரள தொடங்கினர். திருச்சி மாரிஸ் பாலம் அருகாமையில் உள்ள தியேட்டரிலும் துணிவு திரைப்படம் நள்ளிரவு திரையிடப்பட்டது. இதையடுத்து நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஆட்டம், பாட்டத்துடன் அங்கு குவிந்தனர்.

    பின்னர் அவர்கள் படம் திரையிடுவதற்கு முன்பாக நள்ளிரவு 12.30 மணி அளவில் போக்குவரத்துக்கு இடையூறாக மாரிஸ் பாலத்தில் நின்று கொண்டு அந்த வழியாக சென்ற பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களை கைகளால் தட்டி ஆரவாரம் செய்தனர். மேலும் ஒரு ஆட்டோவின் மீது ஐந்துக்கும் மேற்பட்டோர் ஏறி நின்று ஆட்டம் போட்டனர். இதில் அந்த ஆட்டோ சேதம் அடைந்தது. இதற்கிடையே அந்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

    சாலையின் இரு பக்கங்களிலும் பாலத்தில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்து நின்றது. அதைத்தொடர்ந்து பாதுகாப்புக்கு நின்ற கோட்டை போலீசார் ரசிகர்களை கலைந்து செல்லும்படி எச்சரிக்கை விடுத்தனர். இருந்தபோதிலும் வாண வேடிக்கைகளை நாலாபுறமும் திருப்பி விட்டு வெடிக்க செய்ததாக கூறப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் கூட்டத்தை கலைக்க ரசிகர்கள் மீது தடியடி நடத்தினர். போலீசாரின் அதிரடியால் ரசிகர்கள் அங்கும் இங்குமாக சிதறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் திட்டமிட்டபடி நள்ளிரவு காட்சி அந்த தியேட்டரில் திரையிடப் பட்டது. இந்த போலீஸ் தடியடியில் பத்துக்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்களுக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டது. மேலும் இருசக்கர வாகனங்களும் சேதம் அடைந்தன. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியது.

    • வாரிசு- துணிவு திரைப்படங்கள் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்-விஜய் திரைப்படங்கள் ஒன்றாக வெளியாவதால் ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா பிரியர்களும் இந்த படங்களை எதிர்பார்த்திருக்கின்றனர்.

    விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த இரு படங்களும் ஒரே சமயத்தில் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். இதற்கு முன்பு விஜய்யின் ஜில்லா, அஜித்தின் வீரம் திரைப்படமும் 9 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான நிலையில், நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்-விஜய் திரைப்படங்கள் ஒன்றாக வெளியாவதால் ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா பிரியர்களும் இந்த படங்களை எதிர்பார்த்திருக்கின்றனர்.


    வாரிசு - துணிவு

    இப்படங்களின் டிக்கெட் முன்பதிவு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. துணிவு திரைப்பட சிறப்புக் காட்சி நாளை அதிகாலை 1 மணிக்கும் வாரிசு திரைப்பட சிறப்புக் காட்சி நாளை அதிகாலை 4 மணிக்கும் திரையிடப்பட உள்ளது. இந்நிலையில், தற்போது இந்த படங்களின் சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


    துணிவு - வாரிசு

    அதாவது, ஜனவரி 13-ஆம் தேதி முதல் 16 -ஆம் தேதி வரை வாரிசு மற்றும் துணிவு படங்களின் அதிகாலை 4 மணி மற்றும் 5 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும், திரையரங்க வளாகங்களில் உள்ள உயர்வான பேனர்களுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், விதிகளை மீறி அதிக கட்டணம் வசூலித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    • துணிவு, வாரிசு திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த இரு படங்களும் ஒரே சமயத்தில் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். இதற்கு முன்பு விஜய்யின் ஜில்லா, அஜித்தின் வீரம் திரைப்படமும் 9 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான நிலையில், நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்-விஜய் திரைப்படங்கள் ஒன்றாக வெளியாவதால் ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா பிரியர்களும் இந்த படங்களை எதிர்பார்த்திருக்கின்றனர்.


    வாரிசு - துணிவு

    வாரிசு படத்தை வம்சி இயக்கியுள்ளார். துணிவு படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். துணிவு மற்றும் வாரிசு படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படங்களின் டிக்கெட் முன்பதிவு பணிகளில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    துணிவு - வாரிசு

    இந்நிலையில், துணிவு, வாரிசு திரைப்படங்களை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கக் கோரி தயாரிப்பு நிறுவனம் சார்ப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் நீதிபதி சரவணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் இரண்டு படங்களும் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும் இரண்டு படங்களுக்கும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.


    வாரிசு - துணிவு

    மேலும், இரண்டு திரைப்படங்களும் சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியானால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்பதால் வாரிசு படத்தை சட்ட விரோதமாக வெளியிட 4,548 இணையதள பக்கங்களுக்கும் துணிவு படத்தை சட்ட விரோதமாக வெளியிட 2,754 இணையதள பக்கங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என வழக்கறிஞர் வாதிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி இரு படங்களையும் சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.

    ×