search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gundam Festival"

    • 20-ந் தேதி காலை 7 மணியளவில் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.
    • 18-ந் தேதி கொடியேற்றமும், 19-ந் தேதி காலை அலகு தரிசனம் ஆகியவை நடைபெறுகிறது.

    அவினாசி :

    அவினாசி காந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு 20-ந் தேதி குண்டம் திருவிழா நடைபெற உள்ளது. முன்னதாக 16-ந் தேதி அம்மன் சாட்டு விழா, 18-ந் தேதி கொடியேற்றமும், 19-ந் தேதி காலை அலகு தரிசனம் ஆகியவை நடைபெறுகிறது.

    20-ந் தேதி காலை 7 மணியளவில் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு ரிஷப வாகன காட்சியும், 21-ந் தேதி பரிவேட்டை தெப்பத்தேர் நிகழ்ச்சி, 22-ந் தேதி மஞ்சள் நீர் விழாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் அங்காளபரமேஸ்வரி அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.

    • பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
    • தொடர்ந்து மாவிளக்கு பூஜை, கூத்தாண்டவர் அழைப்பு மற்றும் கம்பம் பிடுங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஊராட்சி ஒன்றிய த்திற்கு உட்பட்ட கோசணம் மாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த 4-ந் தேதி பூச்சாட்டுகளுடன் தொடங்கி நடந்து வருகிறது.

    விழாவையொட்டி கூத்தாண்ட மாரியம்மன் காப்பு கட்டுதல் மற்றும் கம்பம் நடப்பட்டது. தொடர்ந்து கடந்த 10-ந் தேதி பச்சை பழம் அபிஷேகம் நடைபெற்றது.

    இதையொட்டி 11-ந் தேதி இரவு அம்மன் அழைப்பு மற்றும் குண்டம் திறப்பு விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று காலை குண்டம் விழா நடந்தது.

    இதில் நம்பியூர், கோசணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    தொடர்ந்து மாவிளக்கு பூஜை, கூத்தா ண்டவர் அழைப்பு மற்றும் கம்பம் பிடுங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக பக்தர்கள் அம்மனுக்கு எருமைக்கிடாய் பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. தொடர்ந்து இன்று மாகாளியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு மற்றும் சாமி ஊர்வலம் நடந்தது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை பொத்தப்பாளையம் மாகாளிஅம்மன் கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • அ.தி.மு.க மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் பங்கேற்றனர்.
    • வருகிற 9-ந் தேதி பண்டிகையை கொண்டாட உள்ளனர்.

    ஊட்டி,

    குன்னூர் அருகே ஜெகதளாவை தலைமையிடமாக கொண்ட ஆரூர் கிராமங்களில் வசிக்கும் படுகர் இன மக்கள் ெஹத்தையம்மன் பண்டிகையை ஆண்டுதோறும் ஜனவரி மாதம் கொண்டாடி வருகின்றனர். ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, ேபரட்டி, மல்லிெகாரை, மஞ்சுதளா, சின்ன பிக்கட்டி, பெரிய பிக்கட்டி ஆகிய 8 கிராம மக்கள் வருகிற 9-ந் தேதி பண்டிகையை கொண்டாட உள்ளனர். இதையொட்டி பக்தர்கள் 48 நாட்கள் விரதம் இருந்து, ஜெகதளா ஹெத்தையம்மன் கோவிலில் இருந்து தும்மனாடா, பேரகல் வழியாக கொதுமுடி கோவிலுக்கு பாரம்பரிய குடை மற்றும் செங்கோலுடன் நடைபயணம் மேற்கொண்டனர்.

    இதனை முன்னிட்டு நேற்று ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி காரக்கொரை மடிமனையில் குண்டம் திருவிழா நடைபெற்றது. இதில் அ.தி.மு.க மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத், அமப்பு செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன், ஒன்றிய செயலாளர் பேரட்டிராஜி மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • ழுக்குளி செல்லாண்டியம்மன் கோவில் குண்டம் திருவிழா இன்று காலை 8 மணி அளவில் நடைபெற்றது.
    • நாளை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமும், ரத உற்சவம் நடைபெற உள்ளது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அழுக்குளி செல்லாண்டியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 30-ந் தேதி காலை 6 மணிக்கு நந்தா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர் கடந்த 3-ந் தேதி காலை 6 மணிக்கு மஞ்சள் காப்பு அலங்காரமும், கிராம சாந்தியும் நடந்தது. 4-ந் தேதி கொடியேற்று விழாவும், இரவு அம்மை அழைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக குண்டம் திருவிழா இன்று காலை 8 மணி அளவில் நடைபெற்றது. முதலில் தலைமை பூசாரி செந்தில்குமார் குண்டம் இறங்கி தொடங்கி வைத்தார்.

    அதைத்தொடர்ந்து ஆண்கள், பெண்கள், கைக்குழந்தைகளுடன் தீ மிதித்தனர்.

    தொடர்ந்து நாளை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமும், ரத உற்சவம் நடைபெற உள்ளது. 7-ந் தேதி அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரமும், பரிவேட்டையும், தெப்பத்தேர் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    8-ந் தேதி மஞ்சள் நீர் உற்சவம், ஸ்ரீ அம்மன் சிறப்பு தரிசனம், மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    • பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலானது பல நூறு ஆண்டுகள் பழமையான கோவிலாகும்.
    • இந்த ஆணடு அதிகளவு பக்தர்கள் வருவர்கள் என்பதால் கூடுதல் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கோபி:

    கோபிசெட்டி பாளையத்தில் புகழ்பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலானது பல நூறு ஆண்டுகள் பழமையான கோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக குண்டம் திருவிழாவில் பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்த அனுமதிக்கப்படவில்லை.

    பூசாரிகள் மட்டுமே குண்டம் இறங்கிய நிலையில் இந்த ஆண்டு குண்டம் மற்றும் தேர்த்திருவிழாவிற்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது.

    இந்த ஆண்டு குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த டிசம்பர் மாதம் 29-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

    அதைத்தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக வரும் 9-ந் தேதி சந்தனகாப்பு அலங்காரமும், 11 ம் தேதி இரவு குண்டம் திறப்பு நிகழ்ச்சியும், 12-ந் தேதி அதிகாலை திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்துதல் நடைபெற உள்ளது.

    இந்த ஆணடு அதிகளவு பக்தர்கள் வருவர்கள் என்பதால் கூடுதல் பாதுகாப்பு, பக்தர்கள் அதிகமாக கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள், தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ், 24 மணி நேரம் மருத்துவ குழுவினர், திருவிழா நடைபெறும் ஒரு வார காலத்திற்கு 24 மணி நேரமும் அரசு பஸ் போக்குவரத்து வசதி, அடிப்படை வசதிகளான குடிநீர், தற்காலிக கழிப்பறை உள்ளிட்டவை குறித்த ஆலோசனை கூட்டம் கோபி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை, பொது சுகாதாரத்துறை, தீயணைப்புத்துறையினர், நகராட்சி மற்றும் உள்ளாட்சித்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளும், கோவில் விழாக்குழுவினர், பரம்பரை அறங்காவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த 14-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
    • இதனையடுத்து நாளை மாலை 4 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுத்தல்நிகழ்ச்சியும், நாளைமறுநாள் மலர் பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த 14-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 26-ந் தேதி சந்தன காப்பு அலங்காரமும், நேற்று பெண்கள் மாவிளக்கு எடுத்து வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    அதை தொடர்ந்து இன்று அதிகாலை 3 மணியளவில் அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது.

    பின்னர் காலை 8 மணி அளவில் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. முதன் முதலில் தலைமை பூசாரி ராஜ கோபால் குண்டம் இறங்கி தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து ஆண்கள், பெண்கள், கை குழந்தைகளுடன் குண்டம் மிதித்தனர்.

    இந்த குண்டம் திருவிழாவை–காண கோபி மொடச்சூர், வேட்டைக்காரன் கோவில், வடுகபாளையம், வடுகபாளையம்புதூர், நாகர்பாளையம், நாகதேவன் பாளையம், நாதிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதனையடுத்து நாளை மாலை 4 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுத்தல்நிகழ்ச்சியும், நாளைமறுநாள் மலர் பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து வரும் 1-ந் தேதி தெப்பத்தேர்உற்சவம், மஞ்சள் நீர் உற்சவம் நடைபெறுகிறது. 2-ந் தேதி மறுபூஜையும், 6-ந் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    மேலும் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கொளப்பலூர் பச்சை அம்மன் கோவிலும் குண்டம் திருவிழா இன்று காலை நடைபெற்றது.

    • பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டு சென்றனர்.
    • இதையடுத்து தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையத்தில் பிரசித்தி பெற்ற பெரிய, சின்ன மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் ஆண்டுதோறும் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டா–டப்படும்.

    அதன்படி நடப்பாண்டுக்கான விழா கடந்த மாதம் 29-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 26-ந் தேதி கோவில்களின் முன் கம்பம் நடப்பட்டு பூவோடு நிகழ்ச்சி நடந்தது.

    அதனைத் தொடர்ந்து தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து கம்பங்களுக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர்.

    மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. குண்டம் விழாவுக்காக நேற்று இரவு குண்டம் பற்ற வைக்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் விழா இன்று காலை நடந்தது.

    கோவிலின் தலைமை பூசாரி குண்டம் இறங்கினார். அதைத்தொடர்ந்து காப்பு கட்டி விரதம் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டு சென்றனர்.

    விழாவையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் அம்மனை வழிபட்டு சென்றனர். விழாவை–யொட்டி கருங்கல்பாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. நாளை கோவில் கரகம் எடுத்தலும், 13-ந் தேதி கோவில் முன் பொங்கல் வைத்தலும், மாவிளக்கு மாற்றுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    பின்னர் 14-ந் தேதி கம்பம் பிடுங்கும் விழாவும், 15-ந் தேதி மஞ்சள் நீராட்டு, அம்மன் வீதி உலாவுடன் விழா நிறைவு பெறுகிறது.

    • கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று கட்டுப்பாடு காரணமாக குண்டம் திருவிழா நடைபெறவில்லை.
    • இந்த ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழா விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    சிறுமுகை:

    கோவை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோவில்.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று குண்டம் இறங்குவார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று கட்டுப்பாடு காரணமாக குண்டம் திருவிழா நடைபெறவில்லை.

    இந்தநிலையில் இந்த ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழா விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    வருகிற 19-ந் தேதி இரவு 7 மணிக்கு பூச்சாட்டுடன் குண்டம் விழா தொடங்குகிறது. 22-ந் தேதி காலை 10 மணிக்கு லட்சார்ச்சனையும், 23-ந் தேதி இரவு 10 மணிக்கு கிராம சாந்தி நிகழ்ச்சியும் நடக்கிறது.

    24-ந் தேதி காலை 10 மணிக்கு கொடியேற்றம், சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. 25-ந் தேதி மாலை 5 மணிக்கு பொங்கல் வைத்து திருக்குண்டம் திறத்தல் நடக்கிறது.

    தொடர்ந்து 26-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு அம்மன் அழைப்பு, காலை 6 மணிக்கு திருக்குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. 27-ந் தேதி காலை 10 மணிக்கு முதல் மாவிளக்கு பூஜை நடக்கிறது. மாலை 6 மணிக்கு பூப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது.

    28-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு ஆடி அமாவாசை பூஜைகள், இரவு 7 மணிக்கு பரிேவட்டை, இரவு 8 மணிக்கு வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    29-ந் தேதி பகல் 12 மணிக்கு மகா அபிஷேகம், மாலை 3 மணிக்கு மஞ்சள் நீராடுதல், ஆகஸ்டு 1-ந் தேதி காலை 10 மணிக்கு 108 குத்துவிளக்கு பூஜை, 2-ந் தேதி மறுபூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வசந்தா, உதவி ஆணையர் கைலாசமூர்த்தி ஆகியோர் செய்து வருகிறார்கள்.  

    ×