search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தான்தோன்றியம்மன் கோவில்"

    • கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த 14-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
    • இதனையடுத்து நாளை மாலை 4 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுத்தல்நிகழ்ச்சியும், நாளைமறுநாள் மலர் பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த 14-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 26-ந் தேதி சந்தன காப்பு அலங்காரமும், நேற்று பெண்கள் மாவிளக்கு எடுத்து வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    அதை தொடர்ந்து இன்று அதிகாலை 3 மணியளவில் அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது.

    பின்னர் காலை 8 மணி அளவில் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. முதன் முதலில் தலைமை பூசாரி ராஜ கோபால் குண்டம் இறங்கி தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து ஆண்கள், பெண்கள், கை குழந்தைகளுடன் குண்டம் மிதித்தனர்.

    இந்த குண்டம் திருவிழாவை–காண கோபி மொடச்சூர், வேட்டைக்காரன் கோவில், வடுகபாளையம், வடுகபாளையம்புதூர், நாகர்பாளையம், நாகதேவன் பாளையம், நாதிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதனையடுத்து நாளை மாலை 4 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுத்தல்நிகழ்ச்சியும், நாளைமறுநாள் மலர் பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து வரும் 1-ந் தேதி தெப்பத்தேர்உற்சவம், மஞ்சள் நீர் உற்சவம் நடைபெறுகிறது. 2-ந் தேதி மறுபூஜையும், 6-ந் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    மேலும் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கொளப்பலூர் பச்சை அம்மன் கோவிலும் குண்டம் திருவிழா இன்று காலை நடைபெற்றது.

    • கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் தான்தோன்றி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் நடக்கிறது.
    • இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் தான்தோன்றி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி கிராம சாந்தி பூஜையுடன் விழா தொடங்கியது.

    இதை தொடர்ந்து கணபதி பூஜை நடந்தது. இதையடுத்து நேற்று பவானி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

    விழாவையொட்டி இன்று (புதன்கிழமை) யாக சாலை தொடக்க நிகழ்ச்சி நடந்தது. நாளை (வியாழக்கிழமை) 2-ம் கால யாக பூஜை, சுவாமிகளுக்கு அஷ்ட பந்தன மருந்து சான்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து கலச ங்கள் யாக சாலையில் இருந்து புறப்படுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து பக்தர்க ளுக்கு அன்னதானம் வழங்க ப்படுகிறது.

    அன்று காலை 10 மணிக்கு மகா அபிஷே கமும், கோதரிசனமும், தச தரிசனமும், மகாதீப ஆராதனையும் நடைபெற உள்ளது. மாலை 6 மணிக்கு தான்தோன்றியம்மன் உற்சவர் திருவீதி உலா நடை பெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    ×