search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Grievance day meeting"

    • காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் வளாக அறை எண் 20-ல் நடை பெறவுள்ளது .
    • நுண்ணீர் பாசனம் அமைக்க தேவையான தகவல்கள் வழங்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் 26.4.2023 அன்று மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் வளாக அறை எண் 20 ல் விவசாயிகள் குறை தீர்க்கும்நாள் கூட்டம் நடை பெறவுள்ளது .கூட்டத்தில் முதலாவதாக விவசாயிகளின் கோரிக்கைக்கான மனுக்கள் கலெக்டரிடம் வழங்கிடவும், பின்னர் பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்களில்ஒரு சங்கத்திற்கு ஒருவர் வீதம், தங்களது கோரிக்கைகளை தொகுத்து கலெக்டரிடம் நேரடியாக தெரிவித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    மேலும் விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைத்திட விவசாயிகளுக்கு ஏதுவாக வேளாண்மை அலுவலர், தோட்டக்கலை அலுவலர் மற்றும் வேளாண் பொறியியல் துறைஅலுவலர்களை கொண்டு வேளாண் உதவி மையம் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள்கூட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    வேளாண் உதவி மையத்தின் மூலம் விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைக்க தேவையான தகவல்கள் வழங்கப்படும். தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீர்பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் (MIMIS PORTAL) பதிவு செய்து கொள்ளவும், வேளாண்- உழவர் நலத்துறை மற்றும் வேளாண் சார்ந்த துறைகளால் அமைக்கப்படவுள்ள கருத்துக்காட்சியிலும் கலந்து கொண்டு விவசாயிகள் பயன்பெறுமாறு கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.   

    இந்த கூட்டத்தில் விவசாயிய, விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து மனு அளித்து தீர்வுகாணலாம்.

    தேனி:

    பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக வருகிற 21-ந்தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும்கூட்டம் நடைபெற உள்ளது.

    மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் விவசாயிய, விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து மனு அளித்து தீர்வுகாணலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது

    • காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் வளாக அறை எண்: 20 ல் நடைபெறவுள்ளது.
    • நுண்ணீர் பாசனம் அமைக்க தேவையான தகவல்கள் வழங்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில்வருகிற 30-ந்தேதி மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் வளாக அறை எண்: 20 ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் முதலாவதாக விவசாயிகளின் கோரிக்கைக்கான மனுக்கள் கலெக்டரிடம் வழங்கிடவும், பின்னர் பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்களில் ஒரு சங்கத்திற்கு ஒருவர் வீதம், தங்களது கோரிக்கைகளை தொகுத்து கலெக்டரிடம் நேரடியாக தெரிவித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    மேலும், விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைத்திட விவசாயிகளுக்கு ஏதுவாக வேளாண்மை அலுவலர், தோட்டக்கலை அலுவலர் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலர்களைக் கொண்டு வேளாண் உதவி மையம் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. வேளாண் உதவி மையத்தின் மூலம் விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைக்க தேவையான தகவல்கள் வழங்கப்படும். தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் பதிவு செய்து கொள்ளவும், வேளாண் நலத்துறை மற்றும் வேளாண் சார்ந்த துறைகளால் அமைக்கப்படவுள்ள கருத்துக்காட்சியிலும் கலந்து கொண்டு விவசாயிகள் பயன் பெறலாம் என கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • பிற்பகல் 3மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தலைமையில் நடைபெறவுள்ளது.
    • கோரிக்கைகளை விண்ணப்பம் வாயிலாக இரட்டைப் பிரதிகளில் நேரில் சமர்ப்பித்து பயனடையலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர் மற்றும்படையில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவரைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 17-3-2023 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள்கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது.

    எனவே திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் ,படையில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவரைச் சார்ந்தோர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை விண்ணப்பம் வாயிலாக இரட்டைப் பிரதிகளில் நேரில் சமர்ப்பித்து பயனடையலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். 

    • நெல்லை மின்பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்சார வாரியம் சார்ந்த குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது.
    • 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நெல்லை நகர் புறகோட்ட அலுவலகத்திலும் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் நடத்தப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதவாது:-

    நெல்லை மின்பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்சார வாரியம் சார்ந்த குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது.

    அதன்படி வருகிற 7-ந் தேதி (செவ்வாய்கிழமை) வள்ளியூர் கோட்ட அலுவலகத்திலும், 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சங்கரன்கோவில் கோட்ட அலுவலகத்திலும், 14-ந் தேதி (செவ்வாய் கிழமை) நெல்லை கிராமப்புற கோட்ட அலுவலகத்திலும், 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நெல்லை நகர் புறகோட்ட அலுவலகத்திலும், 20-ந் தேதி (திங்கட்கிழமை) தென்காசி கோட்ட அலுவலகத்திலும், 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கடையநல்லூர் கோட்ட அலுவலகத்திலும், 28-ந் தேதி (செவ்வாய்கிழமை) கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகத்திலும் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் நடத்தப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக் கை எடுக்கப்படும்
    • காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

    தாராபுரம் :

    தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாராபுரம், மூலனூர்,குண்டடம்,அலங்கியம் உள்ளிட்ட காவல் நிலையம் சார்பில், மக்கள் குறைதீர்க்கும் மனு நாள் கூட்டம் தாராபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தனராசு முன்னிலையில் தாராபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் வெகு நாட்களாக தீர்க்க படாத பிரச்சினைகள், மனுதாரர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களை அழைத்து இருவரிடமும் சமரசம் செய்து வழக்கை உடனடியாக தீர்த்து வைக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் வசதிக்காக தாராபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.

    இதில் பாதிக்கப்பட்ட ரவிச்சந்திரன் என்பவர் கூறுகையில், எனது பூர்வீக சொத்தினை எனது 2 மனநலம்பாதிக்கப்பட்ட சகோதரர்கள் மருத்துவ செலவுக்கும் பராமரிப்பு செலவிற்கும் பயன்படுத்தி வருகிறேன். அதனை தி.மு.க.வை சேர்ந்த 2பேர் மோசடி செய்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். பணமும் கொடுக்காமல் பத்திரத்தையும் கொடுக்காமல் மிரட்டி வருகின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    கூட்டத்தில் மூலனூர் காவல் ஆய்வாளர் சாகுல் ஹமீது, தாராபுரம் காவல் ஆய்வாளர் மணிகண்டன், குண்டடம் காவல் ஆய்வாளர் முருகாச்சலம், அலங்கியம் காவல் துணை ஆய்வாளர் ஏசுதுரை, தாராபுரம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் செல்லம் தாராபுரம், குண்டடம்,மூலனூர், அலங்கியம் உள்ளிட்ட காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 18 பயனாளிகள் மாதாந்திர உதவித்தொகை பெற ஆணையினை கலெக்டர் வழங்கினார்.
    • உதவி ஆணையர் ரத்தினவேல் சமூக பாது காப்புத் திட்ட தனி துணை ஆட்சியர் ( சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் (பொறுப்பு) மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளி களுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 275 மனுக்கள் பெறப்பட்டது.

    இந்த மனுக்களில் தகுதி யுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) மணிவண்ணன் அறிவுறுத்தி னார்.

    இந்த கூட்டத்தில் வருவாய்த்துறையின் சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சிங்கம்புணரி வட்டத்தைச் சார்ந்த 18 பயனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் மாதாந்திர உதவித்தொகை பெறுவ தற்கான ஆணைகளையும் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் உதவி ஆணையர் (கலால்) ரத்தினவேல் சமூக பாது காப்புத் திட்ட தனி துணை ஆட்சியர் (பொறுப்பு) சாந்தி உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • இரட்டைமடி, சுருக்குமடி மீன்பிடிப்புகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.
    • கலெக்டர். ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் மீனவர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர். ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் மீனவர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

    ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் பிரச்சினைகளை மனுக்கள் மூலம் மற்றும் வாய்மொழியாகவும் பதிவு செய்தனர். அவர்களுக்கு தீர்வுகள் அளிக்கப்பட்டது.அப்போது கலெக்டர் கூறியதாவது:-

    கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை வழங்கும் முறை எளிதாக்கப்பட்டு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமான இரட்டைமடி மற்றும் சுருக்குமடி மீன்பிடிப்புகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    சேதமடைந்த படகு களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை மிக விரைவில் வழங்க அறிவுறுத்தப்படும். ரோந்து நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு கடல்சார் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்ட விதிமுறைகளை மீறி மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது இந்த ஆண்டு மட்டும் சுமார் 420-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

    மேலும் ரூ. 80 லட்சத்துக்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடலுக்கு செல்லும் மீனவர்கள் பயன்படுத்தும் வகையில் சுகாதார கழிப்பறைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். நீடித்த நிலையான மீன் பிடிப்பை ஏற்படுத்த மீனவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன், ராமேசுவரம் போலீஸ் துணை சூப்பிரண்டு உமாமகேஸ்வரி, மீன்வளத்துறை உதவி இயக்குநர்கள் அப்துல் காதர் ஜெய்லானி, கோபிநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூரில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 21-ந்தேதி நடக்கிறது.
    • இதில் விவசாயிகள் கலந்து கொள்வதுடன் விவசாயம் சம்பந்தப்பட்ட பொதுவான கோரிக்கைகளை வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்களில் வருகிற 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெறும். இதில் விவசாயிகள் கலந்து கொள்வதுடன் விவசாயம் சம்பந்தப்பட்ட பொதுவான கோரிக்கைகளை வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் காலை 10.30 மணி அளவில் நடைபெறுகிறது.
    • வேளாண் - உழவா் நலத் துறை சாா்பில் அமைக்கப்படவுள்ள கருத்துக் காட்சியிலும் பங்கேற்று பயனடையலாம்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் வருகிற 23-ந்தேதி(வியாழக்கிழமை) நடைபெறுகிறது.இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்ட விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருகிற 23-ந்தேதி( வியாழக்கிழமை) காலை 10.30 மணி அளவில் நடைபெறுகிறது.

    கூட்டத்தில் அனைத்து துறை அலுவலா்கள் பங்கேற்கவுள்ளனா். ஆகவே, விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாக சமா்ப்பிக்கலாம். இதைத்தொடா்ந்து, விவசாயிகள் சங்கங்களில் இருந்து சங்கத்துக்கு ஒருவா் கோரிக்கைகளை தொகுத்து மாவட்ட கலெக்டரிடம் நேரடியாகத் தெரிவிக்கலாம்.

    மேலும் விவசாயிகள் நுண்ணீா் பாசனம் அமைத்திட ஏதுவாக வேளாண்மை அலுவலா், தோட்டக்கலை அலுவலா் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலா்களைக் கொண்டு வேளாண் உதவி மையமும் அமைக்கப்படும். ஆகவே, தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீா் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் பதிவு செய்து கொள்ளவும், வேளாண் - உழவா் நலத் துறை சாா்பில் அமைக்கப்படவுள்ள கருத்துக் காட்சியிலும் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வருகிற 30-ந் தேதி நடக்கிறது
    • ராணிப்பேட்டை கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வருகிற 30-ந்தேதி திங்கட்கிழமை அன்று மாலை 3 மணியளவில் ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில், ராணிப்பேட்டை, பாரதி நகரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளார்கள்.

    எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் களப்பிரச்சினைகளை களைத்திட இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பொது பிரச்சினைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்சினைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவித்திடுமாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

    • பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் சங்கங்களில் ஒரு சங்கத்துக்கு ஒருவா் வீதம் கோரிக்கைகளை தொகுத்து மாவட்ட கலெக்டரிடம் நேரடியாகத் தெரிவிக்கலாம்.
    • ளாண் உதவி மையத்தின் மூலம் விவசாயிகள் நுண்ணீா்ப் பாசனம் அமைக்கத் தேவையான தகவல்கள் வழங்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திரக் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வருகிற 27-ந்தேதி நடைபெறுகிறது.

    இது குறித்து திருப்பூா் மாவட்டகலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 27-ந்தேதி( வெள்ளிக்கிழமை )காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது.

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அனைத்து துறை அலுவலா்கள், விவசாயிகள் பங்கேற்கலாம். இந்த முகாமில் பங்கேற்கும் விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கிய பின்னா் பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் சங்கங்களில் ஒரு சங்கத்துக்கு ஒருவா் வீதம் கோரிக்கைகளை தொகுத்து மாவட்ட கலெக்டரிடம் நேரடியாகத் தெரிவிக்கலாம்.

    மேலும், விவசாயிகள் நுண்ணீா்ப் பாசனம் அமைத்திட ஏதுவாக வேளாண்மை அலுவலா், தோட்டக்கலை அலுவலா் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலவலா்களைக் கொண்டு வேளாண் உதவி மையமும் இக்கூட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    வேளாண் உதவி மையத்தின் மூலம் விவசாயிகள் நுண்ணீா்ப் பாசனம் அமைக்கத் தேவையான தகவல்கள் வழங்கப்படும். வேளாண்- உழவா் நலத் துறை மற்றும் வேளாண் சாா்ந்த துறைகளால் அமைக்கப்படவுள்ள கருத்துக் காட்சியிலும் விவசாயிகள் பங்கேற்று பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ×